மனப்பித்து

ஒரு வகை மன கோளாறு


பிளவுபட்ட மனநோய் (Schizophrenia) என்பது கிரேக்க வேர்களான ஸ்கிஜெயின் ,(σχίζειν, "பிளப்பது") மற்றும் ஃப்ரென், ஃப்ரென்- (φρήν, φρεν-; "மனம்") ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஸ்கிசோஃப்ரினியா மெய்யான புறவுலகை உணர்ந்தறிவது ஒலிப்பு: /ˌskɪtsɵˈfrɛniə/ அல்லது skɪtsɵˈfriːniə அதை எடுத்துச் சொல்வது ஆகியவற்றில் ஏற்படும் பிறழ்வு மன நோய்க்கான உளவியல் நோய் கண்டறிதலாகும்.

பிளவுபட்ட மனநோய்
Schizophrenia
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉளநோய் மருத்துவம், clinical psychology
ஐ.சி.டி.-10F20.
ஐ.சி.டி.-9295
ம.இ.மெ.ம181500
நோய்களின் தரவுத்தளம்11890
மெரிசின்பிளசு000928
ஈமெடிசின்med/2072 emerg/520
பேசியண்ட் ஐ.இமனப்பித்து
ம.பா.தF03.700.750

உணர்ந்தறிவதில் உண்டாகும் பிறழ்வானது, பார்வை, கேட்கும் திறன், சுவை, நுகர்தல் மற்றும் தொடு உணர்ச்சி ஆகிய ஐந்து புலன்களையும் பாதிக்கலாம். ஆனால், பொதுவாக இது ஒலி கேட்பது போன்ற மனப்பிரமைகள், திரிபுணர்வுப் பிணி (paranoid), பயங்கரமான மருட்சி (delusion) அல்லது ஒழுங்கின்மையான பேச்சு மற்றும் சிந்தனை இவற்றுடன் குறிப்பிடும்படியான சமூக மற்றும் பணி நிமித்தமான செயல்திறன் திரிதல் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது. இதன் அறிகுறிகள் பொதுவாக இளம் வயதில்[1] உருவாகி 0.4-0.6%[2][3] வரையிலான மக்கள் தொகையைப் பாதிக்கிறது.

இதில் நோய் கண்டறிதல் என்பது நோயாளியே தமது அனுபவங்களைக் கூறுவதையும், மற்றவர்கள் அவரிடம் காணப்பட்ட நடத்தையாகக் குறிப்பிடுவதையும் அடிப்படையாகக் கொள்கிறது.

தற்போது ஸ்கிசோஃப்ரினியா நோய்க்கான ஆய்வுக் கூட பரிசோதனைகள் ஏதும் இல்லை.[4]

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், மரபியல், ஆரம்ப காலச் சூழல், உயிர்நரம்பியல், உளவியல் மற்றும் சமூக இயக்க முறைமைகள் ஆகியவை இதற்கான முக்கிய பங்களிப்புக் காரணிகளாக அறியப்பட்டுள்ளன; சில பொழுதுபோக்கு மற்றும் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் இதற்குக் காரணமாவதாகவோ அல்லது இதன் அறிகுறிகளை மோசமாக்குவதாகவோ காணப்படுகின்றன. தற்போது உளப்பிணி பற்றிய ஆராய்ச்சியானது, இதில் உயிர் நரம்பியலின் பங்கின் மேல் கவனம் செலுத்துவதாக உள்ளது; ஆயினும், தனிப்பட்டதாக ஒற்றைக் காரணம் ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. இதற்கான அறிகுறிகள் பல்வேறு சேர்க்கைகளில் காணப்படும் சாத்தியத்தால், இது ஒரு கோளாறுதானா அல்லது சிண்ட்ரோம் எனும் பல கோளாறுகளின் ஒத்திசை நோய்க்குறித் தொகுப்பா என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஸ்கிசோஃப்ரினியா என்ற பெயர் முதன் முதலில் யூஜென் புளூலர் என்பவரால் தரப்பட்டது

இக்காரணத்தினால், யூஜென் புளுலர் இந்த நோய்க்கு தி ஸ்கிசோஃப்ரீனியாஸ் என்று (பன்மையில்) பெயர் சூட்டினார். இந்தப் பெயர் வரலாறு இருந்தாலும், ஸ்கிசோஃப்ரினியாவானது, முன்னர் பன்முக குணாதிசய நோய் (multiple personality disorder) அல்லது உடைபடு குணத்தன்மை (split personality or disassociative identity disorder) போன்றதல்ல. அதனுடன் இது தவறுதலாக குழப்பிக் கொள்ளப்படுகிறது.[5]

ஸ்கிசோஃப்ரினிக் நோயாளிகளில், அவர்கள் மூளையில் மெசோனிம்பிக் பாதையில் டோபமைன் அதிக அளவில் சுரப்பது என்பது தொடர்ச்சியாகக் காணப்பட்டுள்ளது.

இதற்கு முதன்மையான மருத்துவமாக உளப்பிணி எதிர் மருத்துவம் (anti psychotic) அளிக்கப்படுகிறது. இது டோபமைன் சுரத்தலை அடக்குவதன் மூலம் வேலை செய்கிறது. ஆன்டிசைகோடிக் மருந்துகள் அவை பயன்படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில் மிக குறைந்த அளவே அளிக்கப்பட்டு வந்தன.

மனவியல் சிகிச்சை மற்றும் தொழில் மற்றும் சமூக மறுவாழ்வு சீரமைப்பு ஆகியவையும் முக்கியமானவை. மிகவும் தீவிரமான நோயாளிகளில்- அதாவது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து நேரும் சாத்தியமிருந்தால்- அவர்களை பலவந்தமாக மருத்துவ மனையில் சேர்ப்பது அவசியமாகலாம்; இருப்பினும், இவ்வாறு மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதும், அங்கே தங்கியிருக்கும் கால அளவும் தற்போது குறைந்து வருகிறது.[6]

இந்த நோய் முக்கியமாக புரிதிறனை பாதிப்பதாக எண்ணப்பட்டது. ஆனால், இது நடத்தை மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றிலும் நீண்ட காலத்திற்கான பிரச்சினைகளை உருவாக்குவதில் பங்களிக்கிறது. ஸ்கிசோஃப்ரினியா கொண்டவர்கள், பெரும் அளவில் மனத்தளர்ச்சி, பதட்ட நோய் உள்ளிட்ட, இரு மன நோய்கள் ஒரே சமயத்தில் இருக்கும் நிலையையும் (comorbid) கொண்டிருப்பார்கள். வாழ்நாள் முழுதும் பொருளைத் தவறாகப் பயன்படுத்தும் substance abuse என்பது 40% அளவில் இருக்கிறது.[7]

நீண்ட காலத்திற்கு வேலையின்றி இருப்பது, வறுமை மற்றும் வீடில்லாமல் இருப்பது ஆகிய சமூகப் பிரச்சினைகளும் பொதுவானவையாக உள்ளன.

மேலும், இந்த நோய் உள்ளவர்களின் சராசரி ஆயுட்கால அளவு எதிர்பார்ப்பு என்பது நோயற்றவர்களை விட 10 முதல் 12 வருடங்கள் குறைவாகவே உள்ளது. இதன் காரணம், அதிகரிக்கும் உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளும், அதிக அளவிலான தற்கொலை விகிதமுமாகும்.[8]

குறிகளும் அறிகுறிகளும்

ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்பட்ட ஒருவர் ஒலி கேட்பது போன்ற மனப்பிரமைகள், மருட்சி மற்றும் ஒழுங்கற்ற மற்றும் அசாதாரணமான சிந்தனை மற்றும் பேச்சு ஆகியவற்றை வெளிப்படுத்தலாம்; இது சிந்தனை செல்லும் அலைவரிசை மற்றும் கருத்து வெளிப்படும் விதம் தொடங்கி, தீவிரமான நோயாளிகளில், பொருளுடன் இணைத்துக் கொள்ளப்பட கடினமான வாசகங்களுமாக, புரிந்து கொள்ள முடியாததுமான வேர்ட் சாலட் என்னும் வகையிலும் வெளிப்படலாம்.

சமுதாயத்தால் தனிமைப்படுத்தப்படுவது என்பது பல்வேறு காரணங்களினால் நிகழ்கிறது. பரோனியாவின் அறிகுறிகளான, மருட்சி மற்றும் மனப் பிரமைகள் மற்றும் அவோலிஷன் நோயின் (வெறுப்பு அல்லது செயலூக்கம் இன்றி இருப்பது) எதிர்மறை அறிகுறிகள் ஆகியவற்றுடன் தொடர்பு படுத்தப்படுவதைப் போல. சமூகத்தைப் புரிந்து கொள்ளும் திறன் பாதிக்கப்படுவது என்பது ஸ்கிசோஃப்ரினியாவுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. அவ்வளவாக வழக்கில் இல்லாத ஒரு துணை வ்கையில், நோய்க்கு ஆளானவர், பெரும்பாலும் பேசாமலேயோ, அல்லது நடமாட்டம் இல்லாமலேயோ, பயங்கரமான நிலைகளிலோ அல்லது நோக்கம் எதுவுமற்ற கிளர்ச்சியையோ வெளிப்படுத்தலாம்; இவை அனைத்தும் கேடடோனியா என்பதன் குறியீடுகளாகும். ஸ்கிசோஃப்ரினியா நோயைக் கண்டறிவதற்கு ஒரு குறிப்பிட்ட அறிகுறி என்று ஒன்றும் இல்லை; மருத்துவ மற்றும் உளவியல் நிலைகளில் அனைத்து அறிகுறிகளுமே தென்படலாம்.[4] உளப்பிணிக்கான தற்போதைய வகைப்படுத்துதல் கூற்றின்படி, அமைதி குலைந்த செயல்பாடு காணப்பட்ட ஒரு ஆறு மாத கால கட்டத்தில் குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்காவது அறிகுறிகள் காணப்பட்டிருக்க வேண்டும். ஸ்கிசோஃப்ரினியா-போன்ற ஒரு குறைவான கால கட்டத்திற்கான உளப்பிணி கிசோஃப்ரினிஃபார்ம் நோய் என்றழைக்கப்படுகிறது.[4]

ஸ்கிசோஃப்ரினியா நோய் தொடங்குவதற்கான உச்ச காலகட்டம், பதின்வயதின் பிற்பகுதியும், இளமைப் பருவத்தின்வாலிப வயதின் முற்பகுதியுமாகும்.

ஸ்கிசோஃப்ரினியா நோய் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ள ஆண்களில் 40 சதவிகிதத்தினர் மற்றும் பெண்களில் 23 சதவிகிதத்தினர் இந்த நிலையை 19 வயதுக்கு முன்பே அடைந்திருந்தனர்[9]. இது இளைஞர்களின் சமூக வாழ்க்கை மற்றும் தொழில் துறையில் மிகவும் சிக்கலான கால கட்டமாகும் மற்றும் அவற்றிற்கு மிகுந்த அளவில் இடையூறு நேரலாம். ஸ்கிசோஃப்ரினியாவின் விளைவைக் குறைப்பதற்காக, ப்ரோட்ரோமல் (நோய்-விளையுமுன்பான காலகட்டம்) என்னும் நோயின் காலகட்டத்தை ஆய்ந்தறிவதில் மிகப் பெரும் அளவில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 30 மாதங்கள் அல்லது அதற்கும் மேற்பட்டு இருக்கும்[10] அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து ஸ்கிசோஃப்ரினியாவை கொண்டிருப்பவர்கள் குறிப்பிட்டுக் கூறமுடியாத அறிகுறிகளாக, சமூகத்திலிருந்து விலகியிருத்தல், எரிச்சல் அடைதல், டிஸ்ஃபோரியா எனப்படும் அமைதியற்ற நிலை ஆகியவற்றை ப்ரோட்ரோமல் காலகட்டத்தில்[11] கொண்டிருக்கலாம்; மற்றும் ஸ்கிசோஃப்ரினியா வெளிப்படுவதற்கு முன்பாக நிலையற்ற அல்லது தானாகவே மறைந்து விடும் சைகோடிக் அறிகுறிகளையும் இந்த ப்ரோட்ரோமல் காலகட்டத்தில் கொண்டிருக்கலாம்.[12]

ஸ்கினெய்டெரியன் வகைப்படுத்துதல்

கர்ட் ஸ்கினெய்டர் (1887–1967) என்னும் உளவியல் நிபுணர் ஸ்கிசோஃப்ரினியாவை மற்ற உளப்பிணி நோய்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அறிகுறிகளாகத் தாம் நினைத்தவற்றைப் பட்டியலிட்டார்.இவை முதல் அடுக்கு அறிகுறிகள் அல்லது ஸ்கினெய்டரின் முதல் அடுக்கு அறிகுறிகள் என்றழைக்கப்படுகின்றன. இவை வெளிச் சக்தி ஒன்றால் கட்டுப்படுத்தப்படுவதைப் போன்ற மனப் பிரமை- அதாவது எண்ணங்கள் திணிக்கப்படுவதைப் போன்ற அல்லது ஒருவரது சுயமான மனதிலிருந்து விலக்கப்படுவதைப் போன்ற நம்பிக்கை, ஒருவரது எண்ணங்கள் மற்றவருக்கு அறிவிக்கப்படுகிறது என்ற நம்பிக்கை, ஒருவரது எண்ணங்கள் மற்றும் செயல்கள் பற்றி விமர்சிக்கும் பிரமைக் குரல்களைக் கேட்பது அல்லது மற்ற பிரமைக் குரல்களுடன் பேசுவது போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளன.[13] தற்போதைய நோய் கண்டறியும் முறைமைக்கு இது மிகுந்த அளவில் பங்களித்திருந்தாலும், இந்த முதல் அடுக்கு அறிகுறிகளின் வரையறுப்பு என்பது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட நோய் கண்டறியும் ஆய்வுகளின் மறு ஆய்வு, இந்த ஆய்வுகள் ஸ்கினெய்டரின் கோரிக்கைகளை ஏற்கவுமில்லை, மறுக்கவுமில்லை என்று கண்டறிந்து, வருங்காலத்தில் நோய் கண்டறியும் முயற்சிகளில் இந்த முதல் அடுக்கு அறிகுறிகள் அழுத்தம் கொடுக்கப் பெறாமல் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது.[14]

நேர்மறை மற்றும் எதிர்மறை அறிகுறிகள்

பெரும்பான்மையான நேரங்களில், நேர்மறை மற்றும் எதிர்மறை (அல்லது போதுமான அளவில்லாத) அறிகுறிகளால், ஸ்கிசோஃப்ரினியா விளக்கப்படுகிறது.[15] நேர்மறை அறிகுறிகள் என்னும் சொல், பெரும்பான்மையான தனி நபர்கள் சாதாரணமாக அனுபவிக்காத அறிகுறிகளைக் குறிப்பிடுகிறது. இவை திரிபுணர்வுகள், ஒலிப் பிரமைகள், ஒழுங்கற்ற சிந்தனை ஆகியவற்றை உள்ளடக்கும் உளப்பிணியின் வெளிப்பாட்டைச் சுட்டிக் காட்டுபவையாக கருதப்படுகின்றன.எதிர்மறை அறிகுறிகள் பொதுவாக, சாதாரணமாக இருக்க வேண்டிய திறன்களும் ஆற்றல்களும் இல்லாமல் இருப்பதையோ அல்லது இழந்து விடப்பட்டிருப்பதையோ குறிப்பதால் அவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன. இவை, தட்டையான அல்லது மழுங்கிய பாதிப்பு கொண்ட உணர்ச்சிகள், பேச்சுத் திறன் மிகக் குறைவாக இருக்கும் அலோஜியா, மகிழ்ச்சியை அனுபவிக்க இயலாத அனஹெடோனியா, உறவுகளை மேற்கொள்ளும் ஆவல் குறைந்த சோஷியாலிடி மற்றும் செயலூக்கமற்ற அவோலிஷன் ஆகிய நிலைகளை உட்கொண்டுள்ளன. இந்த எதிர்மறை அறிகுறிகள், உதாரணமாக செயல்திறன் இழப்பு மற்றும் அடுத்தவருக்குப் பாரமாக இருப்பது போன்றவற்றினால் வாழ்க்கைத் தரம் குறைவதற்கு, நேர்மறை அறிகுறிகளை விட அதிகமான அளவில், பங்களிப்பதாக ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.[16]

அண்மைக்கால ஆராய்ச்சிகள், ஸ்கிசோஃப்ரினியா நோயாளிகளுக்கு உணர்ச்சிகள் மழுங்கிய பாதிப்பு காணப்பட்ட போதிலும், சாதாரணமான அல்லது அதிக அளவிலான உணர்ச்சி வெளிப்பாடும், குறிப்பாக மிகுந்த அழுத்தமான அல்லது எதிர்மறையான சம்பவங்களின்போது, இருப்பதாக சுட்டிக் காட்டுகின்றன.[17] மூன்றாவதான ஒரு அறிகுறிகள் வகை, பொதுவாக இயற்பிழன்ற நோய்க்குறித்தொகுதி (disorganization syndrome) என்றழைக்கப்படுகிறது. இது குளறுபடியான பேச்சு, சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மேலும் பல வகையான அறிகுறி வகைப்படுத்துதல்கள் இருப்பதற்கான ஆதாரம் உள்ளது.[18]

நோய் கண்டறியல்

அறிகுறிக் குறிப்புகளின் அடிப்படையிலேயே ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்படுகிறது. நரம்பியல் ஒத்திசைவுகள் போதுமான அளவு பயனுள்ள அளவுகோலாக இருப்பதில்லை.[19]ஒருவர் தாமாகவே தமது அனுபவங்களாகக் கூறுவதையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் ஆகியோர் அவரது நடத்தையில் காணப்பட்ட அசாதாரணத் தன்மைகளாகக் குறிப்பிடுவதையும் அடிப்படையாகக் கொண்டே நோய் கண்டறியப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஒரு உளவியல் நிபுணர், சமூக சேவகர், மருந்த உளவியல் நிபுணர் அல்லது மற்ற மன நல தொழில்முறை நிபுணர்கள் ஆகியோரால் ஒரு மருந்தக மதிப்பீடு செய்யப்படுகிறது. உளவியல் மதிப்பீடானது உளவியல் வரலாறு மற்றும் ஏதாவது ஒரு வகையிலான மன நிலை பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.[சான்று தேவை]

தரநிலைப்படுத்தப்பட்ட அளவுகோல்கள்

ஸ்கிசோஃப்ரினியா நோயைக் கண்டறியும் தரநிலைப்படுத்தப்பட்ட அளவுகோல்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுபவை அமெரிக்க உளவியற்சிகிச்சைக் கழகம் (American Psychiatric Association) மன நோய்களைக் கண்டறிவது மற்றும் புள்ளி விபரக் கையேடு, டிஎஸ்எம்-ஐவி-டிஆர் பதிப்பு மற்றும் உலக சுகாதார மையத்தின் நோய்கள் மற்றும் நோய் தொடர்பான பிரச்சினைகளின் சர்வதேச புள்ளி விபர வகைப்படுத்தல் , ஐசிடி-10 ஆகியவற்றிலிருந்தே பெறப்படுகின்றன.இரண்டாவதாகச் சொல்லப்பட்ட அளவுகோல் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உலகின் இதர நாடுகளிலும், தற்போது நிலவும் ஆராய்ச்சி ஆய்வுகளிலும் டிஎஸ்எம் அள்வுகோல் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இரண்டு முறைமைகளுக்கும் இடையில் நடைமுறையில் கருத்திசைவு அதிக அளவில் இருந்தாலும், ஐசிடி-10 அளவுகோல் ஸ்கினெய்டரின் முதல் அடுக்கு அறிகுறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.[20]

மன நோய்களைக் கண்டறிவது மற்றும் புள்ளி விபரக் கையேடு , (டிஎஸ்எம்-ஐவி-டிஆர்) நான்காவது பதிப்பின்படி, ஒருவர் ஸ்கிசோஃப்ரினியா நோய்க்கு உள்ளாகியிருக்கிறார் என்று கண்டறியப்படுவதற்கு மூன்று அளவுகோல்கள பூர்த்தி செய்ய வேண்டும்:[4]

  1. நோயின் பண்புருவாக்கும் அறிகுறிகள் : கீழ்க்காண்பவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவைகள் ஒரு மாதத்தில் அதிக (அல்லது சிகிச்சையினால் அறிகுறிகள் மறைந்திருந்தால், குறைந்த)கால அளவில் இருந்திருக்க வேண்டும்.
    • மருட்சிகள்
    • மனப் பிரமைகள்
    • முறையான சிந்தனையில் கோளாறு என்பதன் வெளிப்பாடான ஒழுங்கற்ற பேச்சு
    • மிகவும் அடிப்படையாக உள்ள ஒழுங்கற்ற நடத்தை (உதா:பொருந்தாத வகையில் உடை உடுத்துவது, அடிக்கடி அழுவது) அல்லது கேடடோனிக் நடத்தை.
    • எதிர்மறை அறிகுறிகள் - உணர்வு பதிலிறுப்பு குறைதல் அல்லது இல்லாதிருத்தல்(affective flattening) , பேச்சு குறைதல் அல்லது இல்லாதிருத்தல் (alogia) அல்லது செயலூக்கம் குறைதல் அல்லது இல்லாதிருத்தல் (avolition).
    • மருட்சிகள் பயங்கரமானவையாக கண்டறியப்பட்டாலோ அல்லது மனப்பிரமைகள் ஒருவரது நடத்தையை தொடர்ந்து விமர்சிக்கும் குரலைக் கேட்பதை உணர்வதாக இருந்தாலோ, அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குரல்கள் ஒன்றோடொன்று பேசிக் கொள்வதைப் போல உணர்ந்தாலோ, அத்தகைய அறிகுறி மட்டுமே மேற்கண்டதற்குப் போதுமானது.

ஒருவரின் தொடர்புத் திறனை மிகப் பெரும் அளவில் பாதிப்பதாக இருந்தால் மட்டுமே ஒழுங்கற்ற பேச்சு என்னும் அளவுகோல் பூர்த்தி செய்யப்படுவதாக கருதப்படும்.

  1. சமூக/பணி செயல் பிறழ்ச்சி: இடையூறு தொடங்கிய கால கட்டத்திலிருந்து ஒரு மிகப் பெரும் பகுதியில், பணி, மற்றவர்களுடனான உறவு முறைகள் அல்லது சுய கவனிப்பு ஆகிய முக்கியச் செயல்பாடுகள், நோய் தொடங்குவதற்கு முன்பிருந்ததை விடக் குறிப்பிடும் அளவு குறைந்திருத்தல் வேண்டும்.
  2. கால நீட்சி : இடையூற்றின் இடைவிடாத அறிகுறிகள் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு இருத்தல்.

இந்த ஆறு மாத காலம் என்பது குறைந்த பட்சம் ஒரு மாத (அல்லது, சிகிச்சையினால் அறிகுறிகள் மறைந்திருந்தால் அதற்குக் குறைவான) காலத்தை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

மன நிலை ஒழுங்கற்ற தன்மை அல்லது நேர்மறை மேம்பாட்டுக் கோளாறு (positve development disorder) ஆகியவற்றின் அறிகுறிகள் இருந்தாலோ, அல்லது அறிகுறிகள் ஒரு பொதுவான மருத்துவ நிலையின் நேரடி விளைவாகவோ அல்லது மருந்து அல்லது மருத்துவத்தை தவறாகப் பயன்படுத்துவதன் விளைவாகவோ இருந்தால், ஸ்கிசோஃப்ரினியா நோயைக் கண்டறிய இயலாது.

மற்ற நிலைகளுடன் குழப்பிக் கொள்ளுதல்

உளப் பிணி நோயின் அறிகுறிகள், இருமைமுனைமைக் கோளாறு (bipolar disorder),[21] எல்லைக் குண ஆளுமைக் கோளாறு (boderline personality disorder)[22], கிளர்ச்சி கொள்வது அல்லது மருந்தினால் தூண்டப்பட்ட உளப்பிணி மூலம் கிளர்ச்சி அடைதல் (schizoaffective disorder), மற்றும் இடையூடற்ற பிளவுபட்ட மனநோய் (Schizophreniform disorder) போன்ற வேறு பல மன நோய்களிலும் இருக்கலாம்.

கட்டுப்படுத்தவியலா பிளவுபட்ட மனநோய் (obsessive compulsive disorder – OCD) என்பதனைச் சுட்டிக் காட்டும் நிர்ப்பந்தமான நிலைகளை ஸ்கிசோஃப்ரினியாவுக்கே உரித்தான மருட்சியிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது கடினம் என்றாலும், சந்தர்ப்பத்தினால் மட்டுமே என்று கூற இயலாதபடி அதிக அளவுகளில், ஓசிடியானது ஸ்கிசோஃப்ரினியாவை மேலும் சிக்கலாக்குகிறது.[23]

அரிதான நிலைகளில், சைக்கோடிக் ஸ்கிசோஃப்ரினியா-போன்ற அறிகுறி[4] களைத் தோற்றுவிக்கக் கூடிய, வளர்சிதை இடையூறு (metabolic disturbance), ஊடுருவிய தொற்று (systemic infection), மேக நோய், எச்ஐவி தொற்று, வலிப்பு நோய், மூளைக் கட்டிகள் போன்ற மருத்துவ நோய்களை விலக்கி அறிவதற்கு ஒரு பொதுவான மருத்துவ மற்றும் நரம்பியல் பரிசோதனை தேவைப்படலாம்.

சித்தப்பிரமை (delirium) என்னும் நிலையை விலக்கி அறிவதும் அவசியமாகலாம். பார்வை பிரமைகள், திடீர் என்று வருவதும் மற்றும் நிலைமாறுவதுமாக இருக்கும் சுய உணர்வு அளவு ஆகியவை ஒரு மருத்துவம் தொடர்பான நோய் இருப்பதை அடிக்குறிப்பிட்டு உணர்த்துகின்றன. குறிப்பிடத்தக்க வகையில் மருத்துவ ரீதியாக சுட்டிக்காட்டப்பட்டாலோ அல்லது, உளப்பிணியெதிர் மருத்துவத்தின் எதிரிடைப் பின்விளைவுகள் இருந்தாலோ தவிர, நோய் மீள்வதன் பொருட்டு புலனாய்வு மீண்டும் செய்யப்படுவதில்லை.

ஸ்கிசோஃப்ரினியா என்பதன் வேர்ச்சொல் விளக்கம் கிரேக்க சொல்லான σχίζω = "நான் பிளக்கிறேன்" என்பதாக இருப்பினும், அது இரட்டை மனித இயல்பை குறிப்பது அல்ல .

துணை வகைகள்

நோய் கண்டறிதல் மற்றும் புள்ளிவிபரக்கையேடு (Diagnostic and Statistical Manual) ஸ்கிசோஃப்ரினியாவின் ஐந்து துணைவகைகளைச் சுட்டிக் காட்டுகிறது:

  • கருத்துத்திரிபு பிணி வகை: இதில் மருட்சிகளும், பிரமைகளும் இருக்கும், ஆனால் சிந்தனையில் கோளாறு, ஒழுங்கற்ற நடத்தை மற்றும் அஃபெக்டிவ் ஃபிளேட்டனிங் ஆகியவை இருக்காது. (DSM Code 295.3/ICD Code F20.0)
  • ஒழுங்கற்ற முறையில் அமைந்த வகை: இதில் சிந்தனைக் கோளாறு மற்றும் ஃப்ளாட் அஃபெக்ட் ஆகிய இரண்டும் இணைந்துள்ளன. (DSM Code 295.1/ICD Code F20.1)
  • உளநரம்பியல் நோய்க்குறித்தொகுதி வகை: இதில் சம்பந்தப்பட்ட நபர் கிட்டத்தட்ட அசைவற்றோ அல்லது கிளர்ச்சியுற்று நோக்கமில்லாத அசைவுகளை வெளிப்படுத்துபவராகவோ இருப்பார்.
  • வேறுபடுத்தப்படாத வகை: உளப்பிணி அறிகுறிகள் இருக்கும்; ஆனால், கருத்துத்திரிபு, ஒழுங்கற்ற அல்லது உளநரம்பியல் வகைகளுக்கான அளவுகோல் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டாதிருக்கும். (DSM Code 295.9/ICD Code F20.3)
  • தேங்கிய வகை: நேர்மறை அறிகுறிகள் குறைந்த அளவு தீவிரத்துடன் மட்டுமே காணப்படும். (DSM Code 295.6/ICD Code F20.5)

ஐசிடி-10 கூடுதலாக இரண்டு துணை வகைகளையும் வரையறுக்கிறது.

  • ஸ்கிசோஃப்ரினியாவுக்குப் பிந்தைய மனத் தளர்ச்சி : ஸ்கிசோஃப்ரினியா நோய்க்குப் பிறகான காலகட்டத்தில் உருவாகும் ஒரு மனத் தளர்வு நிகழ்வு- இதில் ஸ்கிசோஃப்ரினியாவுக்கான அறிகுறிகளில் சில இன்னும் தென்படலாம். (ICD Code F20.4)
  • எளிய ஸ்கிசோஃப்ரினியா : இதில் உளப்பிணி நிகழ்வுகளுக்கான வரலாறு ஏதும் இன்றி முக்கியமான எதிர்மறை அறிகுறிகள் உள்ளார்ந்தும், முன்னேறிச் செல்வனவாகவும் இருக்கும். (ICD Code F20.4)

சர்ச்சைகளும் ஆராய்ச்சி மேற்செல்லும் திசைகளும்

பெரும் அளவிலான உயிரியல்சார் உளவியல் என்பதன் ஒரு பகுதியாக ஸ்கிசோஃப்ரினியாவை ஒரு நோய் கண்டறியும் முறைமையாக கொள்வது உகந்ததா என்று பல உளவியல் நிபுணர்கள் விமர்சனம் செய்துள்ளனர்; இது அறிவியல் ரீதியாக செல்லுபடி ஆவது மற்றும் நோய் கண்டறிவதில் நம்பகத்தன்மை ஆகியவற்றில் குறைபாடுள்ளதாகவும் கூறுகின்றனர்.[24][25]2006வது வருடம் ஐக்கிய இராச்சியத்தில் நோயாளிகள் மற்றும் மன நல தொழில்முறை நிபுணர்களின் ஒரு குழு, ஸ்கிசோஃப்ரினியா பெயர் மாற்றக் கோரும் பிரசாரம் என்ற பெயரில் ஸ்க்சோஃப்ரினியாவை அதன் சுயமூலமல்லாத வேற்றியல்புகள் மற்றும் அதனுடன் தொடர்பாக்கபட்ட களங்கம் ஆகியவற்றின அடிப்படையில் நோய் கண்டறியும் முறைமையை நிராகரிக்கவும், ஒரு உயிரிய-உளவிய சமூகவியல் மாதிரிப்படிவ அமைப்பை கைக்கொள்ளவும் கோரி வாதிட்டனர்.இந்த செயல்பாட்டை ஐக்கிய இராச்சியத்தின் பிற உளவியல் நிபுணர்கள் எதிர்த்தனர். ஸ்கிசோஃப்ரினியா எனும் சொல், தாற்காலிக கருத்தாக்கமானாலும், பயன்பாடுள்ள ஒரு சொற்றொடர் என்று வாதிட்டனர்.[26][27]

டிஎஸ்எம்மில் பயன்படுத்தப்பட்ட ஸ்கிசோஃப்ரினியாவின் உள்ளார்ந்த வகையும் விமர்சனத்திற்குள்ளானது.[28]மற்ற உளவியல் நோய்களைப் போலவே, ஸ்கிசோஃப்ரினியாவுக்கான நோய் கண்டறியும் முறைமையும், ஒருவருக்கொருவர் வேறுபடும் தனிப்பட்ட பரிமாணங்களின் பேரில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், காரணம் இது சாதரணமானவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் என்று பிரித்துப் பார்க்கவியலாத ஒரு பரந்து பட்ட உருவெளிவடிவம் அல்லது தொடர்ச்சி கொண்டது என்று அவர்கள் கூறினர்.

பிளவுபட்ட மனநோய் பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சியுடன் இந்த அணுகு முறை ஒத்திசைவு கொண்டதாக உள்ளது. இதில் பொது மக்களிடையே அதிக அளவில், பெரும்பாலும் வேதனை அளிக்காத, மருட்சி சார்ந்த நம்பிக்கை கொண்ட உளவியல் நிகழ்வுகள் காணப்பட்டன.[29][30][31] இந்த கண்டுபிடிப்புடன் ஒத்திசைவதாக, மருட்சி பற்றி தற்போதிருக்கும் படைப்புக்களை ஆராய்ந்த எட்கர் ஜோன்ஸ் என்னும் உளவியல் நிபுணரும், மற்றும் டோனி டேவிட் மற்றும் நாசிர் கெமி என்னும் உளவியல் நிபுணர்களும், மருட்சி என்பதன் ஒத்திசைந்த மற்றும் முழுமையான ஒரு வரையறை பல நிகழ்வுகள் இல்லாதிருந்தமையைச் சுட்டிக் காட்டினர்; மருட்சி என்பது நிலையானதுமல்ல, பொய்யானதுமல்ல, மற்றும் அது கேள்விக்கு அப்பாற்பட்ட ஆதாரங்களைக் கொண்டதுமல்ல என்று கூறினர்.[32][33][34]

ஸ்கிசோஃப்ரினியா ஆராய்ச்சியில் மிகவும் முன்னணியில் உள்ளவரான நான்சி ஆட்ரெசென், தற்போதைய டிஎஸ்எம்-IV மற்றும் ஐசிடி-10 அளவுகோல்கள், நோய் கண்டறியும் முறைமையின் நம்பகத்தன்மைக்காக, அதன் செல்லத்தக்க தன்மையை கைவிட்டு விட்டதாக அவற்றை விமர்சித்துள்ளார். நோய் கண்டறியும் அளவுகோலில் உளப்பிணியின் மேல் அதிக அளவில் அழுத்தம் கொடுப்பது நோய் கண்டறியும் முறைமையின் நம்பகத்தன்மையை அதிகரித்தாலும், மேலும் வெளிப்பாடுகளில் அவை பெரும் அளவில் மாறுபாடுகளுக்கு உள்ளாவதால் மதிப்பீடு செய்யப்படுவதில் கடினமாக உணரப்படும், அடிப்படையான புரிதிறன் கோளாறுகளைப் புறக்கணித்து விடுவதாகவும் அவர் வாதிட்டார்.[35][36]

இந்த கருத்துக்கு மற்ற உளவியல் நிபுணர்களின் ஆதரவும் உள்ளது[37]. மிங்க் சுவாங் மற்றும் அவருடன் பணியாற்றுபவர்கள் உளப்பிணியின் அறிகுறிகள் என்பவை, ஸ்க்சோஃப்ரினியாவைச் சுட்டிக் காட்டும் ஒரு தனிப்பட்ட நோய்முதலியாக அல்லாது, ஸ்க்சோஃப்ரினியா உள்ளிட்ட, பல தரப்பட்ட மன நோய்களுக்கான பொதுவான, நிலை முடிவாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர். மேலும், டிஎஸ்எம்மின் செயல் விளக்கமே ஸ்கிசோஃப்ரினியாவின் "உண்மையான" கட்டமைப்பாக இருக்கும் என்பதற்கு ஆதாரம் மிகக் குறைவு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.[28] நரம்பியல்-உளவியலாளர் மைக்கேல் ஃபாஸ்டர் க்ரீன் இதற்கும் மேலும் சென்று, குறிப்பிட்ட நரம்பியல் தொடர்பான புரிதிறன் குறைவு இருப்பதானது, அறிகுறிகள் அடிப்படையில் கண்டறிபவை மாறுபட்ட ஃபெனோ வகைகள் கட்டமைக்கப்படுவதற்கு பயன்படலாம் என்று கூறினார். இந்தக் குறைபாடுகள், நினைவாற்றல், கவனம் செலுத்தும் திறன், செயலாக்கத் திறன் மற்றும் பிரச்சினையைத் தீர்க்கும் திறன் ஆகிய அடிப்படையான உளவியற் செயல்பாடுகள் குறைவது அல்லது பழுதடைவது ஆகிய வடிவங்களைக் கொள்கின்றன.[38][39]

ஸ்கிசோஃப்ரினியாவுக்கான அளவுகோலிலிருந்து அஃபெக்டிவ் தனிமங்களை, அவை அனைத்து மருந்தக அமைப்புக்களிலும் இருப்பதாக காணப்பட்டாலும், விலக்கி விடும் செயலும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.இவ்வாறு இது டிஎஸ்எம்மில் விலக்கப்பட்டதனால், 0}ஸ்கிசோஅஃபெக்டிவ் டிசார்டர்" என்னும் "சற்றே முறுக்கப்பட்ட" ஒரு தனிப்பட்ட நோய் வடிவம் விளைந்துள்ளது.[37]இதன் மிகக் குறைவான இணைமதிப்பிடு நம்பகத்தன்மை என்பதைச் சுட்டிக்காட்டி, சில உளவியல் நிபுணர்கள் ஸ்கிசோஅஃபெக்டிவ் டிசார்டர் என்பது ஒரு தனிப்பட்ட நோய் என்று கூறப்படுவதை எதிர்க்கிறார்கள்.[40][41] க்ரௌப்லியன் இருகூறுப் பிரிவு என்றறியப்படும் மன நிலை ஒழுங்குமுறை மாற்றங்களுக்கும் ஸ்கிசோஃப்ரினியாவுக்கும் உள்ள வேறுபாடுகளும் பரம்பரை நோயியலிலிருந்து கிடைக்கப்பெறும் தரவுகளினால் மறுதலிக்கப்படுகின்றன.[42]

காரணங்கள்

நினைவாற்றல் செயல்படுத்தப்படும் ஒரு பணியில் முன்புறக் கோளங்கள் எவ்வளவு குறைவாக இயக்கப்படுகிறதோ (சிவப்பு) அந்த அளவு அதிகமாக, ஸ்கிசோஃப்ரினியாவின் நரம்பியல் புரிதிறன் குறைபாடுகளுக்குத் தொடர்புடையதாகக் கருதப்படும், மூளையின் செல்திரள் பகுதியில் டோபமைன் என்பதன் அசாதாரண சுரப்பு (பச்சை) இருக்கும் என்று ஒரு[43] கூறுகிறது.

மரபணு மற்றும் சூழ்நிலை ஆகியவற்றின் தனி விளைவான பாதிப்புக்களை மதிப்பிடுவதில் நோய் கண்டறியும் முறைமையின் நம்பகத்தன்மை சில பிரச்சினைகளை உருவாக்குகிறது. உதாரணமாக, அறிகுறிகள் ஒன்றன் மேல் ஒன்றாக கவிந்திருப்பவையாகவும், ஒரளவு தீவிரமான இருமுனைமைக் கோளாறு, பெரும் அளவிலான மனத்தளர்ச்சி ஆகியவற்றின் அறிகுறிகளுடனும் காணப்படுகின்றன. கிடைக்கப் பெற்றுள்ள ஆதாரங்கள், மரபியல் மற்றும் சூழ்நிலைக் காரணி ஆகிய இரண்டுமே கூட்டாக செயல்பட்டு ஸ்கிசோஃப்ரினியாவை விளைவிக்கக் கூடுமென்று தெரிவிக்கின்றன.[44] ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறிதலில் மரபியல் ஒரு முக்கியப் பங்களிப்பதாகவும் ஆனால், அதன் துவக்கத்தை முக்கியமாகப் பாதிப்பவை சூழ்நிலைக் காரணிகள் மற்றும் அழுத்தக் காரணிகளே என்று ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.[45]

சில நபர்களிடம் இருக்கும், உயிரியல், உளவியல் அல்லது சூழ்நிலையின் அழுத்தக் காரணிகளால் வெளிப்பட்டுவிடக் கூடிய, ஒரு உள்ளார்ந்த பலவீன உருமாதிரி (Diasthesis or Stress-Diasthesis model) எனப்படுகிறது.[46]உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் அனைத்துமே முக்கியமானவைதாம் என்று கொள்ளும் கருத்து, "உயிரிய உளவிய சமூக உருமாதிரி" (biopsychosocial model) எனப்படுகிறது.

äďġĵĤ=== மரபு வழிப் பண்பியல் ===

ஸ்கிசோஃப்ரினியாவில் மரபுவழியாக்கம் என்பதைப் பற்றிய அனுமானம், மரபியல் மற்றும் சூழ்நிலைக் காரணிகளின் விளைவுகளைப் பிரிப்பதில் உள்ள சிரமங்களினால் மாறுபடுகிறது. இரட்டையர்கள் மீதான ஆய்வு மற்றும் சுவீகாரம் எடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் மீதான ஆய்வு ஆகியவை மரபு வழியாக்கம் பெரும் அளவில் காரணமாக இருப்பதாக சுட்டிக் காட்டுகின்றன.[47]

ஒரு சிக்கலான மரபுப்பெறுதலின் நிலையாக ஸ்கிசோஃப்ரினியா காணப்படுகிறது, இதில் பல்வேறு பெரிய அல்லது சிறிய மரபணுக்கள் ஆபத்தை அதிகரிப்பவையாக உள்ளன. இந்த நிலையால் பாதிக்கப்படும் ஒருவருக்கு, பல்வேறு மரபு சார்ந்த மற்றும் வேறு பல ஆபத்துக் காரணிகளும் இருக்க வேண்டியது அவசியம் என்றும் சிலர் கூறுகின்றனர்; ஆனாலும், இது இன்னும் தெளிவற்றதாகத்தான் உள்ளது.[48] அண்மைக் காலத்திய மரபியல் சார்ந்த பரந்த ஆராய்ச்சிகளில், ஸ்கிசோஃப்ரினியா மற்றும் இருமுனைமைக் கோளாறு ஆகிய இரண்டு நோய்களுக்குமான[49] மரபணுக்கள் பெரும்பாலும் தனியாக இருப்பினும், சில இந்த இரண்டு நோய்களுக்கும் பொதுவாக ஒன்றன் மேல் ஒன்று கவிந்தவையாக உள்ளன.

எம்ஓஎல் உளப்பிணி இயல் 14(9):865-73.</ref> நேரடியாக ஊடாடும் க்ரோமோசோம் பகுதியின் அதிகரித்த ஏற்புத்திறன்[50] காரணம் என்று தொடர்ச்சியான ஆதாரங்களை அளித்துள்ளன. மிகவும் அண்மையில் ஜிங்க் ஃபிங்கர் ப்ரோடின் 804ஏ.[51] மற்றும் குரோமோசாம் 6 ஹெச்எல்ஏ ரீஜன்[52] ஸ்கிசோஃப்ரினியாவும் காபி நம்பர் வேரியண்ட்ஸ் என்று அறியப்படும், மூளையின் வளர்ச்சி மற்றும் நரம்பு மணடலத்தில் குறிகளை அனுப்பும் மரபணுக்களில் அளவுக்கதிகமாக உருவாகும், மிகச் சிறிய டிஎன்ஏ அணுத் தொடர்களுடன் தொடர்புறுத்தப்பட்டுள்ளன.[53][54]

ஸ்கிசோஃப்ரினியாவில் இனவிருத்தி ஆற்றல் குறைபாடு உள்ளது என்பதைப் பற்றி சந்தேகத்திற்கிடமில்லை.மொத்தமான மக்கள் தொகையுடன் பார்க்கும்போது, பாதிக்கப்பட்ட தனி நபர்கள் மிகக் குறைவான அளவே குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்கள். இந்தக் குறைவான அளவானது ஆண்களில் 70% மற்றும் பெண்களில் 30% ஆக உள்ளது. ஸ்கிசோஃப்ரினியாவில் முக்கியமான மரபியல் ரீதியான வேடிக்கை என்னவென்றால், இந்த நோய் உயிரியல் ரீதியாக ஒரு பலவீனத்தைக் கொண்டிருக்கும்போது, அதன் அடிப்படையிலேயே அதை ஏன் பிரித்துணர முடிவதில்லை என்பதுதான். இந்த முக்கியமான பாதகத்தை ஈடு செய்வதற்கு, மிகப்பெரும் அளவிலும் மற்றும் அனைவருக்கும் பொருந்துவதுமான ஒரு சாதகம் இருத்தல் வேண்டும். இதுவரை ஒரு குறிப்பிட்ட சாதகம் அல்லது பாதகத்தை முன்வைத்த கருத்தாக்கங்கள் அனைத்துமே நிராகரிக்கப்பட்டுவிட்டன, அல்லது ஆதாரமற்றவையாக உள்ளன.[55][56]

மகப்பேறுக்கு முற்பட்ட காலம்

பின்னாட்களில் ஸ்கிசோஃப்ரினியாவிற்கான ஆபத்தை அதிகரிக்கும் அடிப்படையான காரணிகள், தொடக்கத்தில் நரம்பு மண்டல உருவாக்கம் நிகழும்போது ஒன்றமைந்து வருவதாகக் கருதப்பட்டன. ஒரு சுவாரசியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்பட்டவர்கள் பலர் (குறைந்த பட்சம் பூமியின் வட கோள த்தில்) குளிர் அல்லது வசந்த காலங்களில் பிறந்திருக்கிறார்கள் என்பதுதான்.[57]மகப்பேறுக்கு முந்தைய காலகட்டத்தில் ஏற்படும் தொற்றுக்களுக்கு வெளிப்படுவதினால், பிற்காலத்தில் ஸ்கிசோஃப்ரினியா நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது என்பதற்கு தற்போது ஆதாரங்கள் உள்ளன. இவை சிசு உருவாக்க ரத்தவியல் மற்றும் இந்த நோய் நிலை உருவாவதற்கான ஆபத்து ஆகியவற்றின் இடையே உள்ள தொடர்பைப் பற்றி அதிக ஆதாரங்களை அளிப்பதாக உள்ளது.[58]

சமூகம்

நகர்ப்புற சூழலில் வாழ்வதும் ஸ்கிசோஃப்ரினியாவுக்கான ஆபத்துக் காரணிகளில் ஒன்றாக தொடர்ந்து காணப்பட்டு வருகிறது.[59][60]வறுமை[61], சமூக ரீதியான பாதகச் சூழலுக்கு இடம் மாறிச் செல்வது மற்றும் இன அடிப்படையில் வேறுபடுத்தப்படுதல், குடும்ப முறையின் செயலிழப்பு, வேலையின்மை அல்லது வறுமையான குடியிருப்பு நிலைமைகள்[62] ஆகியவற்றை உள்ளடக்கிய சமூக அளவிலான பாதக சூழலும் ஒரு ஆபத்துக் காரணியாக காணப்பட்டுள்ளது.குழந்தைப் பருவத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டது அல்லது உணர்வதிர்ச்சிக் கோளாறு ஆகியவையும் ஸ்கிசோஃப்ரினியாவைக் கண்டறிவதில் ஆபத்துக் காரணிகளாக உணரப்பட்டுள்ளன.[63][64]ஸ்கிசோஃப்ரினியாவிற்கு வளர்ப்பு முறை பொறுப்பாவதில்லை. ஆனால், ஆதரவளிக்காத, செயலிழந்த உறவு முறைகள் இதற்கான ஆபத்தை அதிகரிப்பதில் பங்களிக்கலாம்.[65][66]

மருந்துகளின் தவறான பயன்பாடு

ஸ்கிசோஃப்ரினியாவைக் கொண்டுள்ள நோயாளிகள் ஏறத்தாழ பாதிப் பேர் மருந்து அல்லது மதுவின் தவறான பயன்பாட்டினைக் கொண்டிருந்தாலும், ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மருந்தின் தவறான பயன்பாடு ஆகிய இரண்டுக்கும் அடிப்படைக் காரணித் தொடர்பினை நிரூபிப்பது கடினமானதாக உள்ளது. இதில், "பொருள் பயன்பாட்டினால் ஸ்கிசோஃப்ரின்யா உருவாகிறது" என்றும் "ஸ்கிசோஃப்ரின்யாவால் பொருள் பயன்பாடு ஏற்படுகிறது" என்றும் இரண்டு வகையான விளக்கங்களுமே அளிக்கப்படுகின்றன. அவை இரண்டுமே உண்மையாகவும் இருக்கலாம்.[67] 2007வது ஆண்டு நடைபெற்ற ஒரு முழுஆய்வு கஞ்சாவி பயன்பாடு ஸ்கிசோஃப்ரினியா உள்ளிட்ட உளவியல் நோய்களுக்கான மருந்தளவு சார்ந்த ஆபத்தை அதிகரிப்பதாக புள்ளி விபரத் தொடர்பு இணைந்த கணிப்பு ஒன்றை வெளியிட்டது.[68]மது உள்ளிட்ட மற்ற மருந்துப் பொருட்கள் ஸ்கிசோஃப்ரினியாவை ஏற்படுத்துகின்றன என்பதற்கோ அல்லது உளப்பிணி உடைய தனி நபர்கள் சுயமாகவே மருந்துகளை உட்கொள்கிறார்கள் என்பதற்கோ ஆதாரங்கள் குறைவாக உள்ளன. மனத்தளர்வு, பதட்டம், தனிமை மற்றும் வெட்டியாக இருப்பது போன்ற உணர்வு ஆகிய விரும்பத்தகாத சில நிலைகளைச் சமாளிப்பதற்காக அவர்கள் இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்னும் கருத்துக்கு ஓரளவு ஆதரவு இருக்கிறது.[69]இருப்பினும், உளப் பிணி என்பதைப் பொறுத்தமட்டிலும், மெதாம்ஃபெடமைன் மற்றும் கொக்கெயின் ஆகியவை மெதாம்ஃபெடமைன்-கொக்கெயின்-தூண்டுதல் உளப்பிணிகளுக்குக் காரணமாகும் என்று அறியப்பட்டுள்ளது. இவை, மிகவும் ஒத்ததாக உள்ள அறிகுறியியலை அறிவிக்கின்றன; மேலும் இவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகும் இவற்றின் அறிகுறிகள் தொடரக் கூடும்.[70]

ஒரு சமுதாயக் கருத்தாக்கமாக ஸ்கிசோஃப்ரினியா

1960ஆம் ஆண்டுகளில் மிகவும் பரவலாக உளப்பிணியியல் எதிர் இயக்கம் என்றறியப்பட்ட ஒரு அணுகு முறை, ஸ்கிசோஃப்ரினியாவை ஒரு நோயாகக் கருதும் பாராம்பரியமான மருத்துவக் கருத்தை எதிர்க்கிறது.[71]

உளவியலாளர், தாமஸ் சஜாஸ் உளவியல் நோயாளிகள் நோய் பீடித்தவர்கள் அல்லவென்றும், சமூகத்தைச் சங்கடத்தில் ஆழ்த்தும் வகையில், பாராம்பரியத்திற்கு மாறான கருத்து மற்றும் நடத்தை ஆகியவற்றைக் கொண்டவர்களே என்றும் வாதிடுகிறார்.[72]

சமூகம், அவர்கள் நடத்தையை ஒரு நோய் என்று வர்ணித்து அவர்களைக் கட்டுப்படுத்த முயல்வதும், பலவந்தமாக ஒரு சமூகக் கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் அநீதி என்று அவர் வாதிடுகிறார்.

இந்தக் கருத்தின்படி ஸ்கிசோஃப்ரினியா என்று ஒரு நோய் உண்மையில் இல்லை; அது வெறும் ஒரு சமுதாயக் கருத்தாக்கம். இது சமுதாயத்தின் கருத்துக்களின்படி சாதாரணம் மற்றும் அசாதாரணம் என்று கருதப்படுபவற்றைச் சார்ந்து உருவாக்கப்பட்டது.

சஜாஸ் தன்னை உளப்பிணி இயலின் அதாவது உளப்பிணி இயல் என்னும் சிகிச்சை முறைமைக்க எதிரியாகக் கருதியதில்லை. ஆனால், அவ்வாறான சிகிச்சை ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக அவர் மீது திணிக்கப்படக் கூடாது என்றும், அதற்கு ஒப்புதல் அளிக்கும் வயது வந்தவர்களுக்கு மட்டுமே அதை அளிக்க வேண்டும் என்றும் அவர் நம்புகிறார்.

காரணங்களாக கூறப்படும் மற்றவை

ஆர்.டி.லெய்ங், சில்வேனோ அரெயிடி, தியோடர் லிட்ஜ் மற்றும் பலர் , மன நோய்க்கான அறிகுறிகள் என்று கூறப்படுபவை, மிகு உணர்வு கொண்ட தனி நபர்கள் மீது சமூகமும், குறிப்பாக குடும்ப வாழ்க்கையும், சுமத்தும் அசாத்தியமான எதிர்பார்ப்புகளுக்கான புரிந்து கொள்ளப்படக் கூடிய எதிர் விளைவுகள்தாம் என்று வாதிடுகின்றனர். லெயிங்,அரெயிடி மற்றும் லிட்ஜ் ஆகியோர் ஒரு உளப்பிணி அனுபவத்தை அர்த்தமற்ற, வெறுமே அதன் கீழ்க் கோடிட்ட உளவியல் மற்றும் நரம்பியல் தொடர்பான அழுத்ததின் குறியீடு என்று சொல்வதை விட, அந்த அனுபவத்தின் உட்பொருள் மேல்விளக்கத்திற்குத் தகுதியானது என்று மதிப்பீடு செய்த வகையில் குறிப்பிடும்படியாக இருந்தனர். ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்பட்ட 11 நபர்களின் மருத்துவ வரலாற்றை விவரித்த லெயிங், அவர்களது குடும்பம் மற்றும் வாழ்க்கை நிலை ஆகியவற்றின் பின்னணியில் பார்க்கும்போது, செயல்களின் உட்பொருள் மற்றும் அவர்களின் வாக்குமூலங்கள் அர்த்தமுள்ளதாகவும், தர்க்கரீதியாகவும் இருந்ததாக வாதிட்டார்.[73] 1956வது வருடம், பாலோ ஆல்டோ, கிரெகோரி பேட்ஸன் மற்றும் அவருடன் பணியாற்றிய பால் வால்ட்ஜ்விக், டொனால்ட் ஜாக்ஸன் மற்றும் ஜே ஹேலி,[74] லெயிங்கின் பணியுடன் தொடர்பு கொண்ட முறையில் ஸ்கிசோஃப்ரினியா பற்றிய ஒரு புதிய கருத்தாக்கத்தை வெளியிட்டனர். இதில் ஒரு நபர் ஒரு இருபுறம் கட்டப்பட்ட சூழ்நிலையில் இருந்து இரண்டு வெவ்வேறான[சான்று தேவை] மாறுபட்ட செய்திகளைப் பெறுவதாக தெரிவித்தனர்.

எனவே, பித்து என்பதை இந்த மனவேதனையின் வெளிப்பாடாகவும், அதைத் துப்புரவாக்கும் அல்லது உருமாற்றம் செய்யும் ஒரு அனுபவம் என்பதாகவுமே மதிப்பிடப்பட வேண்டும்.ஸ்கிசோஃப்ரினியா மற்றும் குடும்பம் மற்றும் ஸ்கிசோஃப்ரினியா கோளாறுகளின் தோறறமும் அவற்றிற்கான சிகிச்சைகளும் என்னும் புத்தகங்களில் லிட்ஜும் அவருடன் பணியாற்றியவர்களும், பெற்றோரின் நடத்தை, குழந்தைகளில் மன நோயை உருவாக்கலாம் என்று விளக்கினர்.

அரெயிடின், ஸ்கிசோஃப்ரினியாவுக்கான மேல்விளக்கம் என்னும் நூல், அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1975வது வருடம் அறிவியல் தேசிய புத்தக விருது பெற்றது.

ஜுலியன் ஜேய்னெஸ் தாம் 1976வது வருடம் எழுதிய "இரட்டை அறை மனதின் உடைவில் உணர்வு நிலையின் தோற்றம்" என்னும் புத்தகத்தில், வரலாற்றுக் காலத்தின் தொடக்கம் வரையிலும், ஸ்கிசோஃப்ரினியா அல்லது அதையொத்த ஒரு நிலை என்பது ஒரு சாதாரண மனித உணர்வு நிலையாகத்தான் இருந்தது என்று கூறினார்.[75] சாதாரணமான நிலையானது தினசரி நடவடிக்கைளுக்குப் பொருத்தமான ஒரு தாழ்ந்த பாதிப்பு நிலையைக் கொள்கிறது; இந்த நிலையில்,சிக்கலான நேரங்களில் "மர்மமான குரல்கள்" இடையூறு செய்து கட்டளைகள் இடும்போது இது "இரட்டை அறை மனது" என்ற வடிவத்தை மேற்கொள்கிறது. இதை ஆரம்ப கால மக்கள் கடவுளிடமிருந்து பெறப்பட்ட இடையூடுகள் என்பதாகப் புரிந்து கொண்டனர். ஷமானிஸம் தொடர்பான ஆராய்ச்சியாளர்கள், சில வகையான கலாசாரங்களில் ஸ்கிசோஃப்ரினியா அல்லது அதற்குத் தொடர்பான நிலைகள் தனிப்பட்ட ஒரு நபர் ஒரு ஷமன் என்று உருப்பெருவதற்கு வழி வகுக்கலாம் என தெரிவிக்கிறார்.[76] பல்வேறு நிதர்சனங்களுக்கு அணுகல் பெறுவது என்பது ஸ்கிசோஃப்ரினியாவில் அசாதாரணமான ஒன்று அல்ல; மேலும், பல ஷமானிய மரபுகளில் அது அடிப்படையான ஒரு அனுபவம்.

இதைப் போலவே, உளவியல் நிபுணர்கள் நோய் என்று குறிப்பிடக் கூடிய உணர்வு நிலையின் மாற்றப்பட்ட நிலைகளை, அவ்வப்போது நேரடியாகக் கொண்டு வரும் திறனை ஒரு ஷமான் பெற்றிருக்கக் கூடும்.

இதற்கு மாறாக, உளவியல் வரலாற்றாசிரியர்கள், உளவியலின் நோய் கண்டறிதலை ஏற்கின்றனர். இருப்பினும், தற்போதைய மன நோய்களுக்கான மருத்துவ மாதிரிகளைப் போல் அல்லாமல், ஆதிவாசி சமூகங்களின் வசதியற்ற குழந்தை வளர்ப்பு, ஷமானிய ஸ்கிசாய்ட் மனப்பாங்குகளின் காரணம் என்று அவர்கள் வாதிடக்கூடும்[77]. பால் கர்ட்ஸ் போன்ற மற்றும் பல விமர்சகர்கள், மதங்களில் பெரும் புள்ளிகளாகக் கருதப்பட்டவர்கள் உளப்பிணியை அனுபவித்து, குரல்களைக் கேட்டனர் என்றும், பெருமித உணர்வின் மருட்சியை வெளிப்படுத்தினர் என்றும் கூறப்படுவதை ஆமோதித்துள்ளனர்.[78]

உளவியலாளரான டிம் க்ரோ, ஸ்கிசோஃப்ரினியா என்பது நமது மூளையின் இடது கோளம் மொழி ஆளுமை பெறுவதற்காக, நாம் கொடுக்கும் ஒரு பரிணாம விலை என்று வாதிடுகிறார்.[79] உளப்பிணி என்பது மூளையின் இடது கோளத்தின் வழக்கமான மேலாக்கச் செயல்பாடுகளைக் குறைத்து, வலது கோளத்தின் அதிக அளவிலான செயல்பாடுகளுடன் இது தொடர்புறுகிறது. நமது மொழித்திறன் என்பது இந்த அமைப்பு உடைபடும்போது பரிமாணம் பெற்றிருக்கலாம்.

மற்ற அணுகு முறைகள் ஸ்கிசோஃப்ரின்யாவை உளவியல் ரீதியாக பருப்பொருள் சார்ந்த நிகழ்வு என்பனவற்றிலிருந்து விலக்கப்பட்ட[80] உணர்வு நிலை பற்றிய அறிதலும் அடையாளமும் புரிந்து கொள்ளப்படுவது மற்றும் பார்வை முறைமைகள் ஆகியவற்றுடன் தொடர்புள்ளாக்குகின்றன.[81][82]

இந்த நோய்க்கு மூளையிலிருந்து பெறப்படும் நரம்பு மண்டல திசு சத்து (brain derived neutrophic) என்பதுடன் தொடர்பு உள்ளது[83][84] .

இயங்குமுறைகள்

உளவியல் ரீதியானவை

காரணம் அறியாத பல உளவியல் இயங்கு முறைகள் ஸ்கிசோஃப்ரினியாவின் உருவாக்கத்திலும் அதன் பராமரிப்பிலும் தொடர்பாக்கப்பட்டிருக்கின்றன.

நோய் கண்டறியப்பட்டவர்கள் அல்லது அதற்கான ஆபத்தில் இருப்பவர்கள், குறிப்பாக, மன அழுத்தத்திலோ அல்லது குழப்பமான மன நிலைகளிலோ இருப்பவர்கள் புரிதிறன் சார்பு, சாத்தியமாகக் கூடிய அச்சுறுத்தல்கள் பொருட்டு அளவுக்கதிகமான கவனம், சட்டென்று முடிவுகளை எடுப்பது, வெளிப்புறக் காரணங்களைக் கற்பிதம் செய்வது, சமூக நிலை மற்றும் மன நிலைகள் ஆகியவற்றைப் பற்றி பழுது பட்ட வகையில் பகுத்தாராய்வது, மன அழுத்தம், உள்ளார்ந்த பேச்சை வெளிப்புறப் பேச்சுடன் வேறுபடுத்துவதில் சிரமம் மற்றும் ஆரம்ப கட்ட பார்வை பண்படுத்தல் மற்றும் கவனத்தை செலுத்துவது ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்.[85][86][87][88]

சில புறிதிறன் அம்சங்களில் பெரும் அளவில், நரம்பியல் ரீதியான புரிதிறன் குறைபாடு, நினைவாற்றல், கவனம் செலுத்துதல், பிரச்சினைகளை தீர்த்தல், இயக்கச் செயல்பாடு, சமூகப் புரிதிறன் ஆகியவற்றில் பிரதிபலிக்கக் கூடும். வேறு சில, தனிப்பட்ட விஷயங்களிலும் அனுபவங்களிலும் தொடர்புடையனவாக இருக்கக் கூடும்.[65][89] "மழுங்கிய விளைவு" போன்ற ஒரு பொதுவான தோற்றம் இருந்தாலும், அண்மைக் காலத்திய ஆராய்ச்சிகளின்படி ஸ்கிசோஃப்ரினியா நோய் உள்ளவர்களாகக் கண்டறியப்படும் பல தனி நபர்கள், குறிப்பாக அழுத்தம் அல்லது எதிர்மறைத் தூண்டுதல்களுக்கு உட்பட்டவர்கள், மிகு உணர்ச்சி பதிலிறுப்பு கொண்டிருக்கிறார்கள். இந்த மிகு உணர்ச்சியானது அறிகுறிகள் அல்லது நோய்க்கு ஏதுவான நிலை கொண்டிருக்கலாம்.[17][90][91] சில ஆதாரங்கள், மருட்சி தொடர்பான நம்பிக்கைகளையும், உளப்பிணி அனுபவங்களையும் இந்த நோயின் கூடுதல் காரணங்களாகப் பிரதிபலிக்கலாம் என்று கூறுகின்றன.[92][93][94][95] மருட்சிகள் நீண்ட காலம் தங்கிவிடுவதற்கு கற்பனை அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் "பாதுகாப்பு நடத்தைகள்" பயன்படுத்தப்படுவது உதவியாக இருக்கும்.[96] ஸ்கிசோஃப்ரினியாவிற்கான அறிகுறிகளின் மீது உளவியல் சார்ந்த இயங்கு முறைகள் ஆற்றும் பங்கிலிருந்து மேலும் ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.[97]

நரம்பியல் ரீதியானவை

செயல்பாட்டில் உள்ள ஒத்திசைவுக் காந்தமுறைமைப் படமாக்கல் (functional magnetic resonance imaging) கொண்டு மூளையின் செயல்பாடுகளில் உள்ள வேறுபாடுகளைப் பரிசோதித்த நரம்பு-உளவியல் பரிசோதனை மற்றும் மூளையைப் படமெடுக்கும் நுட்பம் (brain imaging) ஆகியவை, அத்தகைய வேறுபாடுகள் முக்கியமாக மூளையின் முன் கோள , பொட்டுமடல் மற்றும் மூளைப் பின்மேடு ஆகியவற்றில் நிகழ்வதாகக் காட்டியுள்ளன.[98] இந்த வேறுபாடுகள், ஸ்கிசோஃப்ரினியாவுடன் அடிக்கடி தொடர்பு படுத்தப்படும், நரம்பியல் ரீதியான புரிதிறன் குறைபாடுகளுடன் இணைக்கப்படுகின்றன.[99]

ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்பட்டவர்களில், மூளையின் செயல்பாடுகளில் உள்ள வேறுபாடுகளைக் கண்டு பிடிக்கும் ஆய்வை ஃசெயல்பாட்டில் உள்ள ஒத்திசைவுக் காந்தமுறைமைப் படமாக்கல் மற்றும் இதர மூளையைப் படமெடுக்கும் தொழில் நுட்பங்கள் அனுமதிக்கின்றன.

மூளையின் மையைப்பாதை யினுள் டோபமைன் செயல்பாட்டில் குறிப்பிடும் அளவு கவனம் செலுத்தப்படுகிறது. டோபமைனின் செயல்பாடுகளைத் தடுக்கும் ஃபெனொதியாஜைன்ஸ் என்னும் ஒரு குறிப்பிட்ட மருந்துக் குழுமம், உளப்பிணி அறிகுறிகளைக் குறைக்க முடியும் என்று அறியப்பட்ட தற்செயலாக நிகழ்நத ஒரு கண்டுபிடிப்பினால் இந்த கவன ஈர்ப்பு விளைந்தது.

டோபமைன் வெளியேற்றத் தூண்டுதலான ஆம்ஃபிடாமைன் ஸ்கிசோஃப்ரினியாவின் உளப்பிணி அறிகுறிகளைப் பெருக்கும் என்னும் உண்மையும் இந்தக் கண்டுபிடிப்புக்கு ஆதரவாக உள்ளது.[100] ஸ்கிசோஃப்ரினியாவின் மீது டோபமைனின் ஆதிக்கம் பற்றிய மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ள ஒரு கருத்தாக்கம், டி 2 ரிசெப்டார் களின் அளவுக்கதிகமான செயல்பாடுகள்தாம் ஸ்கிசோஃப்ரினியாவின் (நேர்மறை அறிகுறிகளுக்குக்) காரணம் என்று உரைத்தது. இது அனைத்து ஆன்டிசைகோட்டிகளுக்கும் பொதுவான டி2 பிளாக்கேடின் அடிப்படையில் 20 வருடங்களுக்கும் மேலாக அறியப்பட்டிருப்பினும், 1990ஆம் ஆண்டுகளின் மத்தியில்தான் மூளையைப் படமெடுக்கும் ஆய்வுகள் இதற்கு ஆதரவான ஆதாரங்களைக் காட்டின. இந்த விளக்கம் தற்போது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு விட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது, காரணம், அடிபிகல் ஆன்டிசைகோடிக் என்னும் புதிய உளப்பிணி எதிர் மருத்துவம் டிபிகல் ஆன்டிசைகோடிக் என்னும் பழைய உளப்பிணி எதிர் மருத்துவத்திற்குச் சமமாக இருப்பது மட்டும் அல்லாமல், செரொடினின் செயல்பாட்டை பாதிக்கிறது. மேலும் டோபமைனை தடுக்கும் சக்தியை குறைவாகப் பெற்றிருக்கிறது.[101]

ஸ்கிசோஃப்ரினியாவில் க்ளுடமேட் என்னும் நரம்புக்கடத்தி மற்றும் என்டிஎம்ஏ என்னும் க்ளூடமேட் ரிசெப்டார் என்பதன் குறைந்த செயல்பாடு ஆகியவற்றிலும் ஆர்வம் உருவாகியுள்ளது. ஸ்கிசோஃப்ரினியா[102] நோய் கொண்டிருந்ததாக முன்னர் கண்டறியப்பட்டவர்களின் மூளையை மரணத்துக்குப் பின்னால் அறுத்தறியும் நடைமுறையில், அவற்றில் அசாதாரணமான முறையில் குறைந்த அளவில் க்ளுடமேட் ரிசெப்டார்கள் இருந்தமையால் இவ்வாறு உணரப்பட்டது; மற்றும், ஃபென்சைக்லிடின் மற்றும் கேடமைன் போன்ற க்ளூடமேட்டை தடுக்கும் மருத்துகள் இந்த நிலையுடன் தொடர்புடைய புரிதிறன் பிரச்சினைகளைப் போலவே தோற்றமளிக்கக் கூடும்.[103]ஸ்கிசோஃப்ரினியாவுடன் இணைக்கப்பட்டுள்ள கருத்தாக்கங்களான, மூளையின் முன் கோளம் மற்றும் பொட்டுமடல் செயல்பாட்டைப் பயன்படுத்தும் செயல் திறன் சோதனைகளுடன் குறைந்துபட்ட க்ளுடமேட் இணைக்கப்படுவதும், டோபமைன் செயல்பாட்டை க்ளூடமேட் பாதிக்கக்கூடும் என்பதும் ஸ்கிசோஃப்ரினியாவில், க்ளூடமேட் பாதை ஒரு முக்கியமான இடை நிலையை (காரணமாகவும் இருக்கக் கூடிய) சாத்தியத்தை கொண்டிருக்கக் கூடும் என்று அறிவிக்கின்றன.[104]

இருப்பினும் இந்த க்ளுடமேடர்ஜிக் மருத்துவத்திற்கு நேர்மறை அறிகுறிகள் பதிலிறுப்பதில்லை.[105]

ஸ்கிசோஃப்ரினியாவில்,மூளையின் சில பகுதிகளின் கட்டமைப்பு மற்றும் அளவு ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் பற்றிய கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்துள்ளன.

2006ஆம் வருடம் மூளைப்படமாக்கல் ஆய்வுகளின் பேரிலான ஒரு முழுப் பகுப்பாய்வு, ஆரோக்கியமான, ஒரளவு கட்டுப்பாடுகளின் கீழ் முதல் உளப்பிணி நோயின் நிகழ்வைக் கொண்டிருந்த நோயாளிகளில், முழு மூளை மற்றும் பொட்டுமடல் அளவு ஆகியவை குறைவதாகவும், பம்பறை அளவு மிகுவதாகவும் கண்டறிந்தது. இருப்பினும், இந்த ஆய்வுகளில் காணப்பட்ட அளவு வேற்றுமைகளின் சராசரியானது. எம்ஆர்ஐ முறைமைகள் கண்டு பிடித்த எல்லைகளை ஒட்டியே இருக்கின்றன. இதனால், ஸ்கிசோஃப்ரினியா என்பது, அறிகுறிகள் வெளிப்படத்துவங்கும்போது ஆரம்பிக்கும் நரம்பு தொடர்பான செயலிழப்பு நடைமுறையா அல்லது மிகவும் குறைந்த வயதிலேயே அசாதாரண மூளை அளவுகளை உற்பத்தி செய்யும் நரம்பு மேம்பாட்டு நடைமுறையுடன் தொடர்பானதா என்பது தீர்மானமாகவில்லை.[106]

உளப்பிணியின் முதல் நிகழ்வில், ஹலோபெரிடால் போன்ற டிபிகல் ஆன்டிசைகோடிக்குகள் சாம்பல் வண்ணப் பருப்பொருள் அளவு குறைதலுடன் தொடர்பு கொண்டிருந்தன; ஆனால், அடிபிகல் ஆன்டிசைகோடிக்குகள் அவ்வாறில்லை.[107] மனிதரல்லாத முதல் உயிரினங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் சாம்பல் மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு பருப்பொருட்களிலுமே டிபிகல் மற்றும் அடிபிகல் ஆன்டிசைகோடிகளின் குறைந்த அளவு காணப்பட்டது.[108]

ஊடுபாய்ப் பண்புருப் படமாக்கல் (diffusion tensor imaging) ஆய்வுகள் பற்றி 2009ஆம் வருடம் நடத்தப்பட்ட ஒரு முழுப் பகுப்பாய்வு, ஸ்கிசோஃப்ரினியாவில் பின்னமான இட-வல மாற்ற குறைபாட்டைக் கொண்ட இரண்டு ஓத்த பகுதிகளைக் அடையாளம் கண்டது. இடது புற முன்பக்கக் கோளத்தில் உள்ள ஒரு பகுதி, முன் கோளத்தை ஊடாக இணைக்கும் மூளை உள்ளுறை மற்றும் மேலட்டை ஆகியவற்றின் வெள்ளை பருப்பொருள் தடங்களின் குறுக்காகச் செல்கிறது. பொட்டுமடலின் இரண்டாம் பகுதி முன் கோளத்தை தீவம், மூளைப்பின்மேடு மற்றும் மூளையடிச்சிரை ஆகியவற்றுடன் ஊடாக இணைக்கும் வெள்ளைப் பருப்பொருள் தடங்களின் குறுக்காகச் செல்லப்படுகிறது. வெள்ளைப் பருப்பொருள் தடங்களின் இரண்டு கட்டமைப்புக்கள் ஸ்கிசோஃப்ரினியாவின்போது பாதிப்புக்கு உட்படலாம் எனவும், இதன் மூலம் அவை இணைக்கும் சாம்பல் பருப்பொருள் பகுதிகளின் "இணைப்பு துண்டிப்படையும்" சாத்தியம் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.[109]செயல்பாட்டில் உள்ள ஒத்திசைவுக் காந்தமுறைமைப் படமாக்கல் ஆய்வுகளின்போது, ஸ்கிசோஃப்ரினியா நோயாளிகளில், மூளையின் இயல்பான கட்டமைப்பு மற்றும் பணி-நேர்மறைக் கட்டமைப்பு ஆகியவற்றில் அதிக அளவு இணைப்பு கண்டறியப்பட்டுள்ளது; இவை முறையே சுயநுணுகச் செயல்பாடு மற்றும் புறநுணுகச் செயல்பாடு ஆகியவற்றில் அளவுக்கதிகமான கவனம் செலுத்தப்படும் பண்பைப் பிரதிபலிப்பதாக இருக்கக் கூடும். இரண்டு கட்டமைப்புகளுக்கும் உள்ள இடைத்தொடர்பு எதிர்ப்பு அதிகமாவது, இரண்டு கட்டமைப்புகளுக்கும் இடையில் உள்ள போட்டியைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்.[110]

பிரித்தறிவதும், வராமல் தடுப்பதும்

மரபியல் சார்ந்த ஆபத்துக்கள் மற்றும் செயலிழப்பு உருவாக்காத உளப்பிணி- போன்ற அனுபவங்கள் பிற்காலத்தில் ஸ்க்சிசோஃப்ரினியா வருவதை முன்னறிவிக்கக் கூடுமா என்று ஆராய்ச்சிகள் நடை பெற்றுக் கொண்டிருந்தாலும், பின்னாளில் ஸ்கிசோஃப்ரினியா உருவாகக் கூடும் என்பதை அறிவிக்கக் கூடிய சுட்டிக் காட்டிகள் என்று ஏதும் இல்லை.[111]ஸ்கிசோஃப்ரினியா கொண்ட ஒரு குடும்ப வரலாற்றுடன், தனனைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளும், நிலையற்றதான உளப்பிணி அனுபவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 'கடைசிக் கட்ட அதிக ஆபத்து மன நிலை' என்னும் அளவுகோலைப் பூர்த்தி செய்யும் நபர்கள், ஒரு வருட காலத்திற்குப் பிறகு ஸ்கிசோஃப்ரினியா நிலைக்கு கண்டறியப்படும் வாய்ப்பை 20-40% கொண்டிருக்கிறார்கள்.[112] 'அதிக ஆபத்து' அளவுகோலைப் பூர்த்தி செய்யும் நபர்களுக்கு ஒரு முழு அளவிலான ஸ்கிசோஃப்ரினியா நோய் உருவாவதைத் தடுப்பதில் உளவியல் ரீதியான சிகிச்சைகளும், மருத்துவமும் பயனுள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளன.[113]இருப்பினும், உளப்பிணி எதிர்ப்பு மருந்துகளின் பக்க விளைவுகளை, குறிப்பாக, உருச்சிதைவுக்கான சாத்தியம் கொண்ட இயக்கக்கேடு மற்றும் அரிதான ஆனால் ஆபத்துக்கான சாத்தியம் கொண்ட கொடிய நரம்பியல் நோய்க்குறித்தொகுதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், ஸ்கிசோஃப்ரினியா உருவாகவே போகாத நபர்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பது சர்ச்சைக்குரியதாக[114] உள்ளது.[115]ஸ்கிசோஃப்ரினியாவுக்கான தடுப்பு ஆரோக்கிய கவனிப்பாக மிகவும் பரவலாகப் பயனபடுத்தப்படுவது பொது மக்களிடம் விழிப்புணர்ச்சி உண்டாக்கும் பிரசாரங்கள்தாம். இவை, ஆபத்துக் காரணிகள் மற்றும் ஆரம்ப கால அறிகுறிகள் ஆகியவற்றைப் பற்றி தகவல் அளித்து, நோய் கண்டறியப்படுவதை மேம்படுத்தவும், சிகிச்சை தாமதம் ஆகும் நிலையில் உள்ளவர்களுக்கு விரைவில் கிடைக்கப் பெறவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டவை.[116]புதிய மருந்தக அணுகுமுறையான உளப்பிணியின் ஆரம்ப கட்டத்திலேயே இடையீடு செய்வது என்பது ஒரு இரண்டாவது கட்ட தடுப்புத் திட்ட முயற்சி. இது நோய்க்கான நிகழ்வுகள் மேலும் நடைபெறாமலும், ஸ்கிசோஃப்ரினியாவுடன் தொடர்புடைய நீண்ட கால செயலிழப்புகளைத் தடுக்கவும் உதவுகிறது.

மேலாண்மை

1950களில் ஸ்கிசோஃப்ரினியாவுக்கான சிகிச்சையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய மாலிக்யூல் ஆஃப் க்ளோர்ப்ரோமைசின்

குணப்படுத்துதல் என்பது சர்ச்சசைக்குரியதாகவே உள்ளது. அண்மையில், அறிகுறிகள் குறைவதை அறிவதற்கான அளவுகோல் அறிவிக்கப்பட்டிருந்தாலும்,குணப்படுத்துதல் என்பதன் வரையறை பற்றி ஒருமித்த கருத்து இல்லை.[117]தர நிலைப்படுத்தப்பட்ட முறைமைகளை வைத்தே ஸ்கிசோஃப்ரினியாவுக்கான சிகிச்சையின் விளைவுச் சிறப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது. இதில் மிகவும் பொதுவானது, நேர்மறை மற்றும் எதிர்மறை ஒத்திசை நோய்க்குறித் தொகுதி அளவுகோல் என்பதாகும்.[118]

அறிகுறிகளை மேலாண்மை செய்வது மற்றும் செயல் பாட்டை மேம்படுத்துவது என்பது குணப்படுத்துவது என்பதை விட அதிக அளவில் சாதிக்கக் கூடியதாக கருதப்படுகிறது. 1950ஆம் ஆண்டுகளின் இடையில், க்ளோர்ப்ரோமைசின் உருவாக்கப்பட்டு, அறிமுகமானதும், சிகிச்சையில் ஒரு புரட்சியே உருவானது.[119][120]

நம்பிக்கை, சக்தியூட்டுதல் மற்றும் சமூகச் சேர்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மீட்சிக்கான மாதிரி கைக்கொள்ளப்படுவது அதிகரித்து வருகிறது.[120]

ஸ்கிசோஃப்ரினியாவின் தீவிர நிகழ்வுகளுக்காக மருத்துவ மனையில் சேருதல். இது தன்னார்வமாகவோ அல்லது (மன நல சட்டம் அனுமதிக்கும் பட்சத்தில்) தன்னிச்சையாக அல்லாமலோ (சமுதாய அல்லது தன்னிச்சையற்ற கடப்பாடு என்று அழைக்கப்படுகிறது) நிகழலாம். தற்போது, நிர்வாக முறைப்படுத்தல் நிறுத்தம் உள்ளதால், உள் நோயாளிகளாக நீண்ட காலம் மருத்துவ மனையில் இருப்பது என்பது குறைவாக உள்ளது; ஆயினும் தற்போதும் அது நிகழலாம்.[6]

மருத்துவ மனையில் சேருவதை அடுத்து (அல்லது அதற்குப் பதிலாக) டராப்-இன் செண்டர்கள், சமுக மன நலக் குழு அல்லது உறுதியளிக்கும் சமூக சிகிச்சை குழு ஆகியவற்றின் உறுப்பினர்களின் வருகை, ஆதரவான வேலை வாய்ப்பு[121] மற்றும் நோயாளிகளே முன்னின்று நடத்தும் சுய-ஆதரவுக் குழுக்கள் ஆகியவற்றையும் கிடைக்கப்பெறும் ஆதரவு சேவைகளாகக் குறிப்பிடலாம்.

மேற்கத்திய நாடுகள் பலவற்றில், ஸ்கிசோஃப்ரினியா என்பது சமூகம் முன்னணியில் நடைத்தும் இயல்பான முறைமைகளாலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல ஆண்டுக் காலமாக உலக சுகாதார நிறுவனம் நடத்திய பன்முக கருத்தாய்வுகளும், சராசரியாக, மேற்கத்திய நாடுகளை விட மேற்கத்திய நாடுகள் அல்லாதவற்றில் ஸ்கிசோஃப்ரினியா நோய்க்கு கண்டறியப்பட்டவர்களுக்கான வெளிப்பாடுகள் மேம்பட்டதாக இருப்பதாக அறிவிக்கிறது.[122] இந்தக் கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டு ந்டைபெறும் கலாசார குறுக்கு ஆய்வுகள் விளக்க முயல்கின்றன என்றாலும், சமூகத் தொடர்புடைமை மற்றும் ஏற்றுக் கொள்ளப்படுதல் ஆகிய ஒப்பு நோக்கு அளவுகளே இந்த வேறுபாடுகளுக்குக் காரணம்[123] என்று பல மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஐயம் கொள்கின்றனர்.

மருத்துவம்

ஸ்கிசோஃப்ரினியாவுக்கான முதல் மருத்துவத் தெரிவு ஆன்டிசைகோடிக் எனப்படும் உளப்பிணி எதிர் மருத்துவமாகும்.[124]

இவை உளப்பிணியின் நேர்மறை அறிகுறிகளைக் குறைக்கலாம். பல உளப்பிணி எதிர் மருத்துவங்களும் அவற்றின் பிரதான விளைவை அளிக்க 7-14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.[125][126][127][128]

இருப்பினும், தற்போது கிடைக்கப்பெறும் உளப்பிணி எதிர் மருத்துவங்கள் குறிப்பிடும் அளவில் எதிர்மறை அறிகுறிகளை சீராக்க இயலாதவையாக இருக்கின்றன; புரிதிறனில் ஏற்படக் கூடிய மேம்பாட்டினை பயிற்சியின் விளைவாகக் கருதலாம்[125][126][127][128]

ரிஸ்பெரிடோன் (வர்த்தகப் பெயர் ரிஸ்பெரிடால்) ஒரு பொதுவான அடிபிகல் ஆன்டிசைகோடிக் மருத்துவம்.

புதிதாக வந்துள்ள அடிபிகல் ஆன்டிசைகோடிக் மருந்துகள், அவை விலை உயர்ந்தவையாகவும் மற்றும் எடை அதிகரிப்பு மற்றும் உடற்பருமன் தொடர்பான நோய்களைத் தூண்டுபவையாகவும் இருந்தாலும், பொதுவாக, ஆரம்ப கட்ட சிகிச்சையில் பழைய டிபிகல் ஆன்டிசைகோடிக் மருந்துகளுக்குப் பதிலாக விரும்பித் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.[129] 2008வது வருடம், அமெரிக்க மன நல தேசிய நிறுவனம் அளித்த நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ஒரு பெரும் தோராயமாக்கப்பட்ட சோதனை (மருந்தக உளப்பிணி எதிர் மருந்தின் இடையூடு விளைவு பற்றிய சோதனைகள் (Clincal Antipsychotic Trials of Intervention or CATIE), உளப்பிணி எதிர் மருந்துகளின் முதல் தலைமுறையின் ஒரு பிரதிநிதியாக கொள்ளப்படும், பெர்ஃபெனாஜைன் 18 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளப்படும்போது, பல புதிய மருந்துகளை (ஒலன்ஜாபைன்,பெர்ஃபெனாஜைன், குவாஷியாபென், ரிஸ்பெரிடோன் அல்லது ஜிப்ரசிடோன்) விட பயனுள்ளதாகவும், விலை குறைவானதாகவும் இருப்பதாகக் கண்டறிந்தது நோயாளிகள் நீண்ட காலத்திற்கு தொடர விரும்பிய அடிபிகல் ஆன்டி சைகோடிக்கான ஒலன்ஜாபைன் குறிப்பிடத் தகுந்த அளவில் எடை அதிகரிப்புடனும் வளர்சிதை மாற்ற ஒத்திசைவு நோய்க்குறித் தொகுதிக்கான ஆபத்துடன் தொடர்புடையதாக இருந்தது. மற்ற மருந்துகளுக்கு மிகக் குறைந்த அளவே பதிலிறுப்பு கொண்டிருந்தவர்களுக்கு க்ளோஜபைன் பயனுள்ளதாக இருந்தது; ஆனால், அதற்கு தொல்லை தரும் பக்க விளைவுகள் இருந்தன. டார்டைவ் டிஸ்கின்சியா கொண்ட நோயாளிகளை இந்த சோதனை விலக்கி விட்டதால், அவர்களுக்கு இதன் உகமை தெளிவாகவில்லை.[130]

நேர்மறை அறிகுறிகளுக்கான மருத்துவத்திற்கு இந்த இரண்டு பிரிவு உளப்பிணி எதிர் மருத்துவங்களும் பொதுவாக ஓரே அளவிலான பயன் விளைப்பதாக கருதப்பட்டன.

சில ஆராய்ச்சியாளர்கள், அடிபிகல் மருந்துகள் ஸ்கிசோஃப்ரினியாவுடன் தொடர்புள்ள எதிர்மறை அறிகுறிகளுக்கும் புரிதிறன் குறைபாடுகளுக்கும் கூடுதல் பயன் அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், இவற்றின் மருந்தக முக்கியத்துவம் இன்னும் நிலை நிறுத்தப்படவில்லை.

அடிபிகல் ஆன்டிசைகோடிக்குகள், இந்தப் பிரிவின் சில மருந்துகள் ஸ்கிசோஃப்ரினியா கொண்ட குழந்தைகள் மற்றும் பதின் வயதினரின் சிகிச்சைக்காக, உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் (FDA) அங்கீகாரம் அளிக்கும் முன்னரே, அவை குறைவான அளவில் பக்க விளைவுகளுக்கான ஆபத்தைக் கொண்டிருக்கும் காரணத்தால்,ஸ்கிசோஃப்ரினியாவின் ஆரம்ப கட்ட சிகிச்சைக்கு முதலில் தேர்வு செய்யப்படும் மருத்துவமாக பல வருடங்களாக இருந்து வருகின்றன. இந்த அனுகூலத்திற்குக் கொடுக்கப்படும் விலையாக வளர்சிதை மாற்ற ஒத்திசை நோய்க்குறித் தொகுதி எனப்படும் வளர்சிதை நோய்க்குறித் தொகுதி மற்றும் உடற்பருமன் ஆகியவை உள்ளன. குறிப்பாக மிக இளம் வயதில் இவற்றின் நீண்ட காலப் பயன் துவக்கப்பட்டு விடும் சந்தர்ப்பம் கவலை அளிப்பதாக உள்ளது.குறிப்பாக, ஸ்கிசோஃப்ரினியா கொண்டுள்ள குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்கான மருத்துவம், தனி நபர் சிகிச்சை மற்றும் குடும்ப அடிப்படையிலான இடையூடுகள் ஆகியவற்றுடன் கூட்டாக அளிக்கப்பட வேண்டும்.[9]

சமீபத்திய மறு ஆய்வுகள் டிபிகல் ஆன்டிசைகோடிகுகளை விட அடிபிகல் ஆன்டிசைகோடிகுகள் குறைவான பக்க விளைவுகளைக் கொண்டிருக்கின்றன என்று கூறப்படுவதை மறுக்கின்றன - குறிப்பாக, இரண்டாவதாக சொல்லப்பட்டது குறைவான மருந்தளவுகளில் பயன்படுத்தப்படும்போது அல்லது, வீரியம் குறைந்த ஆன்டிசைகோடிகுகள் தேர்ந்தெடுக்கப்படும்போது.[131]

ஸ்கிசோஃப்ரினியா கொண்ட பெண்கள் அடிபிகல் ஆன்டிசைகோடிகுகள் எடுத்துக் கொண்டபோது, பால்சுரப்பி ஊக்கு இயக்குநீர் அளவுகள் உயர்வதாகக் காணப்பட்டன.[132]புதிய உளப்பிணி எதிர் மருந்துகள் கொடிய நரம்பியல் நோய்க்குறித் தொகுதி குறைவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது மிகவும் அரிதான ஆனால், தீவிரமான மற்றும் மரணம் விளைவிக்கக் கூடிய சாத்தியமுள்ள நரம்பியல் நோயாகும். மிகவும் பொதுவாக இது நரம்பியல் நோய் அல்லது உளப்பிணி-எதிர் மருந்துகளின் எதிரிடைப் பின்விளைவாக இது உருவாகிறது.[133]

மருத்துவத்திற்கு அறிகுறிகளின் பதிலிறுப்பு மாறுபடுகிறது. குறைந்த பட்சமாக இரண்டு வேறுபட்ட மருத்துவத்திற்கு திருப்திகரமாக பதிலிறுப்பு இல்லாத நிலையைக் குறிக்க, மருத்துவ எதிர்ப்பு ஸ்கிசோஃப்ரினியா என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.[134] இந்தப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு க்ளோஜபைன்[135] என்னும் மிக உயர் பயன் கொண்ட, ஆனால் இதய தசை அழற்சி[136] போன்ற பயங்கரமான பக்க விளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடிய, மருந்து பரிந்துரைக்கப்படலாம். ஸ்கிசோஃப்ரினியா நோயாளிகளுக்கு இருக்கக் கூடிய பொருளைத் தவறாகப் பயன்படுத்தும் பண்பைக் குறைக்கும் கூடுதல் பயனையும் குளோஜபைன் கொண்டிருக்கலாம்.[137] மருத்துவத்தை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள இயலாத அல்லது விரும்பாத மற்ற நோயாளிகளுக்கு, நீண்ட கால செயல்பாடு கொண்ட உளப்பிணி எதிரிகளின் உருவாக்கங்கள் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அளிக்கப்பட்டு கட்டுப்பாட்டு நிலை அடையப் பெறலாம்.

மருத்துவம் எடுத்துக் கொள்ள மறுத்து, மற்றபடி நிலையாகவும், சமூகத்துடன் வாழ்பவர்களாகவும் உள்ளவர்களுக்கு இந்த வகையிலாலான சிகிச்சையை பலவந்தமாக அளிப்பதற்கான அனுமதி வழங்கும் சட்டங்கள் அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் உள்ளன.இந்த உளப்பிணி எதிர்[138] மருந்துகளை உட்கொள்ளாமல் இருந்தாலே, சில தனி நபர்கள் நீண்ட காலப் பயன் பெறக் கூடும் என்று குறைந்த பட்சம் ஒரு ஆய்வு கருத்து தெரிவித்துள்ளது.[138]

2003வது வருடம், ஈபிஏ (ஒரு ஒமேகா-3 கொழுப்பு அமிலம்) மற்றும் அதற்கு எதிராக பிளேஸ்போ ஒரு இணைப்பு மருத்துவமாக வழங்கப்பட்ட, தோராயமாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட 4 சோதனைகளின் மறு ஆய்வில், இரண்டு சோதனைகளில் எதிர்மறை மற்றும் நேர்முறை ஆகிய இரண்டு வகை அறிகுறிகளிலுமே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்ததாகக் காணப்பட்டது. இதனால், உளப்பிணி எதிர் மருந்துகளுக்கு ஒரு இணைப்பு மருந்தாக ஈபிஏ பயனுள்ளதாக இருக்குமென்று கருத்து தெரிவிக்கப்பட்டது.[139] இருப்பினும், மிக சமீபத்தில் நடந்த ஒரு முழு ஆய்வு முக்கியமான பயன் எதையும் காணவில்லை.[140] 2007வது வருடம் நடந்த ஒரு மறு ஆய்வில், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், அவை எவ்வளவு உயர் ரகமாக இருப்பினும், ஸ்கிசோஃப்ரினியாவுக்கான சிகிச்சையில் சீரற்ற விளைவுகளையும், ஐயத்திற்குறியதான மருந்தக முக்கியத்துவம் கொண்ட மிகச்சிறிய விளைவு அளவுகளையும் உருவாக்கியதாக கண்டறிந்தது.[141]

உளவியல் மற்றும் சமூக ரீதியான இடையூடுகள்

செலவீட்டைத் திரும்பப் பெறுதல் மற்றும், போதிய பயிற்சியின்மை ஆகிய காரணங்களினால், இதில் அளிக்கப்படும் சேவைகள் பெரும்பாலும் மருந்தியல் சிகிச்சை அளவிலேயே இருப்பினும்,ஸ்கிசோஃப்ரினியா சிகிச்சையில் உளவியல் மருத்துவமும் பெருமளவில் பரிந்துரைக்கப்படுவதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது.[142]

புரிதிறன் நடத்தை சிகிச்சை (cognitive behavior therapy) குறிப்பிட்ட அறிகுறிகளை[143][144][145] இலக்காக கொள்வதற்கும் அவற்றுடன் தொடர்புடைய சுய மதிப்பு, சமூகத்தில் செயலாற்றும் திறன் மற்றும் உட்பார்வை ஆகியவற்றை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

இதன் ஆரம்ப கால சோதனைகளின் முடிவு முற்றுப் பெறாதவையாக இருந்தாலும்,[146] இந்த சிகிச்சை முறை அதன் 1990ஆம் ஆண்டுகளின் இடைக் காலத்திய துவக்க செயல்திட்டங்களிலிருந்து முன்னேறியது. மிக அண்மையிலான ஆய்வு, சிபிடி ஸ்கிசோஃப்ரினியா அறிகுறிகளுக்கான ஒரு பயனுள்ள சிகிச்சை என்று தெளிவாக உரைத்துள்ளது.[147][148]

புரிதிறன் திருத்த சிகிச்சை (cognitive remediation therapy) சில வேளைகளில் ஸ்கிசோஃப்ரினியாவில் இருக்கக் கூடிய மூளையின் புரிதிறன் குறைபாடுகளை திருத்துவதை இலக்காகக் கொண்ட மற்றொரு உத்தி.

மூளை-உளவியல் மறுசீரமைப்பு உத்திகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட சிகிச்சைகளின் ஆரம்ப ஆதாரங்கள் அவை புரிதிறனை மேம்படுத்துவதைப் பொறுத்த வரையில் பயனுள்ளதாகவும் மூளையின் சில நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைவும் விளைவித்ததாக காணப்பட்டுள்ளன.[149][150] சமூகப் புரிதிறன் மற்றும் அறிவுப் புரிதிறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதான புரிதிறன் அதிகரிப்பு சிகிச்சை என்னும் மற்றொரு அணுகுமுறையும் திறன் வாய்ந்ததாக காணப்பட்டுள்ளது.[151]

ஸ்கிசோஃப்ரினியா கொண்டுள்ள ஒரு தனி நபருக்கான சிகிச்சையில் அவரது குடும்பம் முழுவதையும் கருத்தில் கொண்டு அளிக்கப்படும் குடும்ப சிகிச்சை அல்லது கல்வி, குறைந்த பட்சமாக அந்த இடையூடு நீண்ட காலத்திற்கானதாக இருக்கும்போது, பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.[152][153][154]சிகிச்சையைத் தவிர்த்து, குடும்பம் மற்றும் தொழில் ஆகியவற்றின் மீது ஸ்கிசோஃப்ரினியாவின் பாதிப்பு மற்றும் சுமை ஆகியவை கருத்தில் கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் சுய உதவிப் புத்தகங்கள் கிடைக்கப்பெறுவது அதிகரித்துள்ளது.[155][156]

சமூகத் திறன் பயிற்சிகளாலும் சில பயன்களைப் பெறலாம் என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், இதில் எதிர் மறையான கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்துள்ளன.[157][158]

சில ஆய்வுகள் இசை வழி சிகிச்சை மற்றும் பிற ஆக்கபூர்வமான சிகிச்சை முறைமைகள் ஆகியவற்றின் சாத்தியமான நன்மைகளையும் ஆராய்ந்துள்ளன.[159][160][161]

ஒரு மருத்துவ மனையில் உள் நோயாளியாக இருப்பதற்கு மாற்றான சொடேரியா மாதிரியானது குறைந்த பட்ச மருந்து உபயோக அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இது சூழல் சிகிச்சையில் குணமடைதல் (milieu therapeutic recovery) என்றழைக்கப்படுகிறது. இது "ஒரு சிறிய வீடு போன்ற அமைதியான, ஆதரவான, பாதுகாப்பான, சகிப்புத்தன்மை நிறைந்த ஒரு சமுதாயச் சூழலில் தொழில் முறை அல்லாத பணியாளர் ஒருவர், 24 மணி நேரமும், உளப்பிணி மருந்து எதையும் பயன்படுத்தாமல்,ஊடாடுவதை" அடிப்படையாகக் கொண்டதாக அதன் நிறுவனரால் பண்புறுத்தப்பட்டது.[162]

இதற்கான ஆராய்ச்சி ஆதாரங்கள் குறைந்த அளவேதான் உள்ளன என்றாலும், 2008வது ஆண்டின் முறையான மறு ஆய்வில், ஸ்கிசோஃப்ரினியாவின் முதலாவது மற்றும் இரண்டாவது நிகழ்வுகள் கண்டறியப் பட்டிருந்த நபர்களில், இந்த நிரலானது, மருந்துகளுடனான சிகிச்சைக்கு ஒப்பான அளவில் பயனுள்ளதாக கண்டறியப்பட்டது.[163]

மற்றவை

மின்சார அதிர்ச்சிச் சிகிச்சை (electro convulsive therapy), முதன்மையாக நாடப்படும் சிகிச்சையாகக் கருதப்படுவதில்லை. ஆயினும், பிற சிகிச்சைகள் பயனளிக்காத நேரங்களில் இவை பரிந்துரைக்கப்படலாம். கேடடோனியாவின் அறிகுறிகள் தென்படும்[164] நபர்களில் இந்த சிகிச்சை அதிகப் பயனுள்ளதாகும். இது ஐக்கிய இராச்சியத்தில் என்ஐசிஈ வழிகாட்டு முறைமைகளின்படி, ஏற்கனவே பயனுள்ளதாக கண்டறியப்பட்டிருப்பின், கட்டை விறைப்பு நோய்க்காகப் பரிந்துரைக்கப்படுகிறது.[165]Psychosurgery has now become a rare procedure and is not a recommended treatment.[166]

உளவியல்சார் அறுவை சிகிச்சை மிகவும் அரிதான ஒரு வழிமுறை; மற்றும் தற்போது அது பரிந்துரைக்கப்படுவதில்லை.[166]

சேவையை குறிக்கோளாகக் கொண்ட இயக்கங்கள், ஐரோப்பா மற்றும் யுனைடட் ஸ்டேட்ஸ் ஆகிய நாடுகளில் முக்கியப் பங்காற்றுபவையாகி விட்டன. ஹியரிங் வாய்சஸ் நெட்வொர்க் மற்றும் பாரோனியா நெட்வொர்க் போன்ற குழுக்கள் ஒரு சுய-உதவி அணுகு முறையை உருவாக்கியுள்ளன. இவை பொதுவான உளவியல் பயன்படுத்தும் பாராம்பரியமான மருத்துவ மாதிரிகளுக்கு அப்பாற்பட்ட ஆதரவு மற்றும் உதவி ஆகியவற்றை வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளன. ஒரு தனி நபரின் சொந்த அனுபவங்களை மன நோய் அல்லது மன நலம் என்ற சட்டத்திற்குள் கட்டமிடாது, அந்த அனுபவம் தொடர்பான களங்கம் அல்லது அவமான உணர்ச்சியை அகற்றி, அந்த நபர் பொறுப்பான ஒரு நேர் மறையான சுய பிம்பம் உருவாக்கிக் கொள்ள இவை ஊக்கமளிக்கின்றன. மருத்துவ மனைகளுக்கிடையேயான கூட்டுப் பாங்காண்மை மற்றும் நுகர்வோர்-நடத்தும் குழுக்கள் ஆகியவை இப்போது பொது நிகழ்வாகி வருகின்றன. இவற்றில், சமூகத்திலிருந்து விலகியிருக்கும் போக்கைத் திருத்துதல், சமூகத் திறன்களை வளர்த்தல் மற்றும் மீண்டும் மருத்துவ மனையில் சேர்ப்பதைக் குறைத்தல் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு சேவைகள் வழங்கப்படுகின்றன.[167]

மாற்று மருத்துவச் சிகிச்சைகள்

ஆர்த்தோமாலிக்யூலர் சைக்கியாட்ரி ஸ்கிசோஃப்ரினியாவை நோய்களின் ஒரு குழுமம் என்றும் இவற்றில் சில நியாசின், (விடமின் பி-3)[168] போன்ற சத்துப் பொருட்கள்[169] பெரும் அளவுகளில் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படலாம் என்றும் கருதுகிறது.ஆர்த்தோமாலிக்யூலர் சைகியாட்ரியை முன் மொழிபவர்கள், சில நோயாளிகளின் நோய் முதல் இயலில் க்ளூடன் என்னும் புரதத்திற்கு எதிரிடைப் பின்விளவு ஈடுபடுத்தப்படுவதாக கோருகின்றனர்.இந்த கருத்தாக்கம் 1970ஆம் ஆண்டுகளில், ஒரு நூலாசிரியரால், மூன்று பிரித்தானிய சஞ்சிகைகளில் விவாதிக்கப்பட்டது நிரூபிக்கப்படவில்லை.

2006வது வருடத்திய ஒரு நூல் மறு ஆய்வு, செலியாக் நோய் கொண்டுள்ளவர்களுக்கும் ஸ்கிசோஃப்ரினியா கொண்டுள்ள நோயாளிகளில் ஒரு துணைப்பிரிவினருக்கும் க்ளூடன் ஒரு காரணியாக இருக்கக் கூடுமென்று கருத்து தெரிவித்தது. ஆனால், அத்தகைய ஒரு தொடர்பை இந்த ஆய்வு முடிவாக உறுதிப்படுத்தவில்லை.[170]2004வது வருடத்திய ஒரு இஸ்ரேலிய ஆய்வில், 50 ஸ்கிசோஃப்ரினியா கொண்ட நோயாளிகளிலும், அதையொத்த ஒரு பொருத்தமான குழுவிலும் க்ளுடனுக்கு எதிரான எதிரணுக்கள் அளவிடப்பட்டன. இரண்டு குழுக்களிலும் அளவிடப்பட்ட எதிரணுக்கள் ஒரு முடிவைத்தான் குறித்தன: "க்ளூடன் மிகு உணர்ச்சிக்கும், ஸ்கிசோஃப்ரினியாவுக்கும் தொடர்பு உள்ளதென்பது சாத்தியமல்ல."[171] ன சிகிச்சை முறைமைகளில், உணவு மற்றும் சத்தளிப்பு சிகிச்சைகள் பயன்படக் கூடுமென்று சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.[172]

நோய் முன்னறிவித்தல்

மருத்துவப் பண்டுவ முறை

ஜான் நாஷ், ஒரு யூஎஸ் கணித வல்லுநர், தனது கல்லூரி நாட்களில் பாரனாய்டுக்கான அறிகுறிகளை வெளிக்காட்டத் துவங்கினார்.பரிந்துரைக்கப்பட்ட மருத்துவத்தை நிறுத்தி விட்டாலும், நாஷ் தன் படிப்பைத் தொடர்ந்தார்; 1994வது வருடம் நோபெல் பரிசு வழங்கப்பெற்றார்.எ ப்யூட்டிஃபுல் மைண்ட் என்ற 2001வது வருடத்திய திரைப்படம் ஒன்றில் அவரது வாழ்க்கை சித்தரிக்கப்பட்டது.

உலக சுகாதார மையம் ஒருங்கிணைத்து 2001வது ஆண்டு வெளியான ஸ்கிசோஃப்ரினியாவைப் பற்றிய சர்வதேச ஆய்வு (ஐஎஸ்ஓஎஸ்) உலகெங்கும் ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்பட்ட 1633 தனி நபர்களிடம் நடத்தப்பட்ட நீண்ட காலப் பின் தொடர்வாகும்.இந்த பண்டு முறையிலும் அதன் வெளிப்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஒன்று அறியப்படது; பின் தொடர்வுக்காக கிடைக்கப் பெற்ற நோயாளிகளில் பாதி பேருக்கு சாதகமான வெளிப்பாடுகள் இருந்தன மற்றும் 16 சதவிகிதத்தினருக்கு ஆரம்ப கட்டப் பண்டுவத்தில் அறிகுறிகள் குறையாததை அடுத்து, குணமடைதல் தாமதமானது.மிகவும் பொதுவாக, முதல் இரண்டு வருடப் பண்டுவம் நீண்ட கால சிகிச்சையை முன்னறிவிப்பதாக இருந்தது.விரைவில் நிகழும் சமூக இடையூடும் மேன்மையான ஒரு வெளிப்பாட்டுடன் தொடர்புற்றிருந்தது.நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோரிடம் இது நீண்ட காலத்திற்கான ஒரு நோய் என்று நிலவி வந்த நம்பிக்கையை அவர்களிடமிருந்து அகற்றும் வகையில் இந்தக் கண்டுபிடிப்புக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றன.[173]அத்தகைய வெளிப்பாடுகள் பிற உளப்பிணி மற்றும் மன நோய் கொண்டிருந்தவர்களிடம் காணப்பட்ட வெளிப்பாடுகளை விட சராசரியாக குறைவாகவே இருப்பினும் வட அமெரிக்காவில் பெரும்படியான நீள வாட்டமான ஆய்வுகளின் மறு ஆய்வு வெளிப்பாடுகளிலான இந்த வேறுபாட்டைக் குறிப்பிட்டு அறிவித்தது. ஸ்கிசோஃப்ரினியா கொண்டிருந்த நோயாளிகள் மிதமான எண்ணிக்கையில் நோய் குறைவுற்றதாகவும், நலம் அடந்ததாகவும் காணப்பட்டனர்; சில பேருக்கு பராமரிப்பு சிகிச்சை தேவைப்படாது போகக் கூடுமா என்ற கேள்விக்குறியை இந்த ஆய்வு எழுப்பியது.[174]

மிகவும் கண்டிப்பான குணமடைதல் பற்றிய அளவுகோல்களுடன் (நேர்மறை மற்றும் எதிர்மறை அறிகுறிகள் ஒரே நேரத்தில் குறைதல் மற்றும் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்குப் போதுமான அளவில் சமூக மற்றும் தொழில் செயலாற்றம் இருத்தல்)நடத்தப்பட்ட ஒரு மருந்தக ஆய்வில் குணமடையும் விகிதம் முதல் ஐந்து வருடங்களில் 14 சதவிகிதமாகக் கண்டறியப்பட்டது.[175]ஒரு 5-வருட சமூக ஆய்வில், மருந்தக மற்றும் செயல்பாட்டு வெளிப்பாடுகள் கூட்டு அளவுகளில், பொதுவான குணமடைதல் 62 சதவிகிதமாகக் கண்டறியப்பட்டது.[176]

அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, டென்மார்க், செக் குடியரசு, ஸ்லோவாக்யா, ஜப்பான் மற்றும் ரஷ்யா[177] போன்ற வளர்ந்த நாடுகளை விட, வளரும் நாடுகளில் (இந்தியா, கொலம்பியா மற்றும் நைஜீரியா) ஸ்கிசோஃப்ரினியா கண்டறியப்பட்ட தனி நபர்கள் அதிக அளவில் மேன்மையான நீண்ட கால வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளதாக, உலக சுகாதார மையம் நடத்திய ஆய்வுகள் குறித்தன.

குணமடைவதை வரையறுத்தல்

நோய் குறைதல் மற்றும் குணமடைதல் ஆகியவற்றின் கச்சிதமான வரையறைகள் பரவலாக நிலை நிறுத்தப்படாமையால், ஆய்வுகளுக்கிடையேயான விகிதங்கள் ஒப்பிட இயலாதவையாக உள்ளன."ஸ்கிசோஃப்ரினியா குறைவதற்கான பணிக் குழு" ஒன்று, நோய் குறைந்தமை அறிவதற்கான தர நிலைப்படுத்தப்ட்ட அளவுகோல்கள் உருவாகப்பட வேண்டுமென்று கோரியுள்ளது. இதில் அடிப்படைக் குறிகள் மேம்படுதல் ஈடுபடுத்தப்படுகிறது; அதாவது மீதமிருக்கும் அறிகுறிகள் குறிப்பிடத்தக்க அளவில் அவை நடத்தையுடன் இடையூறாக இல்லாத அளவிலும், ஸ்கிசோஃப்ரினியாவுக்கான ஆரம்ப நோய் கண்டறிதலின்போது முகப்பு நிலையாக நியாயப்படுத்தப்பட்டதை விட குறைவான அளவில், குறைந்த தீவிரத்துடனேயே இருக்க வேண்டும்.[178]பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் தர நிலைப்படுத்தப்பட்ட குணமடைவதற்கான அளவு கோல்களை முன்வைத்துள்ளனர். இதில் டிஎஸ்எம் அறிவிக்கும் வரையறையான "மன நிலை திரிந்த நிலைக்கு முன்னதான அளவு செயல்பாடுகளுக்கு முழுமையாகத் திரும்புதல்", "முழுச் செயல்பாட்டிற்கு முழுமையாகத் திரும்புதல்" ஆகியவை போதுமான அளவில்லாத வரையறைகளாகவும், அளவிட எளிதானவையாக அல்லாமலும், ஒரு சாதாரண உளவியல் சமூக செயல்பாடு என்று சமூகம் வரையறுப்பதுடன் ஒத்திசையாததாகவும், சுய பச்சாதாபம் மற்றும் களங்கம் ஆகியவற்றிற்கு பங்களிப்பதாகவும் காணப்படுகின்றன.[179]சில மன நல தொழில்முறையாளர்கள் குண நலம் அடைவதைப் பற்றி, நுகர்வோர்/ இடர் மீண்டோர் இயக்கங்களில் உள்ளவர்களையும் உள்ளிட்ட நோய் கண்டறியப்பட்ட தனி நபர்களை விட மாறான, பார்வைகளும், கருத்துக்களும் கொண்டிருக்கலாம்.[180]ஏறத்தாழ அனைத்து ஆராய்ச்சி அளவுகோல்களிலும் காணப்பட்ட ஒரு குறிப்பிடும்படியான குறைபாடு, அவை சம்பந்தப்பட்ட நபரின் சுய மதிப்பீடுகளையும், வாழ்க்கையைப் பற்றிய அவரது உணர்வுக்ளையும் கருத்தில் கொள்ளவில்லை என்பதுதான். ஸ்கிசோஃப்ரினியா மற்றும் அதிலிருந்து குணமடைதல் என்பது சுய மதிப்பு இழப்பு, நண்பர்கள் மற்றும் குடும்பத்திலிருந்து தனித்திருத்தல். பள்ளி மற்றும் தொழிலில் இடையூறு, சமூகக் களங்கம் மற்றும் "வெறுமே திருப்பிவிடப்படவோ மறக்கப்படவோ முடியாத அனுபவங்கள்" ஆகியவற்றை ஈடுபடுத்துபவையாகும்.[120]தற்போது அதிகப் பிரபலமாகி வரும் ஒரு உருமாதிரி குணமடைதல் என்பதை ஒரு நடைமுறையாக வரையறுக்கிறது. இது போதை மற்றும் குடிப் பிரச்சினைகளிலிருந்து "குணமடைவது" என்பதை ஒத்த ஒன்று. இது குணமடைதல் என்பது, நம்பிக்கை, தேர்வு, சக்தியடைதல், சமூகத்தில் சேர்த்துக் கொள்ளப்படுதல் மற்றும் சாதனை ஆகியவற்றை நோக்கிய ஒரு தனிப்பட்ட பயணம் என ஆணித்தரமாக பதிவு செய்கிறது.[120]

முன்னறிவிப்புக் குறிகள்

மேம்பாடான நோய் முன்னறிவித்தலுடன் பல காரணிகள் தொடர்பு கொண்டுள்ளன: பெண்ணாக இருப்பது, அறிகுறிகளின் (ஊடுருவலுக்கு மாற்றான) விரைவான தொடக்கம், முதல் நிகழ்வு நாள்பட்டு நேர்வது, (எதிர்மறையாக இருத்தலை விட) நேர்மறையான அறிகுறிகள் முதன்மையாகஇருத்தல், மன நிலை மாறுபாட்டிற்கான அறிகுறிகள் இருத்தல், மற்றும் சிறந்த நோய்க்கு-முற்பட்ட செயல்பாடுகள்.[181][182]உறுதி அல்லது உளவியல் விரிதிறன் போன்ற தனி நபர்களின் பலங்களும் மற்றும் உள்ளார்ந்த வளங்களும் மேம்பட்ட முன்னறிவிப்பிற்கு தொடர்பானவையாக உள்ளன.[174] ஒரு தனி நபரின் வாழ்க்கையில் பங்கு பெறுபவர்களின் மனப்பான்மை மற்றும் ஆதரவு ஆகியவையும் முக்கியமான பாதிப்பை விளைவிக்கக் கூடும்; இதற்கு எதிர்மறையான அம்சங்களான - விமர்சனங்களின் அளவு, எதிர்ப்புணர்ச்சி, பலவந்தமாகத் தலையிடும் அல்லது கட்டுப்படுத்தும் மனப்பான்மை ஆகிய உயர் அளவிலான "வெளிப்படுத்தப்பட்ட உணர்ச்சி" -ஆகியவை நோய் நிலை மறுபடி நிகழ்வதுடன் நிலையான தொடர்புடையவையாக காணப்பட்டன.[183]முன்னறிவிப்புக் காரணிகளின்பால் நடத்தப்பட்ட பல ஆராய்ச்சிகளும் இயல்பாக ஒன்றோடொன்று தொடர்பானவற்றை ஒற்றியவையே; மேலும், காரண-விளவு உறவை உறுதி பட நிலை நிறுத்துவது என்பது பல வேளைகளில் கடினமான ஒன்று.

மரண விகிதம்

மன நோய் சிகிச்சையை மேற்கொண்டிருந்த 168,000க்கும் அதிகமான சுவீடன் நாட்டுக் குடிமகன்களின்பால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, ஸ்கிசோஃப்ரினியா சராசாரியாக பொதுவான மக்கள தொகையில் 80-85% ஆயுள் எதிர்பார்ப்புக் காலத்துடன் தொடர்புற்றிருப்பதாக காணப்பட்டது; இதில் ஆண்களை விடப் பெண்கள் சற்றே அதிக அளவில் ஆயுள் எதிர்பார்ப்புக் காலம் கொண்டிருந்தனர். பொருளின் தவறான பயன்பாடு, குண நலன் கோளாறு மாரடைப்பு மற்றும் நோயின் வன்தாக்கு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, ஸ்கிசோஃஃப்ரினியா அதிக அளவிலான ஆயுள் எதிர்பார்ப்புக் காலத்துடன் தொடர்புற்றதாக இருந்தது.[184]அடையாளம் காணப்பட்ட மற்ற காரணிகள் புகை பிடித்தல்[185], மிகக் குறைந்த அளவிலான உணவு, உடற்பயிற்சி இன்மை மற்றும் உளப்பிணி மருந்துகளின் எதிர்மறை விளைவுகள்[8] ஆகியவற்றை உள்ளடக்கும்.

ஸ்கிசோஃப்ரினியாவுடன் தொடர்புபடுத்தப்படும் தற்கொலை விகிதம் சராசரிக்கும் உயர்ந்த அளவிலானது.

இது பத்து சதவிகிதமாக காணப்பட்டது. ஆனால், ஆய்வுகள் மற்றும் புள்ளிவிபரங்களின் சமீபத்திய பகுப்பாய்வு இதை 4.9 சதவிகிதமாக மாற்றியமைத்தது. இவற்றில் பல நோயின் ஆரம்ப கட்ட காலம் மற்றும் மருத்துவ மனையில் முதன் முறையாக சேர்க்கப்படும் காலம் ஆகியனவற்றில் நிகழ்கின்றன.[186]

ஆனால், இதை விடப் பல மடங்கு அதிகமாக, தற்கொலைக்கான முயற்சிகள் நடை பெறுகின்றன.[187]இதற்குப் பல வகையான காரணங்களும், ஆபத்துக் காரணிகளும் உள்ளன.[188][189]

வன்முறை

ஸ்கிசோஃப்ரினியாவுக்கும், வன்முறை நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்பு தொடர்ந்து விவாதிக்கப்படும் ஒன்றாகும்.

வன்முறையில் ஈடுபடுபவர்களில் ஸ்கிசோஃப்ரினியா நோய் கொண்டவர்களின் சதவிகிதம், எந்த விதமான நோயும் இல்லாதவர்களை விட அதிக அளவில் உள்ளதாக அண்மைக்கால ஆராய்ச்சி தெரிவிக்கிறது; ஆயினும், ஆல்கஹாலிசம் போன்ற போதையடிமை நோய்களை விடக் குறைவாகவே உள்ளது. மேலும், சமூக மக்கள் தொகையியல் வேறு காரணிகளையும் அவை தொடர்பான காரணிகளையும் மற்றும் பொருளின் தவறான பயன்பாடு போன்றவற்றையும் கருத்தில் கொண்டால் இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு குறைகிறது அல்லது இல்லவே இல்லை என்று கூறலாம்.[190] மேற்கத்திய நாடுகளில் கொலைக் குற்றம் சாற்றப்பட்டவர்களில் 5% முதல் 10% வரை ஸ்கிசோஃப்ரினியா ஸ்பெக்ட்ரம் நோய் கொண்டவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[191][192][193]

ஸ்கிசோஃப்ரினியாவில் சைக்கோசிஸ் என்னும் உளப்பிணி நோயும் தோன்றுவது வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதற்கான ஆபத்துடன் சில சமயங்களில் தொடர்பு படுத்தப்படுகிறது. மருட்சி அல்லது பிரமைகள் ஆகியவற்றின் குறிப்பிட்ட பங்கு பற்றிய கண்டுபிடிப்புகள் ஒத்தவையாக இல்லை; ஆயினும், மருட்சியான பொறாமை உணர்வு, அச்சுறுத்தல் பற்றிய ஒரு புலனுணர்வு மற்றும் கட்டளையிடப்படுவதைப் போன்ற பிரமைகள் ஆகியவற்றை குவிமையப்படுத்துவதாக இருந்தன.ஸ்கிசோஃப்ரினியாவைக் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த ஒரு தனிப்பட்ட நபர் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவது சாத்தியமென்றும், அது கல்வி கற்பது கடினமாக இருந்த ஒரு வரலாறு, குறைந்த அளவிலான ஐக்யூ, நடத்தைக் கோளாறு, மிக விரைவிலேயே துவங்கி விடக் கூடிய பொருளைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு மற்றும் நோய் கண்டறிவதற்கு முற்பட்ட காலகட்டத்தில் தீங்கிழைக்கப்படுவது ஆகியவற்றால் வரையறுக்கப்படுவதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.[191]

ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்பட்டுள்ள தனி நபர்கள், தாங்கள் இழைக்கும் வன்முறைகளை விட அவர்களுக்கு இழைக்கப்படும் வன்முறை குற்றங்களுக்குப் பலியாவது குறைந்த பட்சம் 14 மடங்கு அதிகமானதாகும்.[194][195]இதனுடன் ஒத்துச் செல்லும் மற்றொரு கண்டுபிடிப்பு கூறுவது என்னவென்றால், பொருளின் தவறான உபயோகத்துடன், குறிப்பாக ஆல்கஹால்[196], வன்முறையில் ஈடுபடும் சிறுபான்மையினருக்கு உள்ள தொடர்பு. ஸ்கிசோஃப்ரினியாவைக் கொண்டிருக்கும் தனி நபர்களால் இழைக்கப்படும் அல்லது அவர்களுக்கு இழைக்கப்படும் வன்முறை சம்பவங்கள் குறிப்பாக ஒரு குடும்ப அமைப்பின்[197] உள்ளார்ந்த சிக்கலான சமூக ஊடாடுதலின்பால் ஏற்படுகின்றன. இது மருந்தக சேவைகள்[198] மற்றும் பரந்து பட்ட சமூக வெளியிலும்[199] ஒரு முக்கியமான விடயமாகக் கருதப்படுகிறது.

நோயியல்

பொதுவாக ஆண்களில் விரைவில் காணப்பட்டாலும், ஆண்களிலும் பெண்களிலும் ஸ்கிசோஃப்ரினியா சம அளவிலேயே ஏற்படுகிறது; இதன் ஆரம்ப கட்டம் ஆண்களில் 20-28 வயதிலும் பெண்களில் 26-32 வயதிலுமாக உள்ளது.[1]குழந்தைப் பருவத்தில் ஏற்படுவது என்பது அரிதானது,[200] அதைப் போலவே நடுத்தர வயது மற்றும் முதிர்ந்த வயது[201] ஆகியவற்றிலும் இது அரிதானது.வாழ்நாள் முழுதும் நீடிக்கும் ஸ்கிசோஃப்ரினியா - தம் வாழ்நாளில் எந்த நேரமும் ஸ்கிசோஃப்ரினியாவை அனுபவிக்கக்கூடிய நபர்களின் சதவிகிதம்- பொதுவாக 1 சதவிகிதமாக குறிக்கப்படுகிறது.இருப்பினும் 2002வது வருடம் பல ஆய்வுகளின் மீதான ஒரு முறைப்படுத்தப்பட்ட மறு ஆய்வு இந்த வாழ்நாள் முழுதும் நீடிப்பு என்பது 0.55% என்பதாகக் கண்டறிந்தது.[3]உலகெங்கும் ஸ்கிசோஃப்ரினியா ஒத்த அளவுகளில்தான் ஏற்படுகிறது என்ற அறிவு பெறப்பட்டிருந்தாலும், அதன் இருப்பு உலகின் பல பகுதிகளிலும்[202], நாடுகளுக்கு இடையிலும்[203], மற்றும் உள்ளூர் மற்றும் அண்டைய பகுதிகளிலும்[204] வேறுபடுகிறது குறிப்பிடத்தக்க அளவில் நிலையானதும் ஒப்பிடக் கூடியதாகவும் உள்ள ஒரு கண்டுபிடிப்பு,ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறிதலுக்கும் நகர்ப்புற வசித்தலுக்கும் இடையிலுள்ள தொடர்பாகும்.[59] இது போதைப் பொருள் உபயோகம், ஒரே இனக் குழு மற்றும் சமூகக் குழுவின் அளவு ஆகிய காரணிகளைக் கட்டுப்படுத்தியிருந்த போதிலும் காணப்பட்டது.செயலிழப்பிற்கு ஒரு முக்கிய காரணமாக ஸ்கிசோஃப்ரினியா அறியப்பட்டுள்ளது. 1999வது வருடம் 14 நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நாலங்கவாதம் மற்றும் முதுமை ம்றதி ஆகியவற்றை அடுத்தும், கீழங்கவாதம் மற்றும் கண்பார்வையின்மை ஆகியவற்றிற்கு முன்னதாகவும், மூன்றாவது இடத்தில் மிகவும் அதிக அளவில் செயலிழப்பு உண்டாக்குவதாக உளப்பிணி காணப்பட்டது.[205]

வரலாறு

பகுத்தறிவற்ற, புரிந்து கொள்ள முடியாத அல்லது கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளைப் பற்றிய தகவல்கள் பொதுவாக இருந்தாலும், 1800ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் ஸ்கிசோஃப்ரினியா-போன்ற ஒத்திசைவு நோய்க்குறித் தொகுதி (சிண்ட்ரோம்) கொண்டிருந்தவர்களைப் பற்றிய குறிப்புக்கள் அரிதாக இருப்பதாகத்தான் எண்ணப்படுகிறது.[206] பண்டைய எகிப்திய ஈபெர்ஸ் பாபிரஸ் பற்றிய சுருக்கமான குறிப்புகள் ஸ்கிசோஃப்ரினியா[207] வைக் குறிப்பிடுவதாக ஒரு மேல் விளக்கம் உண்டு ஆனால், மற்ற மறு ஆய்வுகள் அவைகளுக்கு இடையிலான தொடர்பு எதையும் காட்டவில்லை.[208]பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய இலக்கியத்தில் உளப்பிணி நோய் குறிக்கப்பட்டிருந்தாலும், ஸ்கிசோஃப்ரினியாவுக்கான அளவுகோலை அது பூர்த்தி செய்ததாக குறிப்பேதும் இல்லை.[209]அராபிய மருத்துவ மற்றும் உளவியல் இலக்கிய ங்களில் மத்திய காலங்களில் ஸ்கிசோஃப்ரினியாவின் சில அறிகுறிகளை ஒத்திருந்த, பயங்கரமான உளப்பிணி சார்ந்த நம்பிக்கைகளும், நடத்தையும் அறிவிக்கப்படுகின்றன. உதாரணமாக, கேனான் ஆஃப் மெடிசின் என்னும் நூலில், அவிசென்னா, ஸ்கிசோஃப்ரினியாவின் அறிகுறிகளை ஓரளவுக்கு ஒத்திருக்கும் ஒரு நிலையை விவரிக்கிறார். அதை அவர் ஜுனுன் முஃப்ரித் (தீவிரப் பித்து) என்று அழைத்தார்; மற்ற வகை மன நோய் ஜுனுன் வகைகளான மேனியா, ரேபிஸ் மற்றும் மேனிக் டிப்ரெசிவ் சைக்கோசிஸ் ஆகியவற்றிலிருந்து அதை வேறுபடுத்தியும் காட்டினார்.[210]இருப்பினும், 15ஆம் நூற்றாண்டின் பெரும் இஸ்லாமிய மருத்துவப் பாட நூலாகத் திகழ்ந்த செராஃபெடின் சபுன்கௌகுலு எழுதிய இம்பீரியல் சர்ஜரி என்னும் புத்தகத்தில் ஸ்கிசோஃப்ரினியாவை ஒத்திருக்கும் நிலை ஏதும் அறிவிக்கப்படவில்லை.[211] இவ்வாறு சரித்திர ஆதாரம் குறைவாக இருப்பதனால், ஸ்கிசோஃப்ரினியாவை (இன்றைக்கு இருக்கும் அதன் வடிவத்தில்) ஒரு நவீன நிகழ்வாக கொள்ளலாம்; அல்லது, இதற்கு மாற்றாக சரித்திர ஏடுகளில் அதனையொத்த கருத்தாக்கங்களான மெலங்காலியா அல்லது மேனியா ஆகியற்றினால் அது மறைபட்டிருக்கும் என்றும் கொள்ளலாம்.[206]

1797வது வருடம் ஃப்லிப் பினெல் எழுதிய ஜேம்ஸ் டில்லி மேத்யூஸ் பற்றிய ஒரு பெரும் நோயாளிக் குறிப்பும், விபரங்களும் 1809வது வருடம் பிரசுரமாகின. இதுவே, மருத்துவ மற்றும் உளவியல் வரலாற்றில், ஸ்கிசோஃப்ரினியா பற்றிய முதல் நிகழ்வுக் கூறாக கொள்ளப்படுகிறது.[206]முதன் முதலாக, பதின் வயதினர் மற்றும் இளைஞர்களை பாதிக்கும் ஒரு தெளிவான ஒத்திசை நோய்க்குறித் தொகுதியாக ஸ்கிசோஃப்ரினியாவை விவரித்தது, 1853வது வருடம் பெனடிக்ட் மொரெல் டெமென்ஸ் ப்ரெகோக்ஸ் (அப்படியே சொலவதானால்,ஆரம்ப கட்ட டெமென்ஷியா) என்று அறிவித்ததுதான். டெமென்ஷியா ப்ரெகாக்ஸ் என்னும் சொற்றொடர் 1891வது வருடம் அர்னால்ட் பிக் என்பவரால் ஒரு உளப்பிணி நோயாளி பற்றிய நிகழ்வறிக்கையில் பயன்படுத்தப்பட்டது. 1893வது வருடம் எமில் க்ரௌப்லின்,டெமென்ஷியா ப்ரெகோக்ஸ் மற்றும் ஒழுங்கற்ற மனநிலை (யூனிபோலார் மற்றும் பைபோலார் ஆகிய இரண்டையும் உள்ளிட்ட மேனியாக் டிப்ரெஷன் என்று கூறப்படுவது) ஆகியவற்றை வேறுபடுத்தி, மன நோய்களை வகைப்படுத்துதல் என்னும் கருத்தாக்கத்தில் ஒரு பரந்த, புதிதான, தெளிவை அறிமுகப்படுத்தினார்.டெமென்ஷியா ப்ரெகாக்ஸ் பிரதானமாக ஒரு மூளை நோய்[212] என்றும், குறிப்பாக முதுமை மறதி என்ற வடிவத்தில், அநேகமாக வாழ்வின் பிற்காலத்தில் தோன்றும் அல்ஜைமர்ஸ் நோய் போன்ற முதுமை மறதியின் மற்ற வடிவங்களிலிருந்து வேறுபட்டது என்று குரௌப்லின் நம்பினார்.[213]குரௌப்லினின் வகைப்படுத்துதல் காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளபப்ட்டது.நோயுற்ற சில நபர்கள் குணமடைந்திருந்ததாலும், சிலரில் அது இளம்வயது பித்து என்னும் நோயாகக் கண்டறியப்பட்டிருந்ததால், டெமென்ஷியா என்ற பிரயோகத்திற்கு ஆட்சேபங்கள் இருந்தன.[214]

ஏறத்தாழ, "பிளவு பட்ட மனம்" என்று பொருள்படும் ஸ்கிசோஃப்ரினியா எனும் சொல்லானது கிரேக்க வேர்ச்சொற்களான ஸ்கிஜெயின் (σχίζειν, "பிளப்பது") மற்றும் ஃப்ரென் , ஃப்ரென்- (φρήν, φρεν-, மனம்") ஆகியவற்றிலிருந்து யூஜென் ப்ளுலெர் என்பவரால் 1908வது வருடம், குணப்பாங்கு, சிந்தனை, நினைவாற்றல் மற்றும் உணர்ந்தறிவது ஆகியவற்றின் செயல்களைப் பிரித்து விளக்குவதற்காக உருவாக்கப்பட்டது.ப்ளுலெர் இதன் பிரதான அறிகுறிகளாக 4: ஃப்ளேட்டண்ட் அஃபெக்ட், ஆடிஸம், இம்பேர்ட் அசோசியேஷன் ஆஃப் ஐடியாஸ் மற்றும் அம்பிவலன்ஸ்.[215] என்பவற்றை விவரித்தார்ப்ளுலெர், தமது நோயாளிகளில் சிலர் தங்களது நிலைமை மேலும் மோசமடையாமல் குணமடைந்ததால் இந்த நோய் முதுமை மறதி அல்ல என்று உணர்ந்து அதற்குப் பதிலாக ஸ்கிசோஃப்ரினியா என்ற புதிய சொல்லைப் புகுத்தினார்.

ஸ்கிசோஃப்ரினியா என்னும் சொல், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் "பிளவுபட்ட குணப்பாங்கு" கொண்டிருப்பதாக மிகுந்த அளவில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்பட்டவர்களில் சிலர் குரல்களைக் கேட்டாலும், அந்தக் குரல்களை உண்மையான மனிதர்கள் என்று நம்பினாலும்,ஸ்கிசோஃப்ரினியாவானது, ஒரு தனி நபர் பன்முக மனப்பாங்குடையவராக மாறுவதை உட்படுத்தவில்லை.ப்ளுலெரின் ஸ்கிசோஃப்ரினியா (அப்படியே சொல்வதானால் "பிளவு பட்ட" அல்லது "சிதைந்த" மனது) என்னும் சொற்றொடரின் பொருள்தான் இந்தக் குழப்பத்திற்கு ஒரளவு காரணமாகும். இந்தச் சொற்றொடரை முதன் முதலாக "பிளவு பட்ட மனப்பாங்கு" என்ற பொருளில் கவிஞர் டி.எஸ்.எலியட் 1933[216] வது வருடம் ஒரு கட்டுரையில் பயன்படுத்தினார்.

"டெமென்ஷியா ப்ரெகாக்ஸ் நோயால் தொல்லையுற்ற" நோயாளியினால், செயிண்ட்.எலிசபெத் மருத்துவ மனையின் சுவரில் வரையப்பட்ட கீறல்-சித்திரங்கள்.

20வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸ்கிசோஃப்ரினியா ஒரு பரம்பரை நோயாகக் கருதப்பட்டு, பல நாடுகளிலும், இதற்கு ஆளானவர்கள் "யூஜெனிக்ஸ்" என்னும் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இது அதிக அளவில், நாஜிக்களின் ஜெர்மனியிலும், மற்றும் யுனைடட் ஸ்டேட்ஸ்,ஸ்காண்டிநேவியா ஆகிய நாடுகளிலும் நிகழ்ந்தது; ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களது சம்மதம் பெற்றோ, பெறாமலோ மலடாக்கப்பட்டனர்.[217][218] நாஜிக்களின் "ஆக்ஷன் டி4" என்னும் நிரலின்படி, "மனதளவில் தகுதி இல்லாதவர்கள்" என்று முத்திரை குத்தப்பட்ட பலருடன், ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்பட்ட பலரும் கொலை செய்யப்பட்டனர்.[219]

1970ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், ஸ்கிசோஃப்ரினியாவின் நோய் கண்டறியும் அளவுகோல் முறைமைகள் பெரும் சர்ச்சைக்குள்ளாயின; அவற்றிலிருந்தே இன்று கடைப்பிடிக்கப்படும் அளவுகோல்கள் உருவாயின.1971வது வருடம் ஒரு அமெரிக்க-ஐக்கிய இராச்சிய நோய் கண்டறியும் ஆய்வுக்குப் பிறகுதான், இது ஐரோப்பாவை விட அமெரிக்காவில் மிக அதிக அளவில் கண்டறியப்பட்டது என்று தெளிவானது.[220] இதன் காரணம், ஐரோப்பா பயன்படுத்திய ஐசிடி-9க்கு மாற்றாக, யூஎஸ்ஸில் டிஎஸ்எம்-II கையேட்டைப் பயன்படுத்தி செய்யப்பட்ட தளர்வு நிலையினான கண்டறியும் அளவுகோல் ஒரளவு காரணமாகும் 1972வது வருடம், சயின்ஸ் என்னும் பத்திரிகையில் "ஆன் பீயிங்க் இன் இன்சேன் பிளேசஸ் " என்ற தலைப்பில் பிரசுரமான டேவிட் ரோஸ்ஹான் ஆய்வு, யூஎஸ்ஸில் ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறிதல் தனிப்பட்ட பாகுபாடுகளைச் சார்ந்ததாகவும், நம்பகத்தன்மை இல்லாதிருப்பதாகவும் முடிவாக கூறியது.[221]சில காரணிகளின் விளைவாக, ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியும் முறைமை திருத்தப்பட்டது மட்டும் அல்லாமல், டிஎஸ்எம் கையேடு முழுவதுமே திருத்ததிற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது; இதன் விளைவாக 1980வது வருடம் டிஎஸ்எம்-III வெளியானது.[222] 1970களிலிருந்து ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறிவதற்கு 40 நிபந்தனைகள் கொண்ட அளவுகோல் விதிக்கப்பட்டு அவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.[37]

சோவியத் ஒன்றி த்தில், ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறிதல் அரசியல் காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரபல சோவியத் உளவியல் நிபுணரான ஆன்றெய் ஸ்னெழ்வ்ஸ்கி ஸ்லக்கிஷ் ப்ரோக்ரஸிவ் ஸ்கிசோஃப்ரினியா என்றொரு கூடுதலான உப-வகைப்படுத்துதலை உருவாக்கி, செயலாக்கினார். அரசியல் கோட்பாட்டை ஏற்காதவர்களை அவமானப்படுத்தி, தர்மசங்கடம் உருவாக்கக் கூடிய ஒரு விசாரணையைத் தவிர்த்து, விரைவில் சிறையிடக் கூடிய வகையில் இந்த நோய் கண்டறிதல் முறைமை பயன்படுத்தப்பட்டது.[223] சோவியத்தின் அரசியலை ஏற்காத பலரால் இது மேற்கத்தியர்களிடம் வெளியிடப்பட்டது; மேலும் 1977வது வருடம், "உலக உளவியல் கழகம்" தனது ஆறாவது உலக உளவியல் மாநாட்டில் சோவியத்தின் இந்தப் போக்கிற்கு கண்டனம் தெரிவித்தது.[224] உள்ளார்ந்திருந்த ஸ்கிசோஃப்ரினியா நோயே, அரசாங்கத்தை எதிர்க்குமாறு, அதன் அரசியலை ஏற்காதவர்களைத் தூண்டியது என்று தன் வாதத்தை தற்காத்துக் கொள்ளாது, ஸ்னெழ்வ்ஸ்கி 1980வது வருடம் வெளி நாடுகளில் தாம் வகித்து வந்த கௌரவப் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்ததன் மூலமாக, மேற்கத்திய நாடுகளுடனான தனது தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டார்.[225]

சமுதாயமும் கலாச்சாரமும்

களங்கம்

ஸ்கிசோஃப்ரினியா கொண்டுள்ள நோயாளிகள் குணமடைவதில் ஒரு பெரும் தடைக் கல்லாக இருப்பது அவர்கள் மீதான சமுதாயக் களங்கம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.[226] 1999வது வருடம் மிகப் பெரும் அளவில் பிரதிநிதித்துவம் பெறப்பட்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 12.8% அமெரிக்கர்கள் ஸ்கிசோஃப்ரினியா கொண்டுள்ள தனி நபர்கள் மற்றவர்களுக்கு எதிராக ஏதாவது வன்முறையில் ஈடுபடுவது "மிகவும் சாத்தியம்" என்று நம்பினார்கள்; 48.1% பேர் "ஓரளவு சாத்தியமானதுதான்" என்று நம்பினார்கள். 74 சதவிகிதத்திற்கு மேலானவர்கள் ஸ்கிசோஃப்ரினியா கொண்டுள்ளவர்களால் தங்களுக்கான சிகிச்சை பற்றி முடிவெடுக்க "முடியவே முடியாது" அல்லது "பெரும் அளவில் முடியாது" என்று கூறினர். நிதி மேலாண்மையைப் பொறுத்தவரையிலும் 70.2% பேர் இவ்வாறே கூறினர்.[227] ஒரு முழு-ஆய்வின்படி, 1950களிலிருந்து, உளப்பிணி கொண்டுள்ள தனி நபர்களை வன்முறையாளர்களாகப் பார்க்கும் போக்கு இரண்டு மடங்காகி விட்டது.[228]

இந்தக் களங்கத்தை[229] போக்குவதற்காக, 2002வது ஆண்டில், ஜப்பானிஸ் சொசைட்டி ஆஃப் சைகியாட்ரி அண்ட் ந்யூராலஜி ஸ்கிசோஃப்ரினியா நோய்க்கு செய்ஷின்-புன்ரெட்சு-ப்யோ  精神分裂病 (மனப் பிளவு நோய்) என்ற சொல்லுக்குப் பதிலாக டொகொ-ஷிட்சோ-ஷோ  統合失調症 ஒருங்கிணைப்பு ஒழுங்கின்மைஎன்பதைப் பயன்படுத்தினர்.

இந்தப் புதிய பெயர் உயிரியல்-சமூக உளவியல் மாதிரி விஞ்ஞானத்திலிருந்து உருவானது. இது இந்நோய் கண்டறிதலைப் பற்றி தெரிவிக்கப்பட்ட நோயாளிகளின் சதவிகிதத்தை 36.7 சதவிகிதத்திலிருந்து 69.7 சதவிகிதமாக மூன்று வருடங்களில் உயர்த்தியது.[230]

உருவக கலாசாரச் சித்தரிப்பு

எ பியூட்டிஃபுல் மைண்ட் என்ற புத்தகமும் திரைப்படமும், ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் என்னும் நோபல் பரிசு வென்ற, ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்பட்ட ஒரு கணித மேதையின் வாழ்க்கையைச் சித்தரித்தன. தேவ்ராஜ் என்னும் (அதுல் குல்கர்னி நடித்த)ஒரு மராத்தி திரைப்படம் ஸ்கிசோஃப்ரினியா உடைய ஒரு நோயாளியைப் பற்றிய சித்தரிப்பாகும். மேற்கு இந்தியாவில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், ஒரு நோயாளி மற்றும் அவரது அன்புக்கு உரியவர்களின் நடத்தை, மனப் பாங்கு மற்றும் போராட்டம் ஆகியவற்றைச் சித்தரிக்கிறது.

குடும்ப உறுப்பினர்களைப் பற்றி எழுதப்பட்ட மற்ற உண்மைச் சம்பவ புத்தகங்களும் உள்ளன: ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஆனி டேவ்ஸன்[231], டெல் மீ ஐ'ம் ஹியர் என்ற புத்தகத்தில், தம்முடைய மகன் ஸ்கிசோஃப்ரினியாவுடன் நடத்திய போராட்டத்தைப் பற்றிக் கூறினார்

தி மாஸ்டர் அண்ட் மார்கரெட்டா என்ற பல்காகௌவின் புத்தகத்தில், கவிஞர் இவான் பெஜ்டொமினிஜ், சாத்தான் (வோலேண்ட்) பெர்லியோஜின் சாவை முன்னதாகவே கூறுவதற்கு சாட்சியானபின், நிறுவனப்படுத்தப்பட்டு, ஸ்கிசோஃப்ரினியா நோய் கண்டறியப்படுகிறார். மார்க் வான்னெகுட் எழுதிய தி ஈடன் எக்ஸ்பிரஸ் என்னும் புத்தகம் ஸ்கிசோஃப்ரினியாவுடன் அவர் நடத்திய போராட்டம் மற்றும் அவர் குணமடைந்த பயணம் ஆகியவற்றைச் சித்தரிக்கிறது.

குறிப்புகள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மனப்பித்து&oldid=3925505" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை