மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் (Mayiladuthurai district) என்பது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று 24 மார்ச் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார்.[1][2][3][4][5]
மயிலாடுதுறை மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | India |
மாநிலம் | தமிழ்நாடு |
நிலப்பரப்பு | சோழ நாடு |
தோற்றுவித்தவர் | எடப்பாடி க. பழனிசாமி |
வட்டங்கள் | குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | மகாபாரதி, இ.ஆ.ப. |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | மீனா, இ.கா.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,172 km2 (453 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 38 |
ஏற்றம் | 11 m (36 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 9,17,000 |
• தரவரிசை | 34 |
• அடர்த்தி | 782/km2 (2,030/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்முறை | தமிழ் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
PIN | 609 001 |
வாகனப் பதிவு | TN 82 |
இணையதளம் | https://mayiladuthurai.nic.in |
இதன் மாவட்ட நிர்வாகத் தலைமையிடமாக மயிலாடுதுறை உள்ளது. புதிய மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு ஏப்ரல் 7, 2020 அன்று வெளியிட்டது.[6]
இம்மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய 12 சூலை 2020 அன்று சிறப்பு அதிகாரியாக ஆர். லலிதா, இ.ஆ.ப. மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக என். ஸ்ரீநாதா இ.கா.ப. நியமிக்கப்பட்டுள்ளனர்.[7][8]
மயிலாடுதுறை மாவட்டம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக 28 டிசம்பர் 2020 அன்று சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார். இப்புதிய மாவட்டமானது, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி என இரண்டு வருவாய் கோட்டங்கள், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி என நான்கு வருவாய் வட்டங்கள், 15 குறு வட்டங்கள் மற்றும் 287 வருவாய் கிராமங்களைக் கொண்டிருக்கும்.[9][10]
மாவட்ட எல்லைகள்
- கிழக்கே வங்காள விரிகுடா கடல், வடக்கே கடலூர், மேற்கே தஞ்சாவூர், தெற்கே திருவாரூர், தென்கிழக்கே காரைக்கால்(புதுச்சேரி மாநிலம்)மயிலாடுதுறையின் மாவட்ட எல்லைகளாக பெற்றுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் 2 வருவாய்க் கோட்டங்களையும், 4 வருவாய் வட்டங்களையும், 15 குறுவட்டங்களையும், 287 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[11]
வருவாய் கோட்டங்கள்
- மயிலாடுதுறை வருவாய் கோட்டம்
- சீர்காழி வருவாய் கோட்டம்
வருவாய் வட்டங்கள்
உள்ளாட்சி & ஊரக வளர்ச்சி அமைப்புகள்
நகராட்சிகள்
பேரூராட்சிகள்
ஊராட்சி ஒன்றியங்கள்
அரசியல்
மயிலாடுதுறை மாவட்டம் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும், மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி | எஸ். இராமலிங்கம் |
சட்டமன்ற உறுப்பினர்கள் | |
சீர்காழி (சட்டமன்றத் தொகுதி) | பி. வி. பாரதி |
மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி) | வி. இராதாகிருஷ்ணன் |
பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) | எஸ். பவுன்ராஜ் |
வழிபாடு & சுற்றுலா இடங்கள்
- வைத்தீசுவரன் கோயில்
- சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
- திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்
- திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்
- மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்
- சுவேதாரண்யேசுவரர் கோயில்
- தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்
- திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள்
- திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்
- கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்
- கொள்ளிடம் ஆறு மற்றும் பாலம்
- பூம்புகார்
தொழில் நிலவரம்
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும், மக்களின் முதன்மை தொழிலாக விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. நகரின் முக்கிய சுற்றுபுற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளாண்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடிநீர் பாசனம் கைகொடுப்பதால் டெல்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது.ஆண்டு தோறும் சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை நடத்தும் மாவட்ட அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது
பிரபலங்கள்
- நீலகன்ட பிரம்மச்சாரி விடுதலை போராட்ட வீரர்.வீர வாஞ்சிநாதனுக்கு பயிற்சியளித்தவர்.
- வேதநாயகம் பிள்ளை (மயிலாடுதுறை முன்சீப்பாக பணிபுரிந்தவர்).
- குன்றக்குடி அடிகள்
- சுதந்திர போராட்ட வீர மங்கை தில்லையாடி வள்ளியம்மை பூர்வீக மாவட்டமாகும்.
- தமிழ் திரையுலகின் புகழ் பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதர்
- இந்திய நூலக அறிவியலின் தந்தை சீர்காழி இரா. அரங்கநாதன்
- திரை இயக்குநர் டி. ராஜேந்தர்
- திரை இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
- திரை இயக்குநர் மல்லியம் ராஜகோபால்
- திரை ஒளிப்பதிவாளர் ஆர். டி. ராஜசேகர்
- திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி தவில் இசைக் கலைஞர்
- திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை பரதநாட்டிய ஆசிரியர்
- திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளை தவில் இசைக் கலைஞர்
- திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை - நாதஸ்வரம்