முகம்மது முர்சி
முகம்மது முர்சி (Mohamed Morsi, அரபு மொழி: محمد مرسى عيسى العياط, 8 ஆகத்து 1951 – 17 சூன் 2019) ஓர் எகிப்திய அரசியல்வாதி. இவர் எகிப்தின் ஐந்தாவது அரசுத்தலைவராக[1] 2012 முதல் 2013 வரை இருந்துள்ளார். 2013 சூன் மாதத்தில் எகிப்தில் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து இராணுவப் புரட்சி ஒன்றில் இவர் இராணுவத் தலைவர் அப்துல் பத்தா அல்-சிசியினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[2]
முகம்மது முர்சி Mohamed Morsi محمد مرسي العياط | |
---|---|
2013 இல் முர்சி | |
எகிப்தின் 5-வது அரசுத்தலைவர் | |
பதவியில் 30 சூன் 2012 – 3 சூலை 2013 | |
பிரதமர் | கமால் கன்சோரி எசாம் கான்டில் |
Vice President | மகுமுது மெக்கி |
முன்னையவர் | முகம்மது உசைன் தந்தாவி (இடைக்கால) |
பின்னவர் | அட்லி மன்சூர் (இடைக்கால) |
கூட்டுச்சேரா இயக்கத்தின் பொதுச் செயலர் | |
பதவியில் 30 சூன் 2012 – 30 ஆகத்து 2012 | |
முன்னையவர் | முகம்மது உசைன் தந்தாவி |
பின்னவர் | மகுமூத் அகமதிநெச்சாத் |
விடுதலை மற்றும் நீதிக் கட்சித் தலைவர் | |
பதவியில் 30 ஏப்ரல் 2011 – 24 சூன் 2012 | |
முன்னையவர் | புதிய பதவி |
பின்னவர் | சாத் எல்-கத்தாட்னி |
மக்கள் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1 திசம்பர் 2000 – 12 திசம்பர் 2005 | |
முன்னையவர் | நூமன் குமா |
பின்னவர் | மகுமுது அபாசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | எல் ஆத்வா, எகிப்து | 8 ஆகத்து 1951
இறப்பு | 17 சூன் 2019 கெய்ரோ, எகிப்து | (அகவை 67)
அரசியல் கட்சி | விடுதலை மற்றும் நீதிக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | முசுலிம் சகோதரத்துவம் |
துணைவர் | நக்லா மகுமுது (தி. 1979) |
பிள்ளைகள் | 5 |
முன்னாள் கல்லூரி | கெய்ரோ பல்கலைக்கழகம் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
இவர் தனது அரசுத்தலைவர் பதவிக் காலத்தில், அரசியலமைப்பைத் தற்காலிகமாக மாற்றி அமைத்தார். இதன் மூலம் அரசுத்தலைவருக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டு, நீதிமன்ற ஒப்புதல் இன்றி சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது.[3] 2013 சூன் 30 இல் அரசுத்தலைவரைப் பதவி விலகக்கோரி நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன.[4][5][6] இதனையடுத்து, போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவும், அரசியல் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் வேண்டி மூர்சிக்கு இராணுவத்தினரால் 48 மணி நேரக் கெடு விதிக்கப்பட்டது.[7] சூலை 3 ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சர் அப்துல் பத்தா அல்-சிசி, எதிர்க்கட்சித் தலைவர் முகம்மது அல்-பராதிய் ஆகியோர் தலைமையிலான இராணுவப் புரட்சிக் குழு கூடி மூர்சியைப் பதவியில் இருந்து அகற்றியது.[8][9] இராணுவம் அரசியலமைப்புச் சட்டத்தை இடைநிறுத்தி, அரசியலமைப்பு நீதிமன்றத் தலைவர் அட்லி மன்சூரை இடைக்காலத் தலைவராக அறிவித்தது.[10] இராணுவப் புரட்சிக்கு எதிராக மூர்சிக்கு ஆதரவான முசுலிம் சகோதரத்துவம் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியது. இவ்வார்ப்பாட்டங்களில் 817 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[11] இப்படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் அல்-பராதி பதவி விலகினார்.[12]
மூர்சி மீதான விசாரணைகளை அடுத்து அவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.[13] 2016 நவம்பரில் இவரது மரணதண்டனை ரத்துச் செய்யப்பட்டு, விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாயின.[14] 2019 சூன் 17 அன்று இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது, மூர்சி காலமானார்.[15][16]