திருப்பெரும்புதூர்
திருப்பெரும்புதூர் (ஆங்கிலம்:Sriperumbudur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்பெரும்புதூர் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். மேலும் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு இயங்குகிறது.
திருப்பெரும்புதூர் | |
அமைவிடம் | 12°57′45″N 79°56′43″E / 12.962500°N 79.945300°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
வட்டம் | திருப்பெரும்புதூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை • அடர்த்தி | 24,864 (2011[update]) • 1,480/km2 (3,833/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் | 19.39 சதுர கிலோமீட்டர்கள் (7.49 sq mi) • 66 மீட்டர்கள் (217 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/sriperumbudur |
திருப்பெரும்புதூர் வைணவ ஆச்சாரியரான இராமானுசர் பிறந்த தலமாகும். இப்பேரூராட்சி பகுதியில் ஆதிகேசவபெருமாள் மற்றும் இராமானுஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நினைவிடமும் இப்பேரூராட்சி பகுதியில் உள்ளது.
அமைவிடம்
திருப்பெரும்புதூர் பேரூராட்சிக்கு தெற்கே காஞ்சிபுரம் 38 கிமீ; வடக்கே சென்னை 33 கிமீ; கிழக்கே தாம்பரம் 25 கிமீ; மேற்கே திருவள்ளூர் 18 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
19.39 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 383 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4][5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,318 வீடுகளும், 24,864 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 86.26% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 950 பெண்கள் வீதம் உள்ளனர்.[6]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°58′N 79°57′E / 12.97°N 79.95°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 37 மீட்டர் (121 அடி) உயரத்தில் இருக்கின்றது.