ஹன்னிபால்
ஹன்னிபால் என்பவர் ஒரு கார்த்தேஜினியத் தளபதி மற்றும் அரசியல் மேதை ஆவார். இவர் இரண்டாம் பியூனிக் போரின் போது உரோமைக் குடியரசுக்கு எதிரான யுத்தத்தில் கார்த்தேஜின் படைகளுக்குத் தலைமை தாங்கினார். வரலாற்றின் மிகச் சிறந்த இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறார்.
ஹன்னிபால் | |
---|---|
ஹன்னிபாலைச் சித்தரிக்கும் ஒரு பளிங்கு மார்பளவுச் சிலை, இத்தாலியின் பண்டைய நகர அரசான கபுவாவில் கண்டெடுக்கப்பட்டது | |
சுதேசியப் பெயர் | 𐤇𐤍𐤁𐤏𐤋 |
பிறப்பு | கி. மு. 247 கார்த்திஜ், பண்டைய கார்த்தேஜ் (தற்கால தூனிசியா) |
இறப்பு | கி. மு. 183 – கி. மு. 181 (அகவை 64–66) லிபிச்சா, பித்தினியா (தற்கால கெப்சே, துருக்கி) |
சார்பு |
|
தரம் | கார்த்தேஜினிய இராணுவத்தின் தலைவர் |
போர்கள் |
|
துணை(கள்) | இமில்சே |
பிள்ளைகள் | ஒரு வேளை ஒரு மகன் இருந்திருக்கலாம் |
உறவினர் | கமில்கர் பார்கா (தந்தை) கசுதுருபால் (சகோதரர்) மாகோ (சகோதரர்) வெளிரிய கசுதுருபால் (மைத்துனர்) |
வேறு செயற்பாடுகள் | அரசியல்வாதி |
ஹன்னிபாலின் தந்தையான கமில்கர் பார்கா முதல் பியூனிக் போரின் போது ஒரு முன்னணிக் கார்த்தேஜினியத் தளபதியாக இருந்தார். இவரது தம்பிகள் மகோ மற்றும் கசுதுருபால் ஆகியோர் ஆவர். இவரது மைத்துனர் வெளிரிய கசுதுருபால் என்று அழைக்கப்படுகிறார். அவரும் கார்த்தேஜினிய இராணுவங்களுக்குத் தளபதியாக இருந்துள்ளார். நடு நிலக் கடல் வடிநிலப் பகுதியில் ஒரு மிகுந்த பதற்றமான காலத்தின்போது ஹன்னிபால் வாழ்ந்தார். முதலாம் பியூனிக் போரில் கார்த்தேஜைத் தோற்கடித்த பிறகு உரோமைக் குடியரசானது பெரிய சக்தியாக உருவாகியதனால் இந்தப் பதற்றம் ஏற்பட்டது. இழந்த பகுதிகளை மீட்க வேண்டும் என்ற எண்ணம் கார்த்தேஜில் இருந்தது. இது ஹன்னிபால் தனது தந்தையிடம் "என்றுமே உரோமின் நண்பனாக இருக்க மாட்டேன்" என்று செய்து கொடுத்த சத்தியத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.[1]