ஆப்கானித்தான் இராச்சியம்

ஆப்கானித்தான் இராச்சியம் (Kingdom of Afghanistan) 1926ஆம் ஆண்டில் தெற்கு, நடு ஆசியாவில் நிறுவப்பட்ட அரசியல்சட்ட முடியாட்சி ஆகும். இது முன்னதாக இருந்து வந்த ஆப்கானித்தான் அமீரகத்திற்கு மாற்றாக நிறுவப்பட்டது. ஏழு ஆண்டுகள் அமீராக இருந்த அமனுல்லாகான் இந்த இராச்சியத்தை நிறுவி இதன் முதல் அரசராக பதவி ஏற்றுக் கொண்டார்.

ஆப்கானித்தான் இராச்சியம்
د افغانستان واکمنان
Dǝ Afġānistān wākmanān
پادشاهي افغانستان,
Pādešāhī-ye Afġānistān
1926–1973
கொடி of ஆப்கானித்தான்
கொடி
சின்னம் of ஆப்கானித்தான்
சின்னம்
ஆப்கானித்தான்அமைவிடம்
தலைநகரம்காபூல்
பேசப்படும் மொழிகள்பஷ்தூ, பாரசீகம்
சமயம்
சுன்னி இசுலாம்
அரசாங்கம்அரசியல்சட்ட முடியாட்சி
அரசர் 
• 1926–1929
அமனுல்லாகான்
• 1929
இனயத்துல்லா கான்
• 1929
அபிபுல்லா கலாகானி
• 1929–1933
மொகமது நாதிர் ஷா
• 1933–1973
மொகமது சாகிர் ஷா
பிரதமர் 
• 1929–1946
மொகமது கான் (முதல்)
• 1972–1973
மொகமது மூசா சபீக் (கடைசி)
சட்டமன்றம்லோயா ஜிர்ஃகா
வரலாற்று சகாப்தம்போர்களிடைக் காலம் · பனிப்போர்
• தொடக்கம்
9 சூன் 1926
• முடிவு
17 சூலை 1973
பரப்பு
1973647,500 km2 (250,000 sq mi)
மக்கள் தொகை
• 1973
11966400
நாணயம்ஆப்கான் அஃப்கனி
ஐ.எசு.ஓ 3166 குறியீடுAF
முந்தையது
ஆப்கானித்தான் அமீரகம்
}

அமனுல்லாகானின் சீர்திருத்தங்களை எதிர்த்த பழமைவாதிகள் பலமுறை சமூகக் கலவரங்களில் ஈடுபட்டனர். 1927ஆம் ஆண்டு அமனுல்லா ஐரோப்பா சென்றிருந்தபோது புரட்சி வெடித்தது. தனது தமையன் இனயதுல்லாகான் சார்பாக பதவித் துறந்தார். ஆனால் மூன்றே நாட்களில் புரட்சித் தலைவர் அபிபுல்லா கலாக்கானி இவரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி மீண்டும் அமீரகத்தை நிலைநாட்டினார்.

10 மாதங்களுக்குப் பிறகு, அமனுல்லாவின் படைத்துறை அமைச்சர் மொகமது நாதிர் ஷா தாம் பதுங்கியிருந்த இந்தியாவிலிருந்து பிரித்தானியப் படைகளின் துணையுடன் காபூலைக் கைப்பற்றினார். இதனால் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த அபிபுல்லா கலாக்கானியை கைது செய்து அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றினர். மொகமது நாதிர் மீண்டும் இராச்சியத்தை மீட்டு தம்மை இராச்சியத்தின் அரசராக அக்டோபர் 1929இல் அறிவித்தார். ஆனால் அமனுல்லாவின் சீர்திருத்தக் கொள்கைகளை ஏற்கவில்லை. இவருக்குப் பின்னர் 1933இல் இவரது மகன் மொகமது சாகிர் ஷா அரியணை ஏறினார். இவர் 39 ஆண்டுகள் ஆப்கானித்தானின் கடைசி அரசராக இருந்தார். 1973இல் இவரது ஒன்றுவிட்ட சகோதரர் மொகமது தாவுது கான் முடியாட்சியை முடிவுக்குக் கொணர்ந்தார்; ஆப்கானித்தான் குடியரசை நிறுவினார்.

சாகிர் ஷா தலைமையில் அமைந்த ஆப்கானிய அரசு வெளியுலகுடன், குறிப்பாக சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் உறவு கொள்ள விரும்பியது.[1]

செப்டம்பர் 27, 1934இல் சாகிர் ஷாவின் அரசாட்சியில் உலக நாடுகள் சங்கத்தில் இணைந்தது. இரண்டாம் உலகப் போரின் போது, ஆப்கானித்தான் நடுநிலைமை வகித்தது. அப்போதைய பிரதமர் மொகமது தாவூது கான் தொழில்மயமாக்கவும், கல்வியை நவீனப்படுத்தவும் பெருமுயற்சிகள் மேற்கொண்டார்.[2]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை