கல்யாண் சிங்
கல்யாண் சிங் (Kalyan Singh) (பிறப்பு:1932) (இறப்பு 2021) இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருமுறை பணியாற்றியவர். இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2009 - 2014 ஆண்டுகளில் செயல்பட்டவர். பின்னர் 4 செப்டம்பர் 2014 முதல் 8 செப்டம்பர் 2019 முடிய இராஜஸ்தான் மாநில ஆளுநராக செயல்பட்டார்.[1][2] கல்யாண் சிங், உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த காலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது
கல்யாண் சிங் | |
---|---|
இராஜஸ்தான் மாநில ஆளுநர் | |
பதவியில் 4 செப்டம்பர் 2014 – 8 செப்டம்பர் 2019 | |
முன்னையவர் | மார்கரட் அல்வா |
பின்னவர் | கல்ராஜ் மிஸ்ரா |
இமாச்சலப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 28 சனவரி 2015 – 12 ஆகஸ்டு 2015 | |
முன்னையவர் | ஊர்மிளா சிங் |
பின்னவர் | ஆச்சாரிய தேவ விரதன் |
நாடாளுமன்ற மக்களவை/மாநிலங்களை உறுப்பினர் | |
நாடாளுமன்ற உறுப்பினர் for ஏடா மக்களவைத் தொகுதி | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | தேவேந்திர சிங் யாதவ் |
பின்னவர் | ராஜ்வீர் சிங் |
உத்தரப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் 24 சூன் 1991 – 6 டிசம்பர் 1992 | |
முன்னையவர் | முலாயம் சிங் யாதவ் |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பதவியில் 21 செப்டம்பர் 1997 – 12 நவம்பர் 1999 | |
முன்னையவர் | மாயாவதி |
பின்னவர் | ராம்பிரகாஷ் குப்தா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 சனவரி 1932 அத்ரௌலி, அலிகார் மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ராமாவதி |
பிள்ளைகள் | 1 மகன் 1 மகள் |
வாழிடம்(s) | ராஜ் பவன், இராஜஸ்தான் |
As of 20 சனவரி, 2009 மூலம்: [1] |
அரசியல்
முதலமைச்சர் பதவியில்
சூன் 1991 அன்று முதன் முறையாக உத்தரப் பிரதேச மாநில முதலைமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பாபர் மசூதி இடிப்பு அன்றே தனது முதலமைச்சர் பதவியை துறந்தார். பின்னர் 1997 முதல் 1999 முடிய இரண்டாம் முறையாக மீண்டும் பிரதேச மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]
மக்களவை உறுப்பினர் பதவியில்
ஏடா மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்று, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2009 முதல் ஏப்ரல் 2014 முடிய செயல்பட்டவர்.
ஆளுநர் பதவியில்
கல்யாண் சிங் 4 செப்டம்பர் 2014 முதல் 8 செப்டம்பர் 2019 முடிய இராஜஸ்தான் மாநில ஆளுநராக செயல்பட்டவர்.
மறைவு
21 ஆகஸ்டு 2021 அன்று தமது 89வது அகவையில் கல்யாண் சிங் உடல்நலக் குறைவால் லக்னோவில் மறைந்தார்.[4][5]
விருது
- பத்ம விபூசண் (2022)[6]