சியான் செமீன்
சியான் செமீன் (Jiāng Zémín; 17 ஆகத்து 1926 – 30 நவம்பர் 2022) ஒரு சீன அரசியல்வாதி ஆவார். இவர் 1989 முதல் 2002 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1989 முதல் 2004 வரை மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும், 1993 முதல் 2003 வரை சீனாவின் அரசுத்தலைவராகவும் பணியாற்றினார். மா சே துங், டங் சியாவுபிங், சீ சின்பிங் என்ற வரிசையில் சியான் சீனத் தலைமையின் மூன்றாம் தலைமுறையின் முக்கியத் தலைவராக இருந்தார்.
சியான் செமீன் Jiang Zemin | |
---|---|
江泽民 | |
2002இல் சியாங் | |
சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் | |
பதவியில் 24 சூன் 1989 – 15 நவம்பர் 2002 | |
முன்னையவர் | சாவோ சியாங் |
பின்னவர் | கூ சிங்தாவ் |
மக்கள் சீனக் குடியரசின் 5-ஆவது அரசுத்தலைவர் | |
பதவியில் 27 மார்ச் 1993 – 15 மார்ச் 2003 | |
பிரதமர் |
|
Vice President |
|
முன்னையவர் | யாங் சாங்குன் |
பின்னவர் | கூ சிங்தாவ் |
மத்திய ராணுவ ஆணையத் தலைவர் | |
பதவியில்
| |
முன்னையவர் | டங் சியாவுபிங் |
பின்னவர் | கூ சிங்தாவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கியாங்து, கியாங்சு, சீனக் குடியரசு | 17 ஆகத்து 1926
இறப்பு | 30 நவம்பர் 2022 சிங்கான் மாகாணம், சாங்காய், சீனா | (அகவை 96)
அரசியல் கட்சி | சீனப் பொதுவுடமைக் கட்சி |
துணைவர் | வாங் யெப்பிங் (தி. 1949) |
பிள்ளைகள் | சியாங் மியான்கெங் |
பெற்றோர்s |
|
முன்னாள் கல்லூரி |
|
தொழில் | மின்பொறியியல் |
கையெழுத்து | |
மத்திய குழு உறுப்புரிமை
ஏனைய அரசியல் பொறுப்புகள்
| |
1989 தியனன்மென் சதுக்க எதிர்ப்புகள், படுகொலைகளைத் தொடர்ந்து சமரச வேட்பாளராக சியான் எதிர்பாராதவிதமாக ஆட்சிக்கு வந்தார். மாணவர் இயக்கத்திற்கான ஆதரவிற்காக சாவோ சியாங் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக சியான் செமீன் நியமிக்கப்பட்டார்.[1][2] அப்போது, சாங்காய் நகரின் கட்சித் தலைவராக சியான் இருந்தார். சீன அரசியலில் "எட்டு முதியவர்களின்" ஈடுபாடு படிப்படியாகக் குறைந்ததால்,[3] சியான் 1990களின் போது நாட்டில் "முக்கிய தலைவராக" ஆவதற்கு தனது அதிகாரத்தை ஒருங்கிணைத்துக்கொண்டார். 1992 இல் டங் சியாவுபிங்கின் தெற்கு சுற்றுப்பயணத்தால் வலியுறுத்தப்பட்டதன் படி, அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற 14வது கட்சி தேசியப் பேரவையின் போது சியான் தனது உரையில் "சோசலிச சந்தைப் பொருளாதாரம்" என்ற சொல்லை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார், இது "சீர்திருத்தத்தைத் திறந்த நிலையில்" வைத்திருக்கத் துரிதப்படுத்தியது.[4]
சியானின் தலைமையின் கீழ், சந்தைச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியுடன் சீனா கணிசமான பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. 1997 இல் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆங்காங்கைத் திரும்பப் பெற்றமை, 1999 இல் போர்த்துகலில் இருந்து மக்காவைத் திரும்பப் பெற்றமை, மற்றும் வெளி உலகத்துடன் அதன் உறவுகளை மேம்படுத்தியமை இவரது காலத்தில் நடந்தேறியது, அதே வேளை பொதுவுடமைக் கட்சி நாட்டின் மீதான அதன் இறுக்கத்தையும் தக்க வைத்துக் கொண்டது. பாலுன் காங் இயக்கத்தின் ஒடுக்குமுறை உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் சியான் விமர்சனங்களை எதிர்கொண்டார்.[5] "மூன்று பிரதிநிதிகள்" என்று அழைக்கப்படும் கட்சிக் கோட்பாட்டிற்கான அவரது பங்களிப்புகள் 2002 இல் பொதுவுடமைக் கட்சியின் அரசியலமைப்பில் எழுதப்பட்டன. சியான் 2002 முதல் 2005 வரை தனது அதிகாரப்பூர்வ தலைமைப் பதவிகளில் இருந்து படிப்படியாக விலகி வந்தார். இப்பதவிகளுக்கு கூ சிங்தாவ் நியமிக்கப்பட்டார்,[6] இருப்பினும் இவர் பின்னாள் வரை பல விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தினார். சியான் செமீன் 2022 நவம்பர் 30 அன்று, இரத்தப் புற்றுநோய் மற்றும் பல உறுப்பு செயலிழப்பால் இறந்தார்.[7][8][9][10]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- பொதுவகத்தில் சியான் செமீன் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Appearances on C-SPAN