சுங்கம்
சுங்கக் கட்டணம் (Customs Duty) என்பது எந்தவொரு நாட்டிற்கும் உள்ளேயும் வெளியேயும் சர்வதேச எல்லைகளைக் கடந்து கொண்டு செல்லப்படும் சரக்குகள் மீது விதிக்கப்படும் வரியாகும்.[1][2] இத்தகைய சரக்குகளையும் அதன் இயக்கத்தையும் வரி விதித்து ஒழுங்குபடுத்துவதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரம், வேலைகள், சுற்றுச்சூழல், குடிமக்கள் போன்றவற்றைப் பாதுகாக்க ஏதுவாக பொறுப்பான அதிகாரமிக்க நிறுவனங்கள் அந்தந்த அரசுக்களால் அமைக்கப்பட்டுள்ளன.[3]
ஒரு நாட்டிற்குள் இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு சரக்குகளின் மீதும் ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் சுங்க வரி விதிக்கப்படுகிறது. பெரும்பாலும் இவை பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:[4]
- அடிப்படை சுங்க வரி (BCD)
- உண்மையான எதிர் கடமை (CVD)
- கூடுதல் சுங்க வரி அல்லது சிறப்பு கூடுதல் வரி
- பாதுகாப்பு கடமை,
- குவிப்பு எதிர்ப்பு வரி
- சுங்க வரி மீதான கல்வி செஸ்
வருவாயை முதன்மையாகக் கருத்தில் கொள்ளும்போது, வெளிநாட்டுப் போட்டியிலிருந்து உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாக்க சுங்க வரிகள் விதிக்கப்படுகிறது.[5] மேலும் சுங்கவரியின் முக்கிய நோக்கமாக 'வர்த்தக பரிவர்த்தனை செலவுகளைக் குறைப்பதற்காக பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துவது எனக்கொள்ளலாம்.[6]
இந்தியாவில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் செயல்படும் மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை இவ்வரிகளை வசூலிக்கிறது