தியோடோர் எர்ட்செல்
தியோடோர் எர்ட்செல் (Theodor Herzl, /ˈhɜːrtsəl, ˈhɛərtsəl/;[1] இடாய்ச்சு: [ˈhɛɐtsl̩]; எபிரேயம்: תאודור הֶרְצֵל Te'odor Hertsel; அங்கேரியம்: Herzl Tivadar; எபிரேயம்: בִּנְיָמִין זְאֵב),[2]; 2 மே 1860 – 3 சூலை 1904) என்பவர் ஆத்திரிய-அங்கேரிய ஊடகவியலாளரும், எழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் நவீன சியோனிசத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். எர்ட்செல் உலக சியோனிச அமைப்பை உருவாக்கி பாலத்தீனத்தில் யூதர்களுக்கான நாடு ஒன்றை அமைக்கும் நோக்கோடு யூதர்களை பாலத்தீனத்தில் குடியேற்றப் பாடுபட்டார். யூத நாட்டை உருவாக்கும் முன்னர் இவர் இறந்து விட்டாலும், இன்றைய இசுரேலின் தந்தை என இவர் போற்றப்படுகிறார்.
தியோடோர் எர்ட்செல் Theodor Herzl | |
---|---|
1897 இல் எர்ட்செல் | |
பிறப்பு | பெசுட், அங்கேரி இராச்சியம், ஆத்திரியப் பேரரசு | 2 மே 1860
இறப்பு | 3 சூலை 1904 ஆத்திரியா-அங்கேரி | (அகவை 44)
கல்லறை | 1904–1949: வியன்னா 1949–இன்று: எர்சில் மலை, எருசலேம் 31°46′26″N 35°10′50″E / 31.77389°N 35.18056°E |
இருப்பிடம் | வியன்னா |
குடியுரிமை | ஆத்திரியா-அங்கேரி |
கல்வி | சட்டம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | வியன்னா பல்கலைக்கழகம் |
பணி | ஊடகவியலாளர், நாடகாசிரியர், எழுத்தாளர், அரசியல் செயற்பாட்டாளர் |
அறியப்படுவது | புதிய அரசியல் சியோனிசத்தின் தந்தை |
வாழ்க்கைத் துணை | யூலி நாசாவர் (1889-1904) |
கையொப்பம் |
இசுரேலிய விடுதலைச் சாற்றுரையில் எர்ட்செல் "யூத அரசின் ஆன்மிகத் தந்தை" எனவும்,[3] அரசியல் சியோனிசத்திற்கு ஒரு உறுதியான, நடைமுறைப்படுத்தும் தளம் மற்றும் கட்டமைப்பைக் கொடுத்த தீர்க்கதரிசி எனவும் குறிப்பிட்டுக் கூறப்படுகிறார்.[4][5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Literature by and about Theodor Herzl in University Library JCS Frankfurt am Main: Digital Collections Judaica
- On Herzl's Diaries, Shlomo Avineri
- Original Letters and Primary Sources from Theodor Herzl பரணிடப்பட்டது 2012-05-27 at the வந்தவழி இயந்திரம் Shapell Manuscript Foundation