நூதன முரசு
நூதன முரசு அல்லது டிரம்சு (drum) தாளக்கருவிகளில் ஒன்றாகும். இது தோற்கருவிகளின் வகைப்பாட்டில் அடங்கும்.[1] முரசுகளில் குறைந்தது ஒருபுறமாவது ஒலியெழுப்பும் தோற்பரப்பு, முரசுத்தலை இருக்கும். இது ஓர் கூட்டின் மீது இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். இதன்மீது வாசிப்பவர் தமது கைகளைக் கொண்டோ முரசுக் கம்பு கொண்டோ அடித்து ஒலி எழுப்புவார். பொதுவாக ஒத்ததிர்வு கலன் முரசின் கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும். இது முரசுத்தலையை விட சற்றே குறைந்த கட்டையில் சுருதி கூட்டப்பட்டிருக்கும். தவிரவும் வந்திரதம் போன்று கைகளைத் தேய்த்து ஒலி எழுப்பும் வேறு சில திறன்களும் பயன்படுத்தப்படுகின்றன. முரசுகளும் பேரிகைகளும் உலகின் மிகவும் தொன்மையான இசைக் கருவிகளாகும். பல நூற்றாண்டுகளாக இவற்றின் அடிப்படை வடிவமைப்பு மாறவில்லை.[2]
நூதனமுரசுகள் பாட்டொன்றில் தாளத்தை (நேர இடைவெளியை) பராமரிக்க இசைக்கப்படுகின்றன. காட்டாக ஒரு பாட்டை வேகமாகவோ மெதுவாகவோ பாட முரசுகள் வேகமாகவோ மெதுவாகவோ இசைக்கப்படுகின்றன. முரசு ஒரு தாள இசைக்கருவி. அதாவது அடிப்பதால் எழும் ஒலியைக் கொண்டது. ஜால்ராக்களும் கோவில்மணிகளும் கூட தாளயிசைக் கருவிகளே. மரக்கட்டை கூட தாளமிட ஏதுவாகும்.
முரசுகள் தனியாகவும் பல்வேறு முரசுகளின் கூட்டணியாகவும் இசைக்கப்படுவதுண்டு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டதாக பாங்கோ முரசு அல்லது டிம்பனி வாசிக்கப்படுகின்றன. தற்கால விபுணவியில் பலவகை முரசுகளும் ஜால்ராக்களும் ஒருங்கே அமைக்கப்பட்டு ஒரே கலைஞரால் வாசிக்கப்படுகின்றன. இவை பாப்பிசை, ராக், ஜாஸ், நாடு, புளூஸ், மற்றும் திரையிசையில் மிகவும் பயன்படுத்தப்படுகின்றன.
பயன்பாடுகள்
நூதன முரசுகள் வழக்கமாக கையில் அடிப்பதன் மூலம் அல்லது ஒன்று, இரண்டு குச்சிகளைக் கொண்டும் இசைக்கப்படுன்றன. மர குச்சிகள் மற்றும் மென்மையான குமிழ்கள் கொண்ட குச்சிகளின் உள்ளிட்ட பல்வேறு குச்சிகள் ஒலி எழுப்பப் பயன்படுத்தப்படுகின்றன. ஜாஸ் இசையிலும், பல பாரம்பரிய கலாச்சாரங்களில் நூதன முரசுகள் ஒரு குறியீட்டு செயல்பாடு மற்றும் மத விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது.நூதன முரசு பெரும்பாலும் இசை சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கை நூதன முரசு பலவிதமான மக்களால் எளிதாகப் பயன்படும் சாதனமாகும்.[3]
பிரபல இசை வடிவங்கள் மற்றும் ஜாஸ் போன்றவற்றில் நூதன முரசு பொதுவாக ஒரு முரசுப் பெட்டி அல்லது நூதன முரசுத் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு தாள ஒலிகள் உண்டாக்கப்படுகின்றன அல்லது கடின ராக் இசை வகைகளிலும் இக்கருவி இசைக்கப்படுகிறது.
புருண்டி போன்ற இடங்களில் நூதன முரசுகள் தெய்வீக அந்தஸ்தை வழங்கின. அங்கு அவை காரிண்டா ராஜாவின் சக்திக்கு அடையாளமாக கருதப்பட்டன.
கட்டுமானம்
நூதன முரசுக் கூடுகள் ஏறக்குறைய எப்போதும் வளைந்த வட்ட வடித்துடன் கூடிய திறப்புகளைக் கொண்டுள்ளன. மற்ற வகை முரசுகளில் பயன்பாட்டைப் பொருத்து இவ்வடிவங்கள் பரவலாக மாறுபடுகின்றன. மேற்கத்திய இசை பாரம்பரியத்தில் வழக்கமாக உருளை வடிவ முரசுகள் பயன்படுத்தப்பட்டாலும் எடுத்துக்காட்டாக டிம்பாணி முரசிச் கிண்ண வடிவ கூட்டுச்சட்டம் பயன்படுத்துகிறது. [2] மற்ற வடிவங்களில் சட்டக வடிவமைப்பு (தார், போத்ரன்),மழுக்கக்கூம்பு (போங்கோ டிரம்ஸ், அஷிகோ), கும்பா வடிவம் (டிஜெம்பே) மற்றும் இணைக்கப்பட்ட மழுக்கக்கூம்பு (பேசும் முரசு) ஆகியவை அடங்கும்.
நூதன முரசுகளின் உருளை வடிவக் கூடுகளின் ஒற்றைப் பக்கத்தில் திறந்தோ (திம்பானி இசைக்கருவி) அல்லது இரண்டு பக்கங்களிலும் ஒரு தலையைக் கொண்டோ (மிருதங்கம்) உருவாக்கப்படலாம். ஒற்றைத்தலை நூதன முரசுகளில் தோலினைக் கொண்டு இணைக்கப்பட்ட இடைவெளிகளில் மூடப்பட்டோ அல்லது உள்ளீடற்ற உருளையின் ஒரு முனையில் கட்டப்பட்டோ இருக்கும். இருதலை நூதன முரசுகளில் இரண்டு முனைகளும் மூடப்பட்டு பெரும்பாலும் இரு தலைகளுக்கிடைளே ஒரு சிறிய துளை அல்லது இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். முரசுன் கூடு ஒத்திசைந்த அறையை உருவாக்குகி அதிக சுருதி கொண்ட ஒலியினை உருவாக்குகிறது.[4] இவற்றிலிருந்து விதிவிலக்காக ஆப்பிரிக்க பிளவு நூதன முரசு ஒரு உள்ளீடற்ற மரத்தண்டிலிருந்தும், கரீபியன் எஃகு முரசுகள் உலோகப் பீப்பாயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. சில வகை இரு தலை முரசுகள் கம்பித் தொகுப்புகள் மேல் தலை மற்றும் கீழ் தலை ஆகியவற்றை குறுக்கும் நெடுக்குமாக இழுத்து கட்டப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
நவீன இசைக்குழு மற்றும் கச்சேரி நூதன முரசுகளில் தலையானது திறந்த பகுதியில் வைக்கப்படுகிறது, இதையொட்டி கூடுகளின் விளிம்பில்இழுப்பு கோல்கள் என்றழைக்கப்படும் கம்பிகள் சுற்றுக்கூட்டின் பூணில் திருகுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவை முரசின் தலையின் அழுத்தத்தை தளர்த்த அல்லது இறுக்க அத்தண்டின் மூலம் சரிசெய்ய முடியும். இத்தகைய அமைப்பு பல நூதனமுரசுகளில் ஆறு முதல் பத்து தண்டுகள் உள்ளன. நூதன முரசுகளிள் ஒலியானது பல்வேறு மாறிகளைப் பொறுத்து வேறுபடுகின்றன. வடிவம், கூட்டின் அளவு மற்றும் தடிமன், கூடு உருவாக்கப்பொருள், கட்டு வளையப் பொருள். முரசுத்தலை செய்யப்பட்ட பொருள், முரசுத்தலை இறுக்கம், முரசின் நிலை, இடம், அடிப்புத் திசைவேகம், கோணம் ஆகியவை ஒலியின் தன்மையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. [5]
இறுக்கமான தண்டுகள் கண்டுபிடிப்பதற்கு முன்னர், கயிறு அமைப்புகள் போன்ற வார்ப்பட்டைகளால் இழுத்து இணைக்கப்பட்டன. (டிஜெம்பே அல்லது ஈவ் டிரம்ஸ் போன்ற முரசுகளில் முறுக்குகள் மற்றும் கயிறுகள் மூலம் தலை இறுக்கம் கூட்டவோ குறைக்கவோ செய்யப்படுகின்றன) .இந்த முறைகள் அரிதாக இன்று பயன்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் இராணுவ அணிவகுப்பு , அணி நடை பயிற்சிகளில் இவ்வகை முரசுகள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பேசும் முரசின் ( மேல் மற்றும் கீழ் தலைகள் இணைக்க)கயிறுகளை இழுப்பதன் மூலம் தற்காலிகமாக இறுக்க முடியும்
ஒலி
நூதன முரசு உருவாக்கும் ஒலி, அதன் வகைகள், உருவங்கள் மற்றும் முரசுக் கூடு கட்டுமானம், முரசுத் தலையின் வகை மற்றும் முரசுத்தலையின் இறுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. பல்வேறு நூதனமுரசுகளின் ஒலிகள் இசையில் வேறுபட்ட பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.[6] உதாரணமாக, நவீன டாம்-டாம் டிரம் . இது ஒரு ஜாஸ் முரசு உயர்ந்த சாய்ந்த, ஒத்ததிர்வு இசையை எழுப்பும். ராக் முரசு உரத்த, வறண்ட மற்றும் குறைந்த சுருதி ஒலியை எழுப்புகின்றன. இந்த முரசுகள் வெவ்வேறு ஒலிகள் தேவைப்படுவதால் அவற்றின் கட்டுமானத்தில் வித்தியாசமாக சுருதிகூட்டப்பட்டிருக்கும். [7]
முரசு ஒலிக்கும்போது முரசுத் தலை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வகை முரசுத் தலையும் அதன் சொந்த இசை நோக்கத்திற்காக உதவுகிறது மற்றும் அதன் சொந்த தனித்துவமான ஒலியினைக் கொண்டு உள்ளது. இரட்டை அதிர்வெண் முரசுத்தலைகள் அதிகமான அதிர்வெண் கூடிய தாளத்தை உண்டாக்க மிகவும் பொருத்தமானது ஆகும். முரசுத் தலைகள் ஒரு வெள்ளை நிறமான கடினப் பூச்சு கொண்டதாகவும் சிறிது மாறுபட்ட சுருதி உற்பத்திக்கும் மைய வெள்ளி அல்லது கருப்பு புள்ளிகளுடன் டிரம் தலைகள் உருவாக்கப்படுகின்றன. மற்றும் சுற்றளவு சுருதி வளையங்கள் கொண்ட முரசுத் தலைகள் பெரும்பாலும் அதீத சுரங்களை அகற்றும். சில ஜாஸ் இசைக்கலைஞர்கள் தடித்த முரசுத் தலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பார்கள். ஒற்றை சுர முரசு தலைகள் அல்லது பூச்சு இல்லா டிரம் தலைகளை தேர்ந்தெடுப்பதில்லை. ராக் இசைக்கலைஞர்கள் பெரும்பாலும் தடிமனான அல்லது பூசிய முரசுத் தலைகளை விரும்புகிறார்கள்.
நூதன முரசின் ஒலிவை பாதிக்கும் இரண்டாவது மிகப்பெரிய காரணி கூட்டுக்கு எதிராக தலை இறுக்கம் ஆகும். கயிறு முரசின் தலை மற்றும் முரசுக்கூட்டைச் சுற்றிலும் இழுத்துக்கட்டும் போது தண்டுகளுடன் இறுக்கம் இருக்கும்போது, தலையின் அழுத்தம் சரிசெய்யப்படலாம்.இநுக்கம் அதிகரிக்கும் போது, ஒலி வீச்சு குறைந்து, அதிர்வெண் அதிகரிக்கிறது, இதனால் சுருதி அதிகமானது மற்றும் ஒலிவீச்சு குறைகிறது
முரசுக் கூட்டின் வகை முரசு உண்டாக்கும் ஒலியை பாதிக்கும். ஏனெனில் முரசுக் கூட்டில் தோன்றும் அதிர்வுகள் ஒலி அளவை அதிகரிக்கவும் உற்பத்தி செய்யும் ஒலி வகைகளை கையாளவும் பயன்படுத்தப்படுகிறது. முரசுக் கூட்டின் பெரிய விட்டம் குறைந்த சுருதியையும், பெரிய முரசு ஆழம் சத்தமான சுருதியையும் உருவாக்குகின்றன. மேலும் முரசுக் கூட்டின் தடிமன் முரசின் ஒலியைத் தீர்மானிக்கிறது. மகாகனி மரங்கள் குறைந்த சத்தத்தின் அதிர்வெண் எழுப்புகிறது மற்றும் அதே வேகத்தில் அதிக அதிர்வெண்களை கொண்டுள்ளன.
வரலாறு
சீனாவில் கி.மு. 5500-2350 வரையிலான காலத்திய நியோலித்திக் கலாச்சாரத்தில் முதலைத் தோலினாலான முரசுகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.[8][9] இவ்வகை முரசுகள் மதச்சடங்குகள் மற்றும் சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. [10]
வட வியட்நாமின் வெண்கல காலத்திய டாங் சன் கலாச்சாரத்தின் வெண்கல தாங் சொன் முரசு தயாரிக்கப்பட்டது அவர்கள் அலங்காரமான ஞ்சாக் முரசையும் பயன்படத்தினர். [11].
வகைகள்
|
|
|
|