மிகுவெல் உலோபசு டி லெகாசுபி
மிகுவெல் லோபெசு டெ லெகாசுபி (Miguel López de Legazpi [1](c. 1502 – ஆகத்து 20, 1572), பாசுக்கு கடல்காண் பயணியும் கிழக்கிந்தியத் தீவுகளில் முதல் எசுப்பானியக் குடியிருப்பை நிறுவியவரும் ஆவார். இவர் எல் அடெலான்டடொ என்றும் எல் வீயோ (மூத்தவர்) என்றும் அறியப்படுகின்றார். புதிய எசுப்பானியாவிலிருந்து (தற்கால மெக்சிக்கோ) அமைதிப் பெருங்கடலைக் கடந்து வந்த லெகாசுபி 1565இல் பிலிப்பீன்சில் செபு நகரத்தை நிறுவினார். பிலிப்பீன்சும் குவாம், மரியானா தீவுகள் போன்ற மற்ற அமைதிப் பெருங்கடல் தீவுக்கூட்டங்களும் அடங்கிய எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் முதல் தலைமை ஆளுநராகப் பணியாற்றினார். பல்வேறு உள்நாட்டு அரசுகளுடனும் அரசர்களுடனும் அமைதி உடன்பாடு கண்டு மிகுவல் லோபெசு டெ லெகாசுபி உருவாக்கிய எசுப்பானியக் கிழக்கிந்தியாவிற்குத் தலைநகராக மணிலாவை 1571 இல் நிறுவினார்.[1] பிலிப்பீன்சின் அல்பே மாநிலத்தின் தலைநகரமான லெகாசுபி நகரம் இவர் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
மிகுவல் லோபெசு டெ லெகாசுபி Miguel López de Legazpi | |
---|---|
எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் தலைமை ஆளுநர் | |
பதவியில் ஏப்ரல் 27, 1565 – ஆகத்து 20, 1572 | |
ஆட்சியாளர் | பிலிப்பு II |
பின்னவர் | குயிடொ டெ லாவெசரிசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மிகுவல் லொபெசு டெ லெகாசுபி c. 1502 சுமார்ராகா, கிபுசுகோவா, காசுத்தீல் இராச்சியம் |
இறப்பு | ஆகத்து 20, 1572 (அகவை 69–70) மணிலா, எசுப்பானியக் கிழக்கிந்தியா |
இளைப்பாறுமிடம் | சான் அகஸ்தீன் தேவாலயம், மணிலா]] |
மேற்சான்றுகள்
வெளியிணைப்புகள்
- Confirmation of López de Legazpi's Title as Governor and Captain-General[தொடர்பிழந்த இணைப்பு] (Article)
- "Mga Conquistador Ng Pilipinas" (Invasions of the Philippines by European and Chinese would-be conquerors and the fierce resistance, intermittently successful, ultimately doomed, by scattered bands of fishermen and rice farmers), elaput.org