1066
ஆண்டு
1066 (MLXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: |
|
ஆண்டுகள்: |
|
1066 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1066 MLXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1097 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1819 |
அர்மீனிய நாட்காட்டி | 515 ԹՎ ՇԺԵ |
சீன நாட்காட்டி | 3762-3763 |
எபிரேய நாட்காட்டி | 4825-4826 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1121-1122 988-989 4167-4168 |
இரானிய நாட்காட்டி | 444-445 |
இசுலாமிய நாட்காட்டி | 458 – 459 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1316 |
யூலியன் நாட்காட்டி | 1066 MLXVI |
கொரிய நாட்காட்டி | 3399 |
நிகழ்வுகள்
இங்கிலாந்து
- சனவரி 5 – 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த எட்வர்டு மன்னர் இலண்டனில் இறந்தார். அரோல்ட் காட்வின்சன் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
- சனவரி 6 – அரோல்ட் காட்வின்சன், இரண்டாம் அரோல்டு என்ற பெயரில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.[1]
- மார்ச் 20 – ஹேலியின் வால்வெள்ளி சுற்றுப்பாதையை அடைந்தது. வால்வெள்ளி காணப்பட்டமை பேயூ திரைக்கம்பளத்தில் பதிவானது.
- செப்டம்பர் 12 – வில்லியம் 700 போர்க்கப்பல்கள் அடங்கிய தாக்குதல் படையைத் தயாரித்தார்.
- செப்டம்பர் 18 – நோர்வே மன்னர் அரால்டு ஆர்டிராடா இசுக்கார்பரோ கரையை அடைந்து இங்கிலாந்தை முற்றுகையை ஆரம்பித்தார்.
- செப்டம்பர் 25 – இசுட்டாம்போர்ட் பால சமரில் இரண்டாம் அரோல்டு மன்னர் நோர்வே படைகளைத் தோற்கடித்தார்.
- செப்டம்பர் 27 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர்.
- செப்டம்பர் 28 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: வில்லியம் பெவென்சி என்ற ஆங்கிலேயக் கரையில் தரையிறங்கி, ஏசுட்டிங்க்சு நோக்கி நகர்ந்தான்.[2]
- அக்டோபர் 14 – ஹேஸ்டிங்ஸ் சண்டை: வில்லியம், இரண்டாம் அரோல்டும் ஏசுட்டிங்சு சமரில் மோதினர். இச்சமரில் இரண்டாம் அரோல்டு கொல்லப்பட்டார்.
- அக்டோபர் 15 – எட்கார் ஏத்தலிங் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. விரைவில் தனது ஆட்சியை வில்லியத்திடம் ஒப்படைத்தார்.
- திசம்பர் – வில்லியம் இறுதியில் இலண்டனை அடைந்தார்.
- டிசம்பர் 25 – வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முதலாம் வில்லியம் என்ற பெயரில் முடிசூடினார்.
ஐரோப்பா
- மேற்கு சிலாவ் படைகளால் எடெபி நகரம் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டது.[3]
- செனோவாக் குடியரசு, பீசாக் குடியரசு மீது கடற்படைத் தாக்குதலை ஆரம்பித்தது.[4]
- சுவீடன் மன்னர் இசுட்டென்கில் 6 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.
- இரண்டாம் மாக்னசு நோர்வே மன்னராக முடிசூடினார். இவர் மேற்கு, வடக்கு நோர்வேக்களை ஒன்றிணைத்தார்.
- டிசம்பர் 30 – முசுலிம் கும்பல் ஒன்று கிரனாதாவில் அரச அரண்மனையைத் தாக்கி, பெருமாளவு யூதக் குடிமக்களைக் கொலை செய்தது.[5]
ஆசியா
- இலங்கையில் சோழர் ஆட்சி (993–1077): முதலாம் விஜயபாகு மன்னர் சோழர்களின் இலங்கைத் தலைநகரமான பொலன்னறுவை இராச்சியம் மீது முதலாவது தாக்குதலைத் தொடுத்தார்.
- கெமர் பேரரசு: இரண்டாம் உதயாதித்தியவர்மனின் ஆட்சி முடிவடைந்து சதாசிவபாதன் என்ற மூன்றாம் ஹர்சவர்மனின் ஆட்சி ஆரம்பமானது.
பிறப்புகள்
இறப்புகள்
- சனவரி 5 – எட்வர்டு, இங்கிலாந்து மன்னர்
- ஸ்ரீபதி, இந்திய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1019)
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை