1676
1676 (MDCLXXVI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1676 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1676 MDCLXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1707 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2429 |
அர்மீனிய நாட்காட்டி | 1125 ԹՎ ՌՃԻԵ |
சீன நாட்காட்டி | 4372-4373 |
எபிரேய நாட்காட்டி | 5435-5436 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1731-1732 1598-1599 4777-4778 |
இரானிய நாட்காட்டி | 1054-1055 |
இசுலாமிய நாட்காட்டி | 1086 – 1087 |
சப்பானிய நாட்காட்டி | Enpō 4 (延宝4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1926 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4009 |
நிகழ்வுகள்
- ஜனவரி 29 - மூன்றாம் பியோதர் உருசியாவின் பேரரசனாக முடி சூடினார்.
- பெப்ரவரி 10 - மாசச்சூசெட்ஸ் லான்காஸ்டர் நகரைத் தாக்கிய நிப்முக் பழங்குடியினர் மேரி ரோலண்ட்சன் என்ற ஆங்கிலேயக் குடியேறியைச் சிறைப் பிடித்துச் சென்று மே மாதம் வரை வைத்திருந்தனர்.
- மார்ச் 29 - பிராவிடென்ஸ் இந்தியப் பழங்குடியினரால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
- மே 26 - இங்கிலாந்து, சவுத்வார்க் நகர மண்டபம் தீப்பிடித்து அழிந்தது, 624 வீடுகளும் எரிந்து சேதமாயின.
- சூன் 19 - தம்மிடம் சரணடையும் இந்தியப் பழங்குடிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுமென மாசச்சூசெட்ஸ் நிருவாகம் அறிவித்தது.
- சூலை 2 - கனெடிகட், றோட் தீவு ஆகிய இடங்களில் பெருமளவு ஆல்கோன்கியன் பழங்குடிகள் சிறைப் பிடிக்கப்பட்டு 13 குடியேற்றங்களுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
- சூலை 27 - பாஸ்டனில் கிட்டத்தட்ட 200 நிப்முக் பழங்குடியினர் சரணடைந்தனர்.
- ஆகத்து 12 - நியூ இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் குடியேறிகளுக்கு எதிராகப் போரில் ஈடுபட்ட வம்பனோகுசு பழங்குடியினரின் தலைவர் "பிலிப்பு மன்னன்" ஆல்டர்மான் என்ற பழங்குடி இந்தியனால் கொல்லப்பட்டார்.
- செப்டம்பர் 19 - ஜேம்சுடவுன் நேத்தானியல் பேக்கனின் படையினரால் முற்றாக எரிக்கப்பட்டது.
- அக்டோபர் 17 - உதுமானியப் பேரரசுக்கும் போலந்து-லித்துவேனியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- டிசம்பர் - ஓலி ரோமர் ஒளியின் வேகத்துக்கான முதலாவது அளவீட்டை அறிவித்தார்.
- உருசிய-துருக்கி போர் ஆரம்பமானது.
- எதியோப்பியாவில் முசுலிம்கள் கிறித்தவர்களுடன் கலக்காமல் தனியாக வசிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.
- ஆன்டன் வான் லீவன்ஹூக் நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்தார்.
- பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி புதுச்சேரியில் கோரமண்டல் கரையில் புதிய தளம் ஒன்றை அமைத்தனர்.
- யோசப் வாசு அடிகள் கோவா பேராயரினால் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[1]
பிறப்புகள்
இறப்புகள்
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை