எகிப்தின் முதல் வம்சம்
எகிப்தின் முதல் வம்சம் (First Dynasty of Egypt அல்லது Dynasty I) பண்டைய எகிப்தை கிமு 3100 முதல் கிமு 2900 முடிய 200 ஆண்டுகள் ஆண்டது.[2] இம்முதல் வம்ச மன்னர் நார்மெர் ஆட்சியில் மேல் எகிப்தின் நிலப்பரப்புகளையும், கீழ் எகிப்தின் நிலப்பரப்புகளையும் ஒன்றிணைத்து பண்டைய எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது. இவ்வம்சத்தினர் ஆட்சியின் போது பாபிரஸ் எனும் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
பண்டைய எகிப்து | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 3100–கிமு 2900 | |||||||||
தலைநகரம் | தினீஸ்[1] | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 3100 | ||||||||
• முடிவு | கிமு 2900 | ||||||||
|
முதல் வம்ச மன்னர்களின் ஆட்சியில் பண்டைய எகிப்தின் தலைநகராக தினீஸ் நகரம் விளங்கியது. 2013-இல் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்ககரிமக் காலக்கணிப்பின் படி, எகிப்தின் முதல் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஹோர்-அகா-வின்[3] ஆட்சிக் காலம் (கிமு 3218–3035) முதல் துவங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது.[4]
எகிப்தின் முதல் வம்ச ஆட்சியாளர்கள்
பண்டைய எகிப்தின் வரலாற்றின் படி, எகிப்தின் முதல் வம்சத்தின் ஆட்சியாளர்கள் கீழ் வருமாறு:
பெயர் | உருவம் | குறிப்புகள் | ஆட்சிக் காலம் |
---|---|---|---|
நார்மெர் | கீழ் எகிப்தையும், மேல் எகிப்தையும் ஒன்றிணைத்தவராக கருதப்படுகிறார். | ||
ஹோர்-ஆகா | |||
ஜெர் | |||
ஜெத் | பட்டத்து அரசி மெர்நெய்த் | ||
டென் | இரு முடிகள் அணிந்தவன் | ||
அட்ஜிப் | கிரேக்க வடிவம்:மிபிடோஸ்[7] | ||
செமெர்கெத் | கிரேக்கப் பெயர்: செமெம்பிசெஸ். | ||
குவா | கிரேக்கப் பெயர்: பினெட்ச்சஸ், 33 ஆண்டுகள் எகிப்தை ஆண்டவர் | ||
நெபர்கா | மிகக் குறைந்த காலம் ஆட்சி செய்தவர். | ||
ஹோரஸ் பேர்டு | குறைந்த காலம் ஆட்சி செய்தவர் |
எகிப்தின் முதல் வம்சத்தின் பார்வோன்கள் குறித்த செய்திகள் சில தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் மூலமே அறிய முடிகிறது.[8][9][10] அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பலெர்மோ கல்லின்[11] குறிப்புகள் மூலமே எகிப்தின் முதல் வம்சத்தின் நான்கு ஆட்சியாளர்களின் வரலாற்றுக் குறிப்புகள் மட்டுமே அறியமுடிகிறது. [12]
படக்காட்சிகள்
- சுண்ணாம்புக் கல் தட்டு, பார்வோன் கல்லறை, செமெர்கேத்
- பல்வேறு வண்ண மணிகளுடன் கூடிய கழத்தணி
- மட்பாண்ட குடுவை
மனித பலி
முதல் வம்சத்தின் பார்வோன்கள் இறப்பின் ஈமச்சடங்கின் போது நரபலி இடுவது வழக்கமாக இருந்தது.[13] இறந்த மன்னர்களின் சவத்தை பெரும் கல்லறை கட்டி அடக்கம் செய்யும் போது, கழுதை போன்ற சில விலங்கினங்களையும் பலி கொடுத்தனர்.
மறு உலக வாழ்க்கையின் பொருட்டு பார்வோன் டிஜெர் கல்லறையில் 338 மனிதர்கள் மற்றும் விலங்குகள் பலி கொடுத்திருப்பது தொல்லியல் ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளது. [13] என்ன காரணத்தினாலோ இம்முதல் வம்ச மன்னர்களின் காலத்திற்குப் பின்னர் பார்வோன்களின் கல்லறையில் நரபலி மற்றும் விலங்களை பலி கொடுப்பதை நிறுத்தப்பட்டது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
- Kuhrt, Amélie (1995), The Ancient Near East: c. 3000–330 BCE, London: Routledge, ISBN 978-0-415-01353-6.
- Shaw, Ian (2000), The Oxford History of Ancient Egypt, Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், ISBN 0-19-280458-8