தமிழர் வரலாற்றுக் காலக்கோடு
தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கிமு 2000-ல் தொடங்கி இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆண்டோர், இன்னல்கள் என முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி, தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைந்து முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது இக் காலக்கோடு. கல்லாயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இக்காலத் தமிழர்கள் வரை அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், வெற்றிகளையும் தோல்விகளையும், ஏற்றங்களையும் இறக்கங்களையும் அறிய தமிழர் வரலாற்றுக் காலக்கோடு பயன்படுகிறது.
வரலாற்றுக்கு முந்திய காலம்
- சுமார் கி.மு. 150,000-100,000 - வட தமிழ் நாட்டில் கோமின்ச், அக்யூலியன் தொழில் நுட்பங்கள் இருந்ததற்கான சான்றுகள்.[1]
- சுமார் கி.மு. 30,000 - வட தமிழ் நாட்டில் பழைய கற்காலம்[2]
- சுமார் கி.மு. 3000 - 1400 - பையம்பள்ளியில் புதிய கற்காலம்[3]
- சுமார் கி.மு. 2,000 - 300 - தமிழகத்தின் இரும்புக்காலம்[4][5]
முற்சங்க காலம்
- சுமார் 1,000-300 கி.மு.- பெருங்கற்காலம்
- சுமார் 600 கி.மு.- தமிழ்ப் பிராமி நடைமுறைத் தமிழ் எழுத்தாகியது.[6]
- சுமார் 500 கி.மு.- தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் தொல்காப்பியரால் எழுதப்படுகிறது[7]
சங்ககாலம்
- சுமார் கி.மு. 500 - சங்ககாலப் பாண்டியர்களால் தமிழக முத்திரை காசுகள் வெளியிடப்பட்டன.[8]
- சுமார் கி.மு. 300 - மெகஸ்தெனஸ் இந்தியா வருகை. பண்டையா என்னும் அரசி பாண்டியர் நாட்டை ஆண்டதாகக் குறிப்பு.[9]
- சுமார் கி.மு. 250 - அசோகர் கல்வெட்டுகல்வெட்டு[10] தமிழகத்தின் நான்கு பேரரசுகள் (சேரர், சோழர், பாண்டியர், வேளிர்) பற்றிப் பதிகின்றது [11]
- சுமார் கி.மு. 200 - நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியில் சமண மதம் தமிழகத்தில் ஆதரிக்கப்படுகிறது..[12][13]
- சுமார் கி.மு. 200- எழுத்து பரவலாகி, தமிழ் பிராமியானது தமிழ் எழுத்தின் முன்னோடியாகி வட்டெழுத்தைத் தோற்றுவிக்கிறது[14]
- சுமார் கி.மு. 200 - சங்க இலக்கிய நூல்கள் சங்ககாலத்தில் உருவாக்கப்பட்டன.[15][16]
- சுமார் கி.மு. 195-175- இலங்கை அரசன் கஜபாகு காலத்தில் சேரன் செங்குட்டுவன் மற்றும் கரிகால் சோழன் ஆள்கின்றனர்[17][18]
- சுமார் கி.மு. 190- சேர நாட்டை சேர அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆள்கிறான்[19]
- சுமார் கி.மு. 150 - தமிழ் அரசர்களின் கூட்டாட்சியை வெற்றி கொண்டதாக கலிங்க நாட்டு அரசன் கதிகும்பம் எனும் கல்வெட்டில் பதிகிறான்[20]
- சுமார் கி.மு. 145 - இலங்கையில் தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சியும் துட்டகைமுனுவுடனான போரும்.[21]
- சுமார் கி.மு. 130- சேர அரசன் உதியஞ்சேரலாதன் சேர நாட்டை ஆள்கிறான்[17]
- சுமார் கி.மு. 60 - நிகோலசு தமாசுகசு மற்றும் ஸ்ட்ரேபோ மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஒருவன் அகஸ்டஸ் மன்னனுக்குத் தூதனுப்பியதாகக் குறித்தனர்.[22]
வணிக காலம்
- சுமார் 1 - 140 - பிலினி மற்றும் தாலமி[22] மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாகக் குறித்தனர்.[23]
- சுமார் 190 - சாவகம் எனும் தீவில் தமிழ் பேசப்பட்டது.[24]
- சுமார் 1 - 200 - முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர் யவனர்களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர்.செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாகப் பெரிப்ளுசு கூறுகிறார்.
- சுமார் 250 - சீன நாட்டு வரலாற்றறிஞர் சுவான்சாங் ,பாண்டியர் அரசாங்கத்தை பாண்யுவி எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்திருந்தனர் எனக் கூறியுள்ளார்.[25]
சங்ககாலத்திற்கு பின்னான காலம்
- சுமார் 300-325 - சிவகந்தவர்மன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் அரசைத் தமிழகத்தில் தொடங்கி வைத்தல்.
- சுமார் 300-590 - களப்பிரர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்துப் பாரம்பரிய ஆட்சியை மாற்றுகின்றனர்.[26]
- சுமார் 340 - குப்தப் பேரரசு தென்னிந்தியாவை நோக்கி படையெடுத்தல். முதலாம் விட்ணுகோபன் சமுத்திர குப்தனால் தோற்கடிக்கப்பட்டதால் தொண்டை நாடு முழுதும் களப்பிரர் கீழிருந்த சோழர்களால் ஆக்கிரமிக்கப்படுதல்.
- சுமார் 361 - ரோமானியப் பேரரசனான சூலியனுக்கு பாண்டியர் தூதனுப்புதல்.[27]
- சுமார் 436-463 - களப்பிரர் ஆட்சியில் தமிழகத்திலிருந்து இலங்கை சென்ற பாண்டிய மன்னர்கள், இராசராட்டிரம் என்னும் அரசை ஏற்படுத்தி ஆண்டனர்.
- சுமார் 436 - 460 - பல்லவன் இரண்டாம் கந்தவர்மன் என்பவனின் மூன்று மகன்களும் பல்லவ அரசை வடதமிழகம் முழுதும் விரிவுபடுத்தினர். அதில் மூன்றாம் மகனான இரண்டாம் குமாரவிட்ணு களப்பிரர் கீழிருந்த சோழர்களின் ஆதிக்கத்திலிருந்த காஞ்சியை மீட்கிறான்.
பல்லவர் மற்றும் பாண்டியர்
- சுமார் 550-600 - பல்லவன் சிம்மவிஷ்ணு தொண்டை மற்றும் சோழ நாடுகளையும், பாண்டியன் கடுங்கோன் மதுரையையும் களப்பிரர் ஆட்சியிலிருந்து மீட்டனர்.[28]
- சுமார் 590-630- காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சி
- சுமார் 610- மகேந்திரவர்மனை சமணத்திலிருந்து சைவ சமயத் துறவி திருநாவுக்கரசு நாயனார் மதம் மற்றுகிறார்
- சுமார் 628- சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ அரசு மீது படையெடுத்து காஞ்சிபுரத்தை முற்றுகையிடுகிறார்[29]
- சுமார் 630-668- பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் தொண்டைமண்டலத்தில் ஆட்சி
- சுமார் 642- சாளுக்கியர் மீது முதலாம் நரசிம்ம பல்லவன் படையெடுத்து பாதமியை நீக்குதல். புலிகேசி யுத்தத்தில் கொல்லப்படல்
- சுமார் 670-700- பாண்டிய அரிகேசரி மாறவர்மன் மதுரையில் ஆட்சி
- சுமார் 700-728- பல்லவன் ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலையும் மாமல்லபுரம் கடற்கரைப் பகுதிகளில் பல கோயில்களைக் கட்டல்
- சுமார் 700-730- கொங்கு நாடு வரை பாண்டிய அரசை கோச்சடையான் ரணதீரன் விரிவாக்குதல்
- சுமார் 731- பல்லவப் பேரரசில் ஆட்சிமுறைக் குழப்பம். பல்லவ அரசனாக இரண்டாம் நந்திவர்மனை அமைச்சர்கள் அவை தெரிவு செய்தல்
- சுமார் 731-765- சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்து பாண்டியன் மாறவர்மன் ராஜசிம்மன் பல்லவ அரசன் நந்திவர்மனைத் தாக்குதல்
- சுமார் 735- சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாடு மீது படையெடுத்து, தலைநகர் காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்தல்
- சுமார் 760- பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மன் மேற்கு கங்க அரசு மீது போர்த் தொடுத்து அதைத் தோற்கடித்தல்
- சுமார் 765-815- பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையான் மதுரையை ஆளுதல்
- சுமார் 767- பாண்டியப் படைகள் காவிரி ஆற்றின் தெற்கில் பல்லவர்களைத் தோற்கடித்தல்
- சுமார் 800-830- முதலாம் வரகுன பாண்டியன் அரசனாகி, பல்லவ அரசன் நந்திவர்மனைத் தோற்கடித்து திருச்சிராப்பள்ளி வரை அரசை விரிவாக்குதல்
- சுமார் 825-850- பல்லவன் மூன்றாம் நந்திவர்மன் பாண்டிய அரசைத் தோற்கடித்து வைகை வரை பல்லவப் பேரரசை விவரித்தல்
- சுமார் 830-862- பாண்டியன் சீவல்லபன் மதுரையில் ஆட்சி
- சுமார் 840- சீவல்லபன் இலங்கை மீது போர்த் தொடுத்து முதலாம் சேனனிடமிருந்து வட மாகாணங்களைக் கைப்பற்றல்
- சுமார் 848 - காவிரி கழிமுகத்தை ஆட்சி செய்த முத்தரையர்களை[30] வெற்றிகொண்டு விஜயாலய சோழன் தஞ்சாவூரில் எழுச்சி
- சுமார் 859- பாண்டியன் சீமாறன் சீவவல்லபன் கும்பகோணப் போரில் பல்லவர்களைத் தோற்கடித்தல்
சோழர் காலம் மற்றும் யாழ்ப்பாண அரசு
- சுமார் 887 - ஆதித்த சோழன் பல்லவ அரசன் அபராஜிதனைத் தோற்கடித்தல்[31]
- சுமார் 949 - தக்கோலம் போர். சோழர் படையை ரஸ்ராகுப்தா கிருஷ்ணா III தோற்கடிக்கிறான்
- சுமார் 985 - ராஜ ராஜ சோழன் அரியணை ஏறல்
- சுமார் 1010 - ராஜ ராஜ சோழன் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டி முடித்தல்
- சுமார் 1012 - இராசேந்திர சோழன் அரியணை ஏறல்
- சுமார் 1023 - இராசேந்திர சோழன் கங்கைக்குப் பயணம்
- சுமார் 1025 - சோழர் கடற்படை சிறீவிஜய அரசனைத் தோற்கடித்தல்
- சுமார் 1041 - இராசேந்திர சோழன் இலங்கை மீது படையெடுத்தல்
- சுமார் 1054 - மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிரான கொப்பம் போரில் இராசேந்திர சோழன் மரணமடைதல்
- சுமார் 1070 - முதலாம் குலோத்துங்க சோழன் அரியணை ஏறல்
- சுமார் 1118 - விக்கிரம சோழன்
- சுமார் 1133 - இரண்டாம் குலோத்துங்க சோழன்
- சுமார் 1146 - இரண்டாம் இராஜராஜ சோழன்
- சுமார் 1163 - இரண்டாம் இராஜாதிராஜ சோழன்
- சுமார் 1178 - மூன்றாம் குலோத்துங்க சோழன்
- சுமார் 1178 - கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி (யாழ்ப்பாண அரசு)
- சுமார் 1216 - மூன்றாம் இராஜராஜ சோழன்
- சுமார் 1246 - மூன்றாம் இராஜேந்திர சோழன்
- சுமார் 1246 - குலசேகர சிங்கையாரியன் (யாழ்ப்பாண அரசு)
- சுமார் 1256 - குலோத்துங்க சிங்கையாரியன் (யாழ்ப்பாண அரசு)[32]
சோழரிடமிருந்து பாண்டியருக்கு மாறுதல்
- சுமார் 1190-1260 - ஆறகழூரைத் தலைநகராக்கி பானா வம்ச ஆட்சி[33][34]
- சுமார் 1216 - 1239 - முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையைச் சோழரிடமிருந்து மீட்டு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று பெயர் பெறுதல். இவனது ஆட்சியில் சோழர் சிற்றரசர் ஆனவுடன் அவர்களின் அழிவும் தொடங்குதல்
- சுமார் 1216 - காடவர் வம்சம்[35]
- சுமார் 1236 - சம்புவரையர் வடதமிழகத்தைக் கைப்பற்றி நாயக்கர் காலம் வரை ஆள்கின்றனர்.
பாண்டியர் எழுச்சியும் இசுலாமியர் ஆட்சியும்
- 1214 - 1236 - இலங்கை மீதான கலிங்கப் படையெடுப்பு[36]
- 1251 - முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் அரியணை ஏறல்[37]
- 1268 - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் வட இலங்கையைக் கைப்பற்றி அங்கு குலசேகர சிங்கையாரியன் என்றவனைப் பட்டத்தில் அமர்த்துகிறான். அதற்குப் பின் இவன் வழியினரான ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்தை கி.பி. 1619 வரை ஆண்டனர்.[38]
- 1279 - மூன்றாம் இராஜேந்திர சோழனின் இழப்பைத் தொடர்ந்து சோழ ஆட்சியின் முடிவு
- 1268-1310 - குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறிப்பு.[39] பாண்டியர்களுக்கும் ஏமன் நாட்டவர்க்கும் 1289ஆம் ஆண்டில் சிறந்த குதிரை வணிகம் நடந்ததாக இபின் பட்டுடா குறிப்பு.[40]
- 1308 - அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் தமிழ்நாடு வழியாக தேவகிரியை ஆக்கிரமித்தல்
- 1310 - குலசேகரப் பாண்டியனின் மகன் சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்று அரசனாகுதல். இது உள்ளூர் கலகமாக மாறித் தன் சகோதரன் வீரபாண்டியனால் தோற்கடிக்கப்படுகிறான்
- 1311 - மாலிக் காபூர் பாண்டிய நாட்டை ஆக்கிரமித்து மதுரையைத் தாக்குதல்
- 1327-1370 மதுரை சுல்தானினால் மதுரை ஆளப்படுதல்
விஜயநகரப் பேரரசு, திருமலை நாயக்கர் மற்றும் ஐரோப்பிய ஆட்சி
- 1370 - தமிழ் நாடு முழுவதையும் விஜயநகரப் பேரரசின் முதலாவது புக்கா ராயனும் அவனுடைய மகனும் கைப்பற்றுகிறார்கள். பாண்டியர் சிற்றரசர் நிலையை அடைந்தனர்.
- 1422 - சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் தென்காசி, பாண்டியர் தலைநகராக இருந்தது. தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் இவனது தம்பியின் காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டு அதற்குப்பின் வந்த பாண்டியர்கள் அக்கோயிலிலேயே முடியும் சூட்டுக்கொண்டனர்.[41]
- 1505 - இலங்கையில் போர்த்துக்கேயரின் வருகை[42]
- 1519 - முதலாம் சங்கிலி யாழ்ப்பாண அரசனாகுதல்[43]
- 1522 - போர்த்துக்கேயரின் வருகை
- 1535 - தஞ்சாவூரில் நாயக்கர்கள் ஆட்சியை ஏற்படுத்திய சேவப்பா நாயக்கரை விஜயநகரப் பேரரசின் அச்சுத ராயன் தஞ்சாவூரை ஆள நியமிக்கிறான்
- 1535-1590 - சேவப்பா நாயக்கர் முதலாவது சுதந்திர நாயக்கராக தஞ்சாவூரை ஆளுகிறார்
- 1600-1645 - கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனின் ஆட்சி முடிவோடு பாண்டியர்கள் வரலாற்றிலிருந்து மறைதல். தஞ்சை நாயக்கர்களில் முக்கியமான ரகுநாத நாயக்கர்
- 1609 - புலிக்கட் எனும் இடத்தில் இடாச்சு குடியேற்றங்கள்
- 1609 - யாழ்ப்பாண அரசு போத்துக்கேயரிடம் வீழ்தலும் யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சியும்[44]
- 1621 - யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் இரண்டாம் சங்கிலி கோவாவில் வைத்து போர்த்துக்கேயரால் தூக்கிலிடப்படல்[45]
- 1623-1659 - மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி
- 1639 பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சென்னை பட்டினத்தினை வாங்கி ஜோர்ச் கோட்டையை அமைத்தல்
- சுமார் 1652 - தஞ்சையும் சிங்கையும் விஜயபுர சுல்தானிடம் வீழ்தல்
- 1656 - மதுரை நாயக்கர் திருமலைக்கு எதிராக மைசூர் படைகள் சலீமை ஆக்கிரமித்தல்
- 1658 - இலங்கையில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி[46]
- 1675 - விஜயபுரத்திலிருந்து தஞ்சை நோக்கி மராத்தியப் படை நகர்வு, ஏகோயி தன்னைத்தானே அரசனாக அறிவித்தல்
- 1692 - முகாலய பேரரரசின் பிரதிநிதி சுல்பிகார் அலிகான் ஆற்காடு நவாப்பை அமைத்தல்
- 1746 - பிரான்சிய கிழக்கிந்திய நிறுவனம் ஜோர்ச் கோட்டையை தாக்குதலும் கைப்பற்றலும்
- 1796 - இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்[47]
கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பாளையக்காரர் போர்கள்
- 1749 - பிரித்தானியர் ஜோர்ச் கோட்டையை மீளவும் கைப்பற்றல்
- 1751 - இராபர்ட் கிளைவ் ஆற்காட்டைத் தாக்கி, கைப்பற்றல்.
- 1751 - பூலித்தேவன் கும்பினிப்படைத் தலைவர்களான முகமது அலி மற்றும் அப்துல் ரகீம் போன்றவர்களை வரிமறுப்புப் போரில் தோற்கடித்து பாளையக்காரர்கள் போரைத் தோற்றுவித்தல்.
- 1752 - விசயகுமார நாயக்கரை தோற்கடித்துப் பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் பரங்கிப்படை மதுரையை கைப்பற்றல். அதையறிந்த முத்து வடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து கேப்டன் கோப்பின் படைகளை விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராகப் பதவி அமர்த்தல்.
- 1756 - பிரித்தானியாவும் பிரான்சும் முதலாவது கர்நாடக ஒப்பந்தம் செய்தல். ஆற்காடு நவாபாக முகம்மது அலி வால்யாவை நியமித்தல்
- 1759 - பிரான்சுப் படை தாமஸ் ஆர்த்தர் தலைமையில் சென்னையைத் தாக்குதல்
- 1760 - பிரித்தானியருக்கும் பிரான்சுக்குமிடையே வந்தவாசிப் போர். வீரபாண்டிய கட்டபொம்மன் பிறப்பு[48]
- 1767 - மைசூர் சுல்தான் ஐதர் அலி சென்னையை தாக்குதல், பிரித்தானியர் அதை முறியடித்தல். பூலித்தேவன் ஆண்ட நெற்கட்டாஞ்செவ்வலின் பக்கத்து பாளையமான கொல்லங்கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவன் பூலித்தேவனுக்கு உதவியதற்காக பரங்கிப்படையால் கொல்லப்படுதல். பூலித்தேவன் இறப்பு.
- 1772 - முத்து வடுகநாதர் காளையார் கோயிலுக்கு ஆயுதமின்றிச் சென்றபோது பரங்கிப்படைத் தளபதி பான்சோர் அவரைச் சுட்டுக்கொன்றான்.
- 1773 - பிரித்தானிய அரசு சீராக்கல் சட்டத்தை அமுலாக்குதல். பிரித்தானிய அரசின் கீழ் சென்னை நிர்வாகம் செல்லுதல்[49]
- 1777-1832 - இரண்டாம் சரபோஜி தஞ்சையை ஆளுதல்[50]
- 1799 - சரபோஜி உடன்படிக்கையின்படி தஞ்சைப் பேரரசு பிரித்தானியர் வசமாதல். பிரித்தானியரால் கட்டபொம்மன் தூக்கிலிடப்படல்[48]
- 1803 - சென்னை ஆளுநரை பென்டிங் நியமித்தல்
- 1800-1805 - பாளையக்காரர் போர்கள்
- 1806 - வேலூர்க் கோட்டையில் ஆளுநர் பென்டிங்க்குவிற்கு எதிராக வேலூரில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இந்திய வீரர்களின் வேலூர் சிப்பாய் எழுச்சி[51]
பிரித்தானிய ஆட்சி
- சுமார் 1800 - தமிழர்கள் பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் அழைத்து செல்லப்படல்[52]
- 1815 - பிரித்தானிய அரசால் தேயிலை, கோப்பி, தென்னைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப்படல் [53]
- சுமார் 1860 - பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் தென்னாப்பிரிக்கா அழைத்து செல்லப்படல்[54]
- 1892 - பிரித்தானிய அரசின் இந்திய கவுன்சில்கள் சட்டம்[55]
- 1901 - தமிழகத்திலிருந்து தமிழர்கள் மலேசியாவிற்கு வேலைக்காகச் செல்லுதல்[56]
- 1909 - இந்திய அரசுச் சட்டம். சென்னை சட்டமியற்றும் கவுன்சிலின் தோற்றம்
- 1921 - முதலாவது பிரதேச தேர்தல் சென்னையில் நடைபெறல்
- 1927 - சென்னை காங்கிரஸ் முழு சுதந்திரத் தீர்வை வெளியிடல்
- 1928 - சைமன் குழுவின் சென்னை வரவும் வலுவான எதிர்ப்பும்
- 1928 - இலங்கையில் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்
- 1937 - காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று சென்னையில் ஆட்சியமைத்தல்
- 1939 - இலங்கையில் முதலாவது தமிழ்-சிங்களக் கலவரம் ஏற்படல்[57]
- 1938 - பெரியாரின் தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட திராவிடநாடு போராட்டம்
- 1941 - இந்திய முஸ்லிம் லீக் அதன் காங்கிரசை சென்னையில் வைத்திருத்தல்.
- 1943 - நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் மற்றும் ஜான்சி ராணி படையில் தமிழகத்திலிருந்து மலேசியா சென்ற பல ரப்பர் தோட்டத் தொழிலாளிகள் இணைந்தனர்.[58]
- 1944 - பெரியாரும் கா. ந. அண்ணாதுரையும் திராவிடர் கழகத்தை அமைத்தல்
- 1944 - இலங்கையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உருவாக்கம்
பிரித்தானிய ஆட்சியின் பின்பு
- 1947 - சென்னை மாகாணம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தின் பகுதிகளாக தமிழ்நாடு உள்ளடக்கப்படல்[59][60]
- 1949 - இலங்கைத் தமிழரசுக் கட்சி எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்து உருவாகியது[61]
- 1953 - சென்னை மாநிலம் ஆட்சி மொழியைக் கொண்டிருத்தல்
- 1958 - இலங்கை இனக்கலவரம்
- 1964 - இந்திய வம்சாவளித் தமிழர் தொடர்பான முதலாவது சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை[62]
- 1965 - இந்தி தேசிய மொழியாக பிரகடனமும் பரவலான இந்தி எதிர்ப்புப் போராட்டமும்
- 1969 - சென்னை மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் பெறல்
- 1981 - யாழ் பொது நூலகம் எரிப்பு
- 1983 - இலங்கையில் தமிழர் படுகொலையும் இலங்கை இனப்பிரச்சினையும்; ஆயுதப் போராக மாறுதல்[63][64][65]
- 1983 - அதிகளவான ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயரத் தொடங்குதல்
- 1985 - ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் திம்புப் பேச்சுவார்த்தைகள்
- 1987 - இந்திய இலங்கை ஒப்பந்தம்.[66][67] இந்திய அமைதி காக்கும் படையின் வருகை
- 2004 - ஆழிப்பேரலையால் பல தமிழர் உயிர்களும் உடமைகளும் இழப்பு
- 2006-2009: இலங்கைத் தமிழர் இனப்படுகொலை
- 2009 - இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைதல்[68]
- 2011 - இலங்கை அரசும் புலிகளும் போர்க்குற்றங்கள் செய்ததாக ஐ.நா. குற்றம் சாட்டல்[53]
மேலும் பார்க்க
வெளி இணைப்புகள்
குறிப்புகள்
மேலதிக வாசிப்பு
- பண்டைய தமிழகம் - சி.க. சிற்றம்பலம், 1999[தொடர்பிழந்த இணைப்பு]
- Nilakanta Sastri, K.A. A History of South India, OUP, Reprinted 2000
- Historical Atlas of South India-Timeline-http://www.ifpindia.org/Historical-Atlas-of-South-India-Timeline.html (French Institute of Pondicherry)
- Codrington, Humphry William, A Short History of Lanka (http://lakdiva.org)
- Veluppillai, Prof. A., Religious Traditions of the Tamils http://tamilelibrary.org/
- Nilakanta Sastri, K.A., Srinivasachari, Advanced History of India, Allied Publishers Ltd, New Delhi, Reprinted 2000
- Read, Anthony, The Proudest Day - India's Long Ride to Independence, Jonathan Cape, London, 1997
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை