தமிழ்க் கல்வெட்டுகள்
தமிழ்க் கல்வெட்டுகள் எனப்படுபவை தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஆகும். கல்வெட்டுக்கள் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்று அவற்றில் குறிக்கப்பெற்ற செய்திகளையும், அவை எழுதப்பட்ட கால மொழி, எழுதியவர்கள், எழுதுவித்தவர்கள், அவர்களின் சமூகம் முதலிய செய்திகளைச் சொல்லுகின்றன. இவை அம் மொழி, சமூகம் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிய முக முக்கியமான ஆவணங்களாக திகழுகின்றன. உலகிலேயே இலத்தீனுக்கு அடுத்து [1] இந்தியத் தொல்லியல் ஆய்வு மையம் (2005 அறிக்கை) கண்டறிந்த சுமார் 100,000 கல்வெட்டுகளில், சுமார் 60,000 தமிழ்நாட்டில் உள்ளன.[2]
பண்டைய தமிழ் கல்வெட்டுகள்
- தமிழ்நாட்டின், ஆதிச்சநல்லூர் புதைபொருட்களில் பெருங்கற்காலக் குறியீடுகள் மற்றும் தமிழி எழுத்துகள் காணப்படுகின்றன [3] [4] [5]
- கீழடி அகழ்வாய்வு மையத்தில் தமிழ் கல்வெட்டுகளுடன் பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் கலைப்பொருட்கள், மட்பாண்டங்களில் தமிழ் பெயர்களான ஆதன், உத்திரன், குவிரன்-ஆதான், திசன் போன்றவை காணப்படுகின்றன. [6] [7]
கிமு 6 ஆம் நூற்றாண்டு
- ஆனைக்கோட்டை முத்திரை ( சோப்புக்கல் முத்திரை ), இலங்கையின் ஆனைக்கோடையில் கிடைத்தது. இதில் தமிழ் கல்லெழுத்துகளுடன் பெருங்கற்கால குறியீடுகளும் கலந்துள்ளன. இதன் காலம் கிமு 1000 - கி.மு. 300 கி.மு.[8] [9]
கிமு 5 ஆம் நூற்றாண்டு
- பொ.ச.மு. 500 க்கு முந்தைய தமிழ் எழுத்துகள் கொண்ட ஓடுகள் பொருந்தல் தளத்தில் கண்டெடுக்கப்பட்டன. இது தமிழ்நாட்டின், பழனிக்கு தென்மேற்கே 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
- பொ.ச.மு. 500 க்கு முந்தைய தமிழ் எழுத்துகள் தமிழ்நாட்டின் ஈரோடு அருகே சென்னிமலை கொடுமணலில் கண்டறியப்பட்டது.
- கிமு 5 ஆம் நூற்றாண்டின் முத்திரைக் காசுகள் அமராவதி ஆற்றின் கரையில் உள்ள கரூரில் கண்டறியப்பட்டன, இது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியிலிருந்து 78 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [14]
- கிமு 5 - 3 ஆம் நூற்றாண்டய தமிழ் எழுத்துகளைக் கொண்ட ஒரு சுடுமண் எடை பிடிப்பானது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் புறநகரில் உள்ள பெரிய தடகத்தில் உள்ள ஒரு பெருங்கற்கால தளத்தில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் அகழ்ந்தெடுக்கபட்டது. [15] [16]
கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள தமிழ் எழுத்து, நான்கு செ.மீ நீளமுள்ள ‘தங்கி’யில் காணப்பட்டது. இதை ‘தவன் சாத்தான்’ என படிக்கபட்டது. அதாவது அதாவது தவமிருக்கும் துறவி என்பதாகும்.
கிமு 4 ஆம் நூற்றாண்டு
- பொ.ச.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய மட்பாண்டங்கள் பூம்புகாருக்குக் கிழக்கே கடல் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கரையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது காவேரிபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது, இது தமிழ்நாட்டின், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். முற்கால சோழப் பேரரசின் செழிப்பான பண்டைய தலைநகராகவும், துறைமுக நகரமாக காவிரிபட்டிம் இருந்தது. [17]
கிமு 3 ஆம் நூற்றாண்டு
- குகைகளில் தமிழ்க் கல்வெட்டுகள். காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு. தமிழ்நாட்டின், மதுரை மாவட்டத்தின், மாங்குளத்தில் [18] [19] [20]
மலையில் ஐந்து குகைகள் உள்ளன, அதில் நான்கு குகைகளில் ஆறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. [21] சங்க காலத்தில் பொறிக்கப்பட்ட இவை, தமிழ்நாட்டின் முக்கியமான கல்வெட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. [22] சங்க காலத்திய பாண்டிய மன்னான முதலாம் நெடுஞ்செழியனால் (கி.மு. 270) சமண துறவிகளுக்கு கல் படுக்கைகளை உருவாக்கப்பட்டதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கல் படுக்கைகளை உருவாக்கிய தொழிலாளிகளின் பெயரையும் விவரிக்கிறது. உதாரணமாக, நெடுஞ்செழியனின் பணியாளரான கடலன் வழுதி என்பவன் சமணத் துறவி நந்த சிரிகுவனுக்கு கல் படுக்கை அமைத்ததாக ஒரு கல்வெட்டு காட்டுகிறது. [23] இது இந்தியத் தொல்லியல் துறையால் தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கபட்டுள்ளது. [24]
- சங்ககால பாண்டிய மன்னன் முதலாம் நெடுஞ்செழியன் (கி.மு. 270) தொடர்பான கலைப்பொருட்கள் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் கோவலன் பொட்டலில் காணப்பட்டன. [25] [26]
- தமிழ் எழுத்துகளுடன் கூடிய கி.மு 3 ஆம் நூற்றாண்டய சுடுமண் ஓடுகள் தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், கொற்கையில் கண்டறியப்பட்டன. [27]
- பொ.ச.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் கல்வெட்டு, ஆரம்பகால சமணத் துறவிகள் வாழ்ந்த ஒரு குகையில் பொறிக்கப்பட்டுள்ளது, இது தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், அரிட்டப்பட்டி கிராமத்தில் உள்ளது. [28] [29]
- பொ.ச.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் எழுத்துகள், தமிழ்நாட்டின் மதுரைக்கு அருகில் உள்ள தேனூரில். தங்கத் தகட்டில் எழுதப்பட்டுள்ளது [30]
- தமிழ் எழுத்துகள் பொறிக்ககபட்ட கி.மு 3 ஆம் நூற்றாண்டய கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகள் இலங்கை யாழ்பாணம், கந்தரோடை, உச்சிப்பணையில் கண்டறியப்பட்டன. [31] [32]
கிமு 2 ஆம் நூற்றாண்டு
- தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், மாங்குடியில் காண்டறியபட்ட பொ.ச.மு. 2 ஆம் நூற்றாண்டய தமிழ் எழுத்துகள் அடங்கிய கருப்பு மற்றும் சிவப்பு பானை ஓடு[33]
இந்த எழுத்துகள் "குருமங்கள அதன் இ யானைய் போ" என்று படிக்கபட்டது
- தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், சமணர் மலையில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டய தமிழ்க் கல்வெட்டு [34]
இது "பெரு தேரூர் குழித்தை அயஅம்" அல்லது "பெரு தே ஊர் உழிதேக்னே ஆயம்" அல்லது "பெரு தே ரூர் குழித்தைய் ஆயாம்" என படிக்கபட்டுள்ளது.
- இலங்கையின் தெற்கு நகரமான திஸ்ஸமகாரமவில் அகழப்பட்டதில் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கிமு 200 க்கு முற்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு மண்பாண்ட துண்டுகள் கிடைத்தது. இது கிமு 200 க்கு முற்பட்டது.
- பொ.ச.மு. 2 ஆம் நூற்றாண்டில் இலங்கை, யாழ்ப்பாணம், பூநகரியில் தமிழி எழுத்துகளுடன் கூடிய ஓடு காணப்பட்டது. [35]
- அரிகமெடு அகழ்வாராய்ச்சியில், உரோமானியர்களுடனான அதன் பண்டைய வணிக இணைப்பு நிறுவப்பட்டதால், இது கிமு 2 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பட்டுச் சாலை தளங்களில் ஒன்றாகும்.
கிமு முதல் நூற்றாண்டு
- தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டம், ஜம்பை சிற்றூரில் கிமு முதல் நூற்றாண்டய தமிழி கல்வெட்டு
அதில் 'ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி' [36] என்று பொறிக்கபட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக் கல்வெட்டின் பொருளானது "சத்யபுதோ (பட்டம்) அதியன் நெடுமான் அஞ்சி (பெயர்), கொடுத்த (ஈத்த) உறைவிடம் (பாழி)" என்பதாகும். இந்த கல்வெட்டு ஒரு வரியில் குறுகியதாக இருந்தாலும், இது தென்னிந்திய வரலாற்றின் பல்வேறு அம்சங்களில் சிறப்பான ஒளியை பாய்ச்சுகிறது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் அசோகரின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்சியாளர்களின் வம்சமான சத்யபுத்திரர்களின் யார் என்பது குறித்த சந்தேகத்தை இந்த கல்வெட்டு நீக்குகிறது [37]
- கிமு முதல் நூற்றாண்டய, தமிழி எழுத்துக்கள் பொறிக்கபட்ட உடைந்த சேமிப்பு குடுவையானது எகிப்தின், குசீர்-அல்-காதிம், (லுகோஸ் லைமன்) கண்டறியப்பட்டது. கிமு முதல் நூற்றாண்டு காலத்திய இரண்டு தமிழி எழுத்துப் பொறிப்புகளை, இதே தளத்தில் கண்டறியப்பட்டன. [38]
இதில் பொறிக்கப்பட்ட உரை வார்ப்புரு:Script/Brahmi பானை ஒறி "கயிற்றில் தொங்கவிடப்பட உறியைக் குறிக்கிறது. [39]
- எகிப்தின், வெரெணிகே துறைமுகத்தில், பண்டைய தொலெமி - ரோமன் குடியேற்றத்தில் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழில் பொறிக்கப்பட்ட ஆம்போரா (இரட்டைக் கைப்பிடி சாடி) துண்டு. [38]
- பொ.ச.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்து பொறிக்கபட்ட ஓடு ஓமானில் காணப்பட்டது [40]
- பொ.ச.மு. முதலாம் நூற்றாண்டைட் சேர்ந்த, தமிழி எழுத்துக்கள் மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் கண்டறியப்பட்டன [41]
இது "மூ-நா-கா-ரா" மற்றும் "மு-கா-கா-டி" என படிக்கபட்டது.
- பொ.ச.மு. முதலாம் நூற்றாண்டய, கற்படுக்கையில் தமிழி கல்வெட்டானது தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், சித்தனவாசலில் கண்டறியப்பட்டது. [42]
இது "யோமிநாட்டுக் குமட்டூர் பிறந்தான் காவுதி யிதனுக்குச் சித்துப்போச்சில் இளையார் செய்த அதிட்டானம்"
- தமிழ்நாட்டின், கரூரில் கண்டறியப்பட்ட வெள்ளி மோதிரத்தில் தனிப்பட்ட பெயரான "பெரவதன்" என்ற பெயரை தமிழில் பொறிக்கபட்டுள்ளது. [42]
- சிந்து எழுத்துக்களுடன் நெருங்கிய ஒற்றுமை உடைய குறியீட்டு சின்னங்களைக் கொண்ட கிமு முதலாம் நூற்றாண்டய பெருங்கற்கால மட்பாண்டங்கள் தமிழ்நாட்டின், நாகப்பட்டினம் மாவட்டம்,செம்பியன்கண்டியூர் மற்றும் மேலப்பெரும்பள்ளம் கிராமங்களில் கண்டறியபட்டன. [43] [44]
- மத்திய தரைக்கடல் பிராந்தியத்தின் நூற்றுக்கணக்கான ஓடுகள், செய்கலன் சில்லுகள், இத்தாலி, கிரிஸ் மட்கல ஜாடித் துண்டுகள் மற்றும் பொ.ச.மு. முதலாம் நூற்றாண்டு, தமிழ் எழுத்துகளுடன் உள்ள சிவப்பு மண் பொருட்கள் ஆகியவை தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் கண்டறியப்பட்டன. [45]
களப்பிரர் கல்வெட்டுக்கள்
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்கு அண்மையில் உள்ள பூலாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள பூலாங்குறிச்சி குன்றின் சரிவுப் பகுதியில் அமைந்துள்ளன. கிபி 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த களப்பிரர் காலத்திய மூன்று கல்வெட்டுகள் தமிழ்ப் பிராமி மற்றும் வட்டெழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. [46][47] இக்கல்வெட்டுக்கள் மூலம் களப்பிரர்கள் சமண, பௌத்த சமயங்களை மட்டுமே ஆதரித்தாலும், அந்தணர்களுக்கு அக்ரகாரம் போன்ற பிரம்மதாயம், மங்கலம் போன்ற நிலங்களை வழங்கியும், இந்துக் கோயில்களுக்கு அறப்பணியும் செய்துள்ளனர். அந்தணர், அரசர், வணிகர், உழவர் என்ற நால் வருண முறையை குறிக்கும் மிகப் பழைய தமிழ்க் கல்வெட்டு இதுவே ஆகும்.
மேலும் காண்க
- தமிழி
- தமிழ் எழுத்து முறை
- நியீசிலாந்தின் தமிழ் மணி
- தமிழ்ச் செப்பேடுகள்
- லகுனா செப்பேடு
- திஸ்ஸமகாராம தமிழ் பிராமிச் சாசனம்
- பல்லவ எழுத்துமுறை
- தமிழக வரலாறு
- தமிழர் வரலாற்றுக் காலக்கோடு
- தமிழ் மரபு அறக்கட்டளை
- பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்
- தமிழ்க் கல்வெட்டு அறிஞர்கள்
- இலங்கை தமிழ்க் கல்வெட்டுகள்