தொன்பாஸ்
தொன்பாஸ் பிரதேசம் ( Donbas or Donbass), உக்ரைன் நாட்டின் கிழக்கில் அமைந்த பிரதேசம் ஆகும். இப்பிரதேசத்தில் தோனெத்ஸ்க் மாகாணம் மற்றும் லுகான்ஸ்கா மாகாணம் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தின் பெரிய நகரம் தோனெத்ஸ்க் நகரம் ஆகும். தொன்பாஸ் பிரதேசத்தின் கிழக்கில் உருசிய மொழி பேசுபவர்கள் அதிகம் உள்ளனர். எனவே இப்பகுதியை உருசியா நாட்டுடன் இணைக்க வலியுறுத்தி 2014-ஆம் ஆண்டு முதல் ருசிய ஆதரவு பெற்ற பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் ஆயுதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆயுதப் போராட்டக் கிளர்ச்சியாளர்களுக்கு உருசியா ஆயுதங்கள் வழங்கி வருகிறது. தற்போது இப்பிரதேசத்தின் ருசியாவை ஒட்டிய கிழக்குப் பகுதிகள் பிரிவினைவாதிகள் கையில் உள்ளது.[1][2][3]
மக்கள் தொகை பரம்பல் & அரசியல்
2001-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொன்பாஸ் பிரதேசத்தில் உள்ள லுஹான்ஸ்க் மாகாணத்தில் 58% மக்களும் மற்றும் தோனெத்ஸ்க் மாகாணத்தில் 56.9% மக்களும் உக்ரேனிய மொழியை பேசுகின்றனர். மேலும் இவ்விரு மாகாணத்திலும் உருசிய மொழி பேசுபவர்கள் முறையே 39% மற்றும் 38.2% ஆகவுள்ளனர்.[4] தற்கால தொன்பாஸ் பிரதேசத்தில் உக்ரைனிய மொழி பேசுபவர்களை விட, உருசிய மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. [5]
சமயம்
2016-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தொன்பாஸ் பிரதேசத்தில் கிழக்கின் பழமைவாத கிறித்துவர்கள் 50.6%, சமய நம்பிக்கை அற்றோர் 28.3% சாதாரன கிறித்துவர்கள் 11.9%, இசுலாமியர் 6%, சீர்திருத்த கிறித்துவர்கள் 2.5% மற்றும் இந்துக்கள் 0.6% ஆக உள்ளனர்.பரணிடப்பட்டது 22 ஏப்பிரல் 2017 at the வந்தவழி இயந்திரம்
பொருளாதாரம்
தொன்பாஸ் பிரதேசத்தில் நிலக்கரி[6] மற்றும் இரும்பு போன்ற உலோகச் சுரங்கங்கள் அதிகம் உள்ளது. எனவே இப்பிரதேசத்தில் கனரகத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.[7]
தொன்பாஸ் போர் (2014–தற்போது வரை)
உக்ரைன் நாடு, நேட்டோ இராணுவ அமைப்புடன் இணைய பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. இது தனது நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் என உருசியா கருதுவதால், உக்ரைனை நேட்டோ அமைப்புடன் இணையத் தடுக்கிறது. இதனால் ருசியா, உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள தென் பாஸ் பிரதேசத்தின் வாழும் உருசிய மொழி பேசுவபர்களை தூண்டிவிட்டு பிரிவினைவாதப் போர் நடத்தி வருகிறது.
2014-ஆம் ஆண்டு முதல் தொன்பாஸ் பிரதேசத்தின், ருசியா எல்லையை ஒட்டிய கிழக்குப் பகுதிளில் வாழும் ருசிய மொழி பேசும் உக்ரேனிய பிரிவினைவாதப் படைகளுக்கும், உக்ரைன் அரசுப் படைகளுக்கும் போர் நடைபெற்றது. மின்ஸ்க் ஒப்பந்தப்படி தொன்பாஸ் பிரதேசத்தில் போர் மேகங்கங்ள் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் பிப்ரவரி, 2022-ஆம் ஆண்டு முதல் ருசியா, உக்ரைன் மீது போர் தொடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- "Deconstructing the Donbass", overview of the 2014–2015 conflict பரணிடப்பட்டது 2017-10-19 at the வந்தவழி இயந்திரம்
- "The coal-mining racket threatening Ukraine's economy" by BBC News
- [1] Bulletin board "Объявления Донбасса"