படைப்புவாதம்
படைப்புவாதம் (Creationism) என்பது மனிதன், உயிரினங்கள், புவி மற்றும் அண்டத்தை ஒரு மீயிற்கை படைப்பாளர் (கடவுள்) தோற்றுவித்தார் எனும் சமய நம்பிக்கையாகும். 18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் படிவளர்ச்சிக் கொள்கையின் உருவாக்கத்துக்குப்பின் விவிலியத்தின் தொடக்க நூலில் சொல்லப்பட்டுள்ளனவற்றுக்கு அறிவியல் அடிப்படை உண்டு என்று காட்ட முயற்சிகள் செய்யப்பட்டன. இக்கருத்தை முன்வைத்தவர்கள் படைப்புவாதிகள் என்றும் படிவளர்ச்சி எதிர்ப்பாளர்கள் என்றும் அறியப்பட்டனர். 1920களில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் கிறித்தவ அடிப்படைவாதிகள் படிவளர்ச்சிக் கொள்கையினை எதிர்த்து படைப்புவாதத்தை முன்னிறுத்தி வருகின்றனர். படைப்புவாதத்தில் பல வகைகள் உண்டு. படிவளர்ச்சியை அறவே ஏற்றுக் கொள்ள மறுத்து விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ளதை (ஏழு நாட்களில் அண்டத்தின் படைப்பு, உயிரினங்கள் தனித்தனியே படைக்கப்பட்டன, புவியின் வயது சில ஆயிரம் வருடங்களே) என்று நம்புபவர்கள்; படிவளர்ச்சியை ஏற்று அதன் கர்த்தா கடவுளே என்போர், கிறித்தவமல்லாத பிற சமயங்களில் உள்ள படைப்பு தொன்ம கதைகளை நம்புவோர் போன்றவர்கள் இவற்றுள் அடக்கம். படைப்புவாதத்தை அறிவியல் பாடமாகக் கற்றுத் தர ஐக்கிய அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டதால், நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாடு படைப்புவாதிகளால் அறிமுகப்படுத்தப்படது.[1][2][3][4][5]