பிரான்சு நாட்டுப்பண்
லா மர்சியேஸ் (La Marseillaise, (பிரெஞ்சு மொழி பலுக்கல் [la maʁsɛjɛz]]) என்பது பிரான்சு நாட்டின் நாட்டுப்பண் ஆகும். இந்தப்பாடல் 1792 ஆண்டு க்ளாத் ஜோசஃப் த வில் என்பவரால் ஸ்திராஸ்பூர்க் நகரில் எழுதப்பட்டது. ஆஸ்திரியாவுக்கு எதிராக பிரான்சு போர் தொடுப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து இயற்றப்பட்ட பாடல் இது ஆகும். இந்தப் பாடலின் உண்மைப் பெயர் ரைன் இராணுவ போர்ப் பாடல் ( "Chant de guerre pour l'Armée du Rhin" ) என்பதாகும்.[1]
பிரான்ஸ் தேசியம் கீதம் | |
எனவும் அறியப்படுகிறது | ரைன் இராணுவ போர்ப் பாடல் |
இயற்றியவர் | க்ளாத் ஜோசஃப் த வில், 1792 |
இசை | க்ளாத் ஜோசஃப் த வில் |
சேர்க்கப்பட்டது | 1795 |
இசை மாதிரி | |
La Marseillaise (Instrumental)
|
இந்தப்பாடல் ஒரு புரட்சிப்பாடல், விடுதலைப் பாடல், சர்வாதிகாரத்துக்கும் அந்திய ஊடுருவலுக்கும் எதிராக மக்களை ஊக்குவிக்கும் பாடல் என பெயர் பெற்றது. 1795 ஆம் ஆண்டு பிரெஞ்சு தேசியக் கூட்டம் இப்பாடலை முதல் பிரெஞ்சுக் குடியரசு பாடலாக ஏற்றுக்கொண்டது.[2] 1792 மே மாதம் மெர்சலைசிலிருந்து பிரஞ்ச்சு தலைநகரான பாரிசுக்கு வந்த தன்னார்வலர்கள் இப்பாடலை பாடியவாறே வீதிகளில் வலம் வந்தனர்.[3] அதிலிருந்து மார்சியேஸ் என்ற செல்லப் பெயரும் இந்தப் பாடலுக்கு ஒட்டிக்கொண்டது. ஐரோப்பிய நாட்டுப் பண்களில் உள்ள எழுச்சிநடை இசைக்கெல்லாம் இந்தப்பாடலே ஒரு முன்மாதிரி ஆகும். பிற நாட்டு நாட்டுப்பண்கள் தேசிய விழாக்கள், அரசு விழாக்கள் போன்றவற்றில் மட்டுமே இடம்பெறும், ஆனால் பிரஞ்சு நாட்டுப்பண் இந்த நாட்டின் மரபான செவ்வியல் இசையிலும், ஜனரஞ்சகமான இசையிலும் இடம்பிடித்துள்ளது என்பது இதன் சிறப்பு. இடையில் சிலகாலம் இந்தப்பாடல் நாட்டுப்பண் என்ற தகுதியில் இருந்து நீக்கப்பட்டது; பிரான்சின் முதலாம் நெப்போலியன் இந்தப்பாடலுக்கு பதில் வேறுபாடலை நாட்டுப்பண்ணாக வைத்திருந்தார். பத்தாம் லூயி, பதின்மூன்றாம் லூயி ஆகிய மன்னர்கள் இப்படலுக்கு தடைவிதித்தும் இருந்தனர். ஆனால் 1879 இல் மீண்டும் இப்பாடல் நாட்டுப்பண்ணாக அறிவிக்கப்பட்டு தற்போதுவரை இருந்துவருகிறது.
வரிகள்
மிக நீண்டதான இப்பாடலின் முதல் பத்தி மட்டுமே பெரும்பாலும் பாடப்படுகின்றன. ( சிலசமயம் ஐந்தாவது ஆறாவது வரிகள் பாடப்படுகின்றன.) அந்த முதல் பத்தி பின்வறுமாறு
பிரஞ்சு மொழியில்[3] | தமிழ் ஒலிபெயர்ப்பு | தமிழ் மொழிபெயர்ப்பு[4] |
---|---|---|
|
|
|