பெர்லின் சண்டை
பெர்லின் சண்டை (Battle of Berlin) என்பது சோவியத் படைகளினால் பெர்லினை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தந்திரோபாய வலிந்து தாக்குதல் நடவடிக்கையும், இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் களத்தின் இறுதி பாரிய வலிந்து தாக்குதல் சண்டையுமாகும்.[f]
பெர்லின் சண்டை Battle of Berlin | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனை பகுதி | |||||||||
| |||||||||
பிரிவினர் | |||||||||
| ஜெர்மனி | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
1ம் பெலோரசியன் முன்னனி:2ம் பெலோரசியன் முன்னனி:1ம் உக்ரேனிய முன்னனி: | இராணுவ குழு விஸ்டுலா:
| ||||||||
பலம் | |||||||||
| |||||||||
இழப்புகள் | |||||||||
12 சனவரி 1945இல் செஞ்சேனை விஸ்டுலா-ஒடர் வலிந்து தாக்குதல் நடவடிக்கையின் விளைவாக செருமனியின் முன்னரங்களை நிலைகளை உடைத்து மேற்காக 40 கிலோமீட்டர்கள் (25 மைல்கள்) தூரம் கிழக்கு பெருசிய வலிந்து தாக்குதல், கீழ் சிலேசியன் வலிந்து தாக்குதல், கிழக்கு பெமரேனியன் வலிந்து தாக்குதல், மேல் சிலேசியன் வலிந்து தாக்குதல் ஊடாக முன்னேறி, பெர்லினுக்கு கிழக்காக 60 km (37 mi) தூரத்தில் ஒடர் ஆற்றை ஒட்டி தற்காலிகமாக நின்றது.[13] வலிந்து தாக்குதல் மீண்டும் ஆரம்பித்ததும், இரு சோவித் முன்னனி தரைப்படைக் குழுக்கள் பெர்லினின் கிழக்கு மற்றும் மேற்கில் தாக்குதல் நடத்தும்போது, மூன்றாவது தோற்கடிப்பு பெர்லினின் வடக்கில் நிலையிலிருந்த செருமன் படைகள் மேற்கொள்ளப்பட்டது. பெர்லின் சண்டை 20 ஏப்பிரல் முதல் 2 மே காலை வரை நீடித்தது.