முதலாம் ஏரோது
முதலாம் ஏரோது (Hebrew: הוֹרְדוֹס, Hordos, Greek: Ἡρῴδης, Hērōidēs) என்பவர் (பிறப்பு 73 அல்லது 74 கி.மு, இறப்பு எரிக்கோவில் 4 கி.மு,[1][2][3][4][5] இன்னுமொரு வரலாற்றாசிரியர் கருத்துப்படி, 1 கி.மு [6]) உரோமப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட யூதேயாவை ஆண்ட ஒரு சிற்றரசர் ஆவார். இவர் தனது குடும்பத்தாரையும், பல யூத ரபிக்களையும், குழந்தைகள் பலரை படுகொலை செய்ததாலும் பைத்தியக்காரன் என்றும் அழைக்கப்படுவதுண்டு.[7]. மாபெரும் தூண்களைக்கொண்ட கட்டடங்களை அமைத்தமைக்கு இவர் பெயர்பெற்று விளங்குகின்றார். ஜெருசெலமிலும் மேலும் சில இடங்களிலும் இவ்வாறான மாபெரும் கட்டடங்களைக் கட்டியுள்ளார். இதில் இரண்டாம் ஆலயம் எனப் பெயர்பெறும் ஆலயத்தையும் செசேரியா மார்திமா (Caesarea Maritima) எனும் நகரில் ஒரு துறைமுகத்தையும் அமைத்தார். இவருடைய வாழ்க்கைத் துணுக்குகள் உரோம-யூத வரலாற்றாசிரியர் ஜோசீபஸ் பிளேவியஸ் என்பவர் மூலம் உலகிற்கு அறியக்கிடைத்தது.
முதலாம் ஏரோது | |
---|---|
பேசிலியசு (அரசன்) | |
ஆண்டு அறியப்படாத ஏரோதின் உருவப்படம் | |
ஆட்சி | 37–4 கிமு |
முன்னிருந்தவர் | இரண்டாம் ஆண்டிகோனசு மட்டாதியாசு |
ஏரோது ஆர்க்கியாலசு; ஏரோது ஆண்டிப்பாசு; டெட்ராக் ஃபிலிப்பு | |
மனைவிகள் |
|
வாரிசு(கள்) | இரண்டாம் ஆண்ட்டிபேட்டர் இளவரசன் அலெக்சாந்தர் இளவரசன் நான்காம் அரிசுட்டோபுலுசு இளவரசி சாலம்ப்சியோ முதலாம் ஏரோது ஃபிலிப்பு Herod Antipas ஏரோது ஆண்டிப்பாசு ஒலிம்ப்பியாசு இளவரசன் ஏரோது இரண்டாம் ஏரோது ஃபிலிப்பு |
அரச குலம் | ஏரோதிய மரபு |
தந்தை | இடுமெயாவின் ஆண்டிப்பாட்டர் |
தாய் | சிப்ப்ரோசு |
அடக்கம் | யூதேயா |
சமயம் | யூதம் |