1839
நாட்காட்டி ஆண்டு
1839 (MDCCCXXXIX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1839 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1839 MDCCCXXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1870 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2592 |
அர்மீனிய நாட்காட்டி | 1288 ԹՎ ՌՄՁԸ |
சீன நாட்காட்டி | 4535-4536 |
எபிரேய நாட்காட்டி | 5598-5599 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1894-1895 1761-1762 4940-4941 |
இரானிய நாட்காட்டி | 1217-1218 |
இசுலாமிய நாட்காட்டி | 1254 – 1255 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 10 (天保10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2089 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4172 |
நிகழ்வுகள்
- ஜனவரி 19 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஏடன் நகரைக் கைப்பற்றியது.
- ஜூன் 17 - ஹவாய் பேரரசில் கத்தோலிக்கர் தமது சமயத்தை வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
- ஜூன் 22 - லூயி டகுவேர் தனது ஒளிப்படக் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்.
- ஜூலை 23 - பிரித்தானியப் படையினர் ஆப்கானித்தானின் காஸ்னி நகரைக் கைப்பற்றினர்.
- ஆகஸ்ட் 23 - சீனாவின் கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கைக் கைப்பற்றியது.
- செப்டம்பர் 9 - அலபாமாவில் இடம்பெற்ற பெரும் தீயில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து சேதமடைந்தன.
- நவம்பர் 11 - மெட்ராசு கவர்னர் லார்ட் சான் எல்பின்சுடனிடம் (John Elphinstone, 13th Lord Elphinstone) சென்னைப் பல்கலைக்கழகம் அமைக்க 70,000 பேர் சேர்ந்து மனுக்கொடுக்கப்பட்டது.
- நவம்பர் 25 - இந்தியாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் கொரிங்கா நகரம் முற்றாக அழிந்தது. 300,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- இரப்பர் பதனிடலை சார்ல்ஸ் குடியர் கண்டுபிடித்தார்.
- ஜி. யு. போப் சமயப்பணி புரிவதற்காக தமிழ்நாடு வந்தார்.
- மிசூரி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, யாழ் நகரில் 62,137, மல்லாகத்தில் 45,305, தென்மராட்சியில் 43,927, வடமராட்சியில் 35,747, தீவுப்பகுதியில் 25,292 என மொத்தம் 212,408 பேர் பதிவாயினர்.
பிறப்புக்கள்
- ஜனவரி 19 - பால் செசான், பிரெஞ்சு ஓவியர் (இ. 1906)
- மார்ச் 13 - ஜாம்செட்ஜி டாட்டா, இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி (இ. 1904)
- தண்டபாணி சுவாமிகள், தமிழ்ப் புலவர் (இ. 1898)
இறப்புக்கள்
- ரஞ்சித் சிங், 1780-1839) பஞ்சாபிகளின் சீக்கியப் பேரரசின் மன்னர் (பி. 1780)
1839 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை