2009
2009 (MMIX) கிரெகோரியன் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: |
|
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2009 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2009 MMIX |
திருவள்ளுவர் ஆண்டு | 2040 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2762 |
அர்மீனிய நாட்காட்டி | 1458 ԹՎ ՌՆԾԸ |
சீன நாட்காட்டி | 4705-4706 |
எபிரேய நாட்காட்டி | 5768-5769 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 2064-2065 1931-1932 5110-5111 |
இரானிய நாட்காட்டி | 1387-1388 |
இசுலாமிய நாட்காட்டி | 1430 – 1431 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 21 (平成21年) |
வட கொரிய நாட்காட்டி | 98 |
ரூனிக் நாட்காட்டி | 2259 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4342 |
பன்னாட்டு வானியல் ஆண்டு என்று 2009 குறிப்பிட்டுள்ளது[1].
நிகழ்வுகள்
ஜனவரி 2009
- ஜனவரி 1 - சிலோவாக்கியா யூரோ நாணயத்தை ஏற்றுக்கொண்ட 16வது ஐரோப்பிய நாடானது.
- ஜனவரி 2 - கிளிநொச்சி நகரை இலங்கை இராணுவம் கைப்பற்றியிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
- ஜனவரி 7 - இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக்க அறிவிக்கப்பட்டது.
- ஜனவரி 8 - சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொழும்பில் இனந்தெரியாதோரால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- ஜனவரி 8 - இங்கிலாந்து வங்கி வட்டி வீதத்தை 1.5 விழுக்காடாகக் குறைத்தது. இது 315 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவானதாகும்.
- ஜனவரி 11 - தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2009க்கான கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
- ஜனவரி 12 - இந்தோனீசியாவில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 230 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 15 - அமெரிக்க பயணிகள் விமானம் ஒன்று 155 பேருடன் நியூயோர்க் நகரில் அட்சன் ஆற்றில் வீழ்ந்தது. அனைவரும் உயிர் தப்பினர்.
- ஜனவரி 20 - பராக் ஒபாமா ஐக்கிய அமெரிக்காவின் 44வது அதிபராகப் பதவியேற்றார்.
- ஜனவரி 25 - முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
- ஜனவரி 29 - இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி கு. முத்துக்குமார் என்பவர் சென்னையில் தீக்குளித்து இறந்தார்.
மேலும் ஜனவரி 2009 நிகழ்வுகளுக்கு..
பெப்ரவரி 2009
- பெப்ரவரி 1 - 1744 இல் மூழ்கிய விக்டரி என்ற பிரித்தானியப் போர்க்கப்பலின் பகுதிகள் ஆங்கிலக் கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டன.
- பெப்ரவரி 2 - புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இராணுவ ஏவுகணைகள் வீழ்ந்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 5 - ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தில் 503வது விக்கெட்டை வீழ்த்தி முத்தையா முரளிதரன் உலக சாதனையை முறியடித்தார்.
- பெப்ரவரி 7 -நாகப்பட்டினம், சீர்காழியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவிச்சந்திரன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.
- பெப்ரவரி 8 - முல்லைத்தீவு, சுதந்திபுரம் பகுதியில் படையினர் நடத்திய தாக்குதலில், 80 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 பேர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 8 - இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி மலேசியாவில் ராஜா (27 வயது) என்ற இலங்கைத் தமிழர் தீக்குளித்து இறந்தார்.
- பெப்ரவரி 9 - எகிப்தில் சக்காரா என்ற இடத்தில் 2,600 ஆண்டுகள் பழமையான பண்டைய எகிப்தின் 30 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- பெப்ரவரி 10 - வன்னியில் தேவிபுரம், சுதந்திரபுரம் ஆகிய இடங்களில் படையினர் நடத்திய தாக்குதலில் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 87 பேர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 10 - தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.
- பெப்ரவரி 12 - நியூயோர்க்கில் விமானம் ஒன்று குடிமனை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 13 - ஒரிசாவில் புவனேஸ்வர் நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 14 - பாகிஸ்தானில் தெற்கு வாசிரிஸ்தானில் அமெரிக்க வானூர்திகள் வீசிய ஏவுகணை வீச்சில் 25 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 19 - வன்னிப் பகுதியில் படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 126 பேர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 20 - வான்புலிகளின் 2 கரும்புலிகள் கொழும்பில் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 47 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகத்து 29 - நிலவை ஆராய அணுப்பப்பட்ட சந்திரயான்-1 தன் பணியை முடித்துக்கொண்டது.
மேலும் பெப்ரவரி 2009 நிகழ்வுகளுக்கு..
மார்ச் 2009
மேலும் மார்ச் 2009 நிகழ்வுகளுக்கு..
இறப்புகள்
- ஜனவரி 8 - லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர் (பி. 1958)
- ஜனவரி 12 - புலோலியூர் தம்பையா, ஈழத்து எழுத்தாளர்
- ஜனவரி 17 - கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (பி. 1927)
- ஜனவரி 29 - கு. முத்துக்குமார், ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் தீக்குளித்து இறந்த தமிழக இளைஞன்
- ஜனவரி 31 - நாகேஷ், நகைச்சுவை நடிகர் (பி. 1933)
- பெப்ரவரி 12 - சத்தியமூர்த்தி, தமிழீழ ஊடகவியலாளர்
- பெப்ரவரி 12 - முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன்(பி. 1982)
- பெப்ரவரி 13 - கிருத்திகா, தமிழக எழுத்தாளர்
- மார்ச் 11 - ஓமக்குச்சி நரசிம்மன், தமிழ்த் திரைப்பட நடிகர்
- ஏப்ரல் 23 - ரூபராணி ஜோசப், இலங்கை மலையகப் பெண் எழுத்தாளர்
- மே 2 - கே. பாலாஜி, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்
- மே 31 - மில்வினா டீன், டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசிப் பயணி (பி. 1912)
- மே 31 - கமலா தாஸ், மலையாள எழுத்தாளர் (பி. 1934)
- சூன் 3 - இரா. திருமுருகன், தமிழறிஞர் (பி. 1929)
- சூன் 6 - ராஜமார்த்தாண்டன், கவிஞர், எழுத்தாளர்
- சூன் 18 - அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (பி. 1922)
- சூன் 25 - மைக்கல் ஜாக்சன், பாப் இசைப் பாடகர் (பி. 1958)
- சூன் 27 - இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (பி. 1935)
- சூன் 29 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (பி. 1926)
- சூலை 9 - சி. ஆர். கண்ணன், தமிழக எழுத்தாளர்
- சூலை 16 - டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (பி. 1919)
- சூலை 21 - கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (பி. 1913)
- சூலை 29 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920
- சூலை 29 - ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (பி. 1954)
- ஆகத்து 1 - கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (பி. 1933)
- ஆகத்து 6 - முரளி, மலையாள நடிகர் (பி. 1954)
- ஆகத்து 18 - கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர் (பி. 1924)
- ஆகத்து 25 - எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1932)
- ஆகத்து 29 - மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர்
- செப்டம்பர் 2 - ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் (பி. 1949)
- செப்டம்பர் 11 - யுவான் அல்மெய்டா, கியூப புரட்சியாளர் (பி. 1927)
- செப்டம்பர் 12 - நார்மன் போர்லாக், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)
- செப்டம்பர் 13 - அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1932)
- செப்டம்பர் 16 - தென்கச்சி கோ. சுவாமிநாதன், தமிழகப் பேச்சாளர், எழுத்தாளர்
- செப்டம்பர் 22 - எஸ். வரலட்சுமி, நடிகை, பாடகி (பி. 1927)
- செப்டம்பர் 22 - ஆர். பாலச்சந்திரன், பேராசிரியர், கவிஞர்
- செப்டம்பர் 24 - நாத்திகம் இராமசாமி, இதழாசிரியர், பகுத்தறிவாளர் (பி. 1932)
- அக்டோபர் 5 - இசுரேல் கெல்ஃபாண்ட், சோவியத் கணிதவியலர் (பி. 1913)
- அக்டோபர் 14 - சி. பி. முத்தம்மா, முதல் இந்தியப் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி (பி. 1924)
- அக்டோபர் 15 - தருமபுரம் ப. சுவாமிநாதன், திருமுறை ஓதுவார் (பி. 1923)
- அக்டோபர் 15 - தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, ஆஸ்திரேலிய எழுத்தாளர் (பி. 1947)
- டிசம்பர் 5 - திலகநாயகம் போல், ஈழத்துக் கருநாடக இசைப் பாடகர்
- டிசம்பர் 29 - பழ. கோமதிநாயகம், பாசனப் பொறியாளர்
- டிசம்பர் 30 - விஷ்ணுவர்தன், கன்னட நடிகர் (பி. 1950)
விருதுகள்
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - சார்ல்ஸ் காவோ, விலார்ட் போயில், ஜார்ஜ் ஈ. சிமித்
- வேதியியல் - அறிவிக்கப்படவில்லை
- மருத்துவம் - எலிசபெத் பிளாக்பர்ன், கெரொல் கிரெய்டர், ஜாக் சோஸ்டாக்
- அமைதி - அறிவிக்கப்படவில்லை
- பொருளியல் - அறிவிக்கப்படவில்லை
- இலக்கியம் - அறிவிக்கப்படவில்லை
இவற்றையும் பார்க்கவும்
2009 நாட்காட்டி
மேற்கோள்களும் ஆதாரங்களும்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை