2010கள்
பத்தாண்டு
2010கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலப்பகுதி 2010ஆம் ஆண்டு ஆரம்பித்து 2019-இல் முடிவடைந்தது.
ஆயிரவாண்டுகள்: | 3-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு - 22-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1980கள் 1990கள் 2000கள் - 2010கள் - 2020கள் 2030கள் 2040கள் |
ஆண்டுகள்: | 2010 2011 2012 2013 2014 2015 2016 2017 2018 2019 |
நிகழ்வுகள்
2010
- ஜனவரி 1 - பாகிஸ்தானில் கைப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 88 பேர் உயிரிழந்தனர்.
- ஜனவரி 2 - 1912 ஆம் ஆண்டில் அண்டார்க்டிக்காவில் தொலைந்து போன ஆஸ்திரேலிய விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- ஜனவரி 3 - கொங்கோவில் நியாமுராகிரா எரிமலை வெடித்தது.
- ஜனவரி 4 - உலகின் மிக உயர்ந்த வானளாவி புர்ஜ் துபாய் துபாயில் திறக்கப்பட்டது.[1]
- ஜனவரி 4 - எகிப்தில் உலகின் மிகப் பெரிய பழமையான கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
- ஜனவரி 5 - சூரியக் குடும்பத்திற்கு வெளியே ஐந்து புதிய உலகங்களை கெப்லர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது.
- ஜனவரி 7 - இராணுவக் காவலில் இருந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை காலமானார்.
- பெப்ரவரி 12–28 – 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கனடா, வான்கூவர், மற்றும் விசுலர் ஆகிய இடங்களில் இடம்பெற்றன.
- சூன் 11 - சூலை 11 – 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தென்னாபிரிக்காவில்.
- சூன் 16 - பூடான் நாட்டில் புகையிலைக்கு தடை
- சூலை 17 - அனைத்துலக நீதிமன்றம் துவங்கி, சர்வதேச நீதிக்கான உலக நாளாக கொண்டாட ஐநா அறிவித்தது.
- ஆகத்து 31 - ஈராக்கில் இருந்து அமெரிக்கப் போர்ப்படைகள் விலகின.
2011
- சனவரி 1 - யூரோ வலயத்தின் 17வது உறுப்பு நாடாக எசுத்தோனியா இணைந்தது.
- சனவரி 3 - சிலியின் நடுப்பகுதியில் 7.1 அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது.
- சனவரி 8 - 1811 இல் தொலைந்த யூஎஸ்எஸ் ரிவெஞ்ச் என்ற அமெரிக்கப் போர்க்கப்பலின் எச்சங்கள் ரோட் தீவில் கண்டுபிடிக்கப்பட்டன.
- சனவரி 9 – தெற்கு சூடான் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தியது.
- சனவரி 9 - இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலர் உயிரிழந்தனர்.
- சனவரி 10 - ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 72 பேர் உயிரிழந்தனர்.
- சனவரி 11 - புவியைப் போன்ற மிகச்சிறிய கெப்லர்-10பி என்ற புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- சனவரி 12 - ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இடம்பெற்ற வரலாறு காணாத வெள்ளத்தில்,குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.
- சனவரி 13 - பிரேசில் வெள்ளப்பெருக்கில் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- சனவரி 14 - சபரிமலைக்கு அருகே கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 100 பேர் உயிரிழந்தனர்.[2]
- சனவரி 14 - துனீசியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து அரசுத்தலைவர் சவுதி அரேபியாவுக்குத் தப்பியோடினார்.
- ஏப்ரல் 3 - கசக்ஸ்தான் நாட்டின் அதிபர் நுர்சுல்தான் நசர்பாயெவ் தேர்தலில் 95.5% வாக்குகள் பெற்று சாதனை படைத்தார்.
2012
- பெப்ரவரி 1 - எகிப்தில் கால்பந்துப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற வன்முறைகளில் 79 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 6 - இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா & நியூசிலாந்தின் அரியணையேறிய 60 வது ஆண்டு நிறைவை (அதேபோல் பொதுநலவாய நாடுகளின் தலைவராக அவர் ஆனதின் 60வது ஆண்டு நிறைவையும்) குறிக்கும் விதமாக, அவருக்கு வைர விழா கொண்டாட்டம் இடம்பெற்றது.
- பெப்ரவரி 13 - ஐக்கிய நாடுகள் கல்வி, சமூக, பண்பாட்டு நிறுவன தீர்மானப்படி உலக வானொலி நாள் என முதன் முதல் கடைபிடிக்கப்பட்டது.
- பெப்ரவரி 15 - ஒந்துராசு சிறை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 360 பேர் இறந்தனர்.
- மார்ச் 9 - இந்தியாவில் பாஷ்மினா ஆடு என்ற ஆட்டைப் போல் குளோனிங் முறையில் நூரி என்ற ஆடு உற்பத்தி செய்யப்பட்டது.
- மார்ச் 13 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் தனது அச்சுப் பதிப்பை நிறுத்திக் கொண்டது.
- மார்ச் 22 - மாலியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசுத்தலைவர் அமடூ தவுரே பதவியிழந்தார்.
- ஏப்ரல் 6 - அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் மாலியில் இருந்து அசவாத் விடுதலை பெற்றதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.
- ஏப்ரல் 26 - முன்னாள் லைபீரிய அரசுத்தலைவர் சார்ல்சு டெய்லர் சியேரா லியோனி உள்நாட்டுப் போரில் போர்க்குற்றம் இழைத்ததாக அறிவிக்கப்பட்டார்.
- மே 2 - நோர்வே ஓவியர் எட்வர்ட் மண்ச்சின் அலறல் (ஓவியம்) ஓவியம் US$120 million in a நியூயார்க்கில் 120 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போய் உலக சாதனை படைத்தது.
- மே 22 - டோக்கியோ இசுக்கை றீ திறந்து வைக்கப்பட்டது.
- சூன் 5 - 6 - நூற்றாண்டின் இரண்டாவதும் கடைசியுமான வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு இடம்பெற்றது. அடுத்த நிகழ்வு 2117, 2125 இல் நிகழும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
- சூலை 27 - ஆகத்து 12 - 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இலண்டனில் இடம்பெற்றன.
- ஆகத்து 6 - கியூரியோசிட்டி, செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் செவ்வாய்க் கோளில் இறங்கியது.
2013
- சனவரி 11 - வடக்கு மாலியில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக பிரெஞ்சுப் படையினர் தமது ஐந்து-மாத படை நடவடிக்கையை ஆரம்பித்தனர்.[3]
- பெப்ரவரி 15 - உருசியாவின் மத்திய ஊரல் பகுதியில் செல்யாபின்ஸ்க் நகரில் எரிவிண்மீன் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்வில் கட்டடங்கள் சேதமடைந்ததில் நானூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.[4]
- பெப்ரவரி 28 - திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தார்[5]
- மார்ச் 13 - கர்தினால் பிரான்சிசு 266வது திருத்தந்தையாக தேர்த்ந்டுக்கப்பட்டார்.[6]
- மார்ச் 24 - மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போராளிகள் தலைநகர் பாங்கியைக் கைப்பற்றியதை அடுத்து அரசுத்தலைவர் பிரான்சுவா பொசிசே காங்கோவிற்கு தப்பி ஓடினார்.[7]
- ஏப்ரல் 15 - 2013 பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்புக்கள்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பாஸ்டன் மாரத்தான் நிகழ்வில் குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர்.[8]
- ஏப்ரல் 24 - டாக்கா நகரின் சாவார் உள் மாவட்டம் அருகே மாடிக் குடியிருப்புகள் இடிந்து வீழ்ந்ததில் 1,129 பேர் கொல்லப்பட்டனர். 2500 பேர் காயமடைந்தனர்.[9]
- மே 27 - கனடா நாட்டின் பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய பனியில் மூடியிருந்த கடல் பாசித்தாவரம் உயிர்த்தெழுந்தது.[10]
- ஜூன் 14-30 - இந்தியாவின் உத்தராகண்டம், இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் 5,700 பேர் கொல்லப்பட்டனர்.[11]
- ஜூலை 1 - குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் 28வது உறுப்பு நாடாக இணைந்து கொண்டது.[12]
- சூலை 3 - எகிப்தின் அரசுத்தலைவர் முகம்மது முர்சி இராணுவப் புரட்சியை அடுத்து பதவி இழந்தார்.[13]
- அக்டோபர் 18 – சவூதி அரேபியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் உறுப்பினராக இணைய மறுத்து விட்டது.
- நவம்பர் 8 - பிலிப்பீன்சு, வியட்நாமில் சூறாவளி ஹையான் தாக்கியதில் 6,149 பேர் கொல்லப்பட்டனர்.[14]
- டிசம்பர் 10 - லத்தீன் அமெரிக்க நாடான உருகுவை அந்த நாட்டில் போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கியது.
- டிசம்பர் 14 - சீனாவின் சாங் ஈ 3 விண்கலம் நிலாவில் தரையிறங்கியது.[15]
இலங்கை நிகழ்வுகள்
- சனவரி 8 - சர்ச்சைக்குரிய திவி நெகும சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது.
- சனவரி 11 - இலங்கை மீயுயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்காக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- மார்ச் 21 - இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா சபையில் 25 / 13 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
- மார்ச் 26 - இலங்கை வானொலிக்கூடான தனது சேவைகளை பிபிசி நிறுத்துவதாக அறிவித்தது.
- ஏப்ரல் 3 - கிளிநொச்சியில் உள்ள உதயன் பத்திரிகைப் பணிமனை தாக்கப்பட்டது. பலர் காயமடைந்தனர்.
- ஏப்ரல் 13 - யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை நிறுவனம் தாக்கப்பட்டது. அச்சியந்திரம் தீக்கிரையாக்கப்பட்டது.
- மே 12 - மகாசென் சூறாவளி வடக்கு இலங்கையைத் தாக்கியதில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 7 பேர் கொல்லப்படனர், 3,881 பேர் இடம்பெயர்ந்தனர்.
- சூலை 5 - திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006: 5 மாணவர்கள் படுகொலை தொடர்பில் 12 படையினர் கைது செய்யப்பட்டனர்.
- ஆகத்து 25 - ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தமது 7 நாள் இலங்கைப் பயணத்தை ஆரம்பித்தார்.
- செப்டம்பர் 14 - இலங்கையில் வடக்குப் பகுதி தொடருந்து சேவை ஓமந்தை முதல் கிளிநொச்சி வரை நீடிக்கப்பட்டது.
- செப்டம்பர் 21 - இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபையைக் கைப்பற்றியது.
- அக்டோபர் 3 - பிரபாகரனின் புதுக்குடியிருப்பு வீடு படையினரால் தகர்க்கப்பட்டது.
- அக்டோபர் 7 - இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013: க. வி. விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக அதிபர் மகிந்த ராசபக்ச முன்னிலையில் பதவியேற்ரார்.
- அக்டோபர் 27 - இ-03 அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
- அக்டோபர் 31 - இலங்கைப் படையினரால் கொல்லப்பட்ட இசைப்பிரியா தொடர்பான பல மூல ஆவணங்களை சேனல் 4 வெளியிட்டது.
- நவம்பர் 15 - பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு 2013 கொழும்பில் ஆரம்பமானது. இந்திய, கனேடிய, மொரீசியசுப் பிரதமர்கள் பங்குபற்றவில்லை.
- நவம்பர் 15 - பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் யாழ்ப்பாணம் சென்றார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் யாழ்ப்பாணம் சென்ற முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இவராவார்.
- டிசம்பர் 20 - மன்னார் திருக்கேதீச்சரம் கோவிலுக்கு அருகில் பெரும் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
- டிசம்பர் 29 - கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டார்.
2014
====சனவரி 2014====
- சனவரி 1 - யூரோ வலயத்தின் 18வது உறுப்பு நாடாக லாத்வியா இணைந்தது.
- ஜனவரி 30 - மகேந்திரகிரியில் அமைந்துள்ள திரவ உந்து மையம் தன்னாட்சி உரிமை பெற்றது.
பெப்ரவரி 2014
- பெப்ரவரி 1 - மும்பை மோனோரயில் திட்டம் ஆரம்பமானது.
- பெப்ரவரி 1 - இந்தோனேசியாவின் சினாபுங் எரிமலை வெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 3 - உலகில் மிக வயதான பெரும் பூநாரை தனது 83 ஆவது வயதில் ஆத்திரேலியாவின் அடிலெயிட் நகரில் இறந்தது.
- பெப்ரவரி 4 - எகிப்தின் தெற்கே எத்ஃபூ என்ற பண்டைய குடியேற்றப் பகுதியில் 4,600 ஆண்டு காலப் பழமையான படிப் பிரமிது ஒன்றை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- பெப்ரவரி 4 - ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.
- பெப்ரவரி 6 - ஆத்திரேலியாவில் புதிய இன இராட்சத சொறிமுட்டை கண்டுபிடிக்கப்பட்டது.
- பெப்ரவரி 7 - 23 - 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் உருசியாவின் சோச்சி நகரில் இடம்பெற்றன.
- பெப்ரவரி 7 - கிலாலம் மொழி பேசும் கடைசி அமெரிக்க பழங்குடி இனத்தவர் இறந்தார்.
- பெப்ரவரி 9 - மிகப் பழமையானதாகக் கருதப்படும் எஸ்.எம்.எஸ்.எஸ் ஜெ031300.36-670839.3 என்ற விண்மீன் 13.6 பில்லியன் ஆண்டுகள் வயதுடையது என ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
- பெப்ரவரி 9 - ஆபிரிக்காவிற்கு வெளியே சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- பெப்ரவரி 11 - அல்ஜீரியா ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் 103 பேர் கொல்லப்பட்டனர்.*பெப்ரவரி 13 - இந்தோனேசியாவின் ஜாவாத் தீவில் கெலூட் எரிமலை வெடித்தது.
- பெப்ரவரி 13 - வதையா இறப்பை 18 வயதிற்குட்பட்டோருக்கும் நீடிக்க பெல்ஜியம் சட்டம் கொண்டு வந்தது.
- பெப்ரவரி 14 - ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால், டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் துறந்தார்.
- பெப்ரவரி 16 - நேபாள விமானம் ஒன்று அர்காகாஞ்சி மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 17 - 200 ஈஎம்26 என்ற பெரும் சிறுகோள் ஒன்று பூமிக்கு எவ்விதப் பாதிப்பும் இன்றித் தாண்டிச் சென்றது.
- பெப்ரவரி 18 - இராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
- பெப்ரவரி 18 - தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்க வகை செய்யும் ஆந்திர மறுசீரமைப்பு மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- பெப்ரவரி 22 - உக்ரைனில் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் புதிய இடைக்காலத் தலவரானார்.
- பெப்ரவரி 24 - மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 4.4 பில்லியன் ஆண்டுகள் பழைமையான படிகம் பூமியின் மிகப்பழமையான மேலோடு என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பெப்ரவரி 27 - கெப்லர் (விண்கலம்) புதிதாக 715 கோள்களைக் கண்டுபிடித்தது.
மார்ச் 2014
- மார்ச் 5 - தமது அரசுக்கு எதிராக சதி செய்வதாகக் குற்றம் சாட்டி பனாமாவுடனான தூதரகத் தொடர்புகளை வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் நிக்கோலசு மதுரோ முறித்துக் கொண்டார்.
- மார்ச் 8 - 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 தாய்லாந்து வளைகுடாவிற்கு மேல் காணாமல் போனது. இது இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- மார்ச் 8 - ஆசியக் கிண்ணம் 2014: இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாக்கித்தான் அணியை 5 இலக்குகளால் வென்று ஆசியக் கிண்ணத்தை ஐந்தாவது தடவையாகப் பெற்றுக் கொண்டது.
- மார்ச் 18 - சனிக் கோளின் டைட்டான் துணைக்கோளில் திரவ அலைகள் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. வெளி உலகில் திரவ அலை கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.
- மார்ச் 21 - உக்ரைனின் பகுதியான கிரிமியாவை உருசியாவுடன்]] இணைக்கும் சட்டமூலத்தில் உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் கையெழுத்திட்டார்.
- மார்ச் 24 - கிரிமியா பிரச்சினை தொடர்பாக ஜி8 அமைப்பில் இருந்து உருசியா இடைநிறுத்தி வைக்கப்பட்டது.
- மார்ச் 27 - இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உட்பட 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.
- மார்ச் 27 - ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்க ஜநா மனித உரிமைகள் பேரவை அங்கீகரித்தது.
ஏப்ரல் 2014
- ஏப்ரல் 16 - தென் கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டனர், 100 பேரைக் காணவில்லை.
- ஏப்ரல் 27 - முன்னாள் திருத்தந்தைகள் 23ம் யோவான், மற்றும் 2ம் அருள் சின்னப்பர் ஆகியோரைக் கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்களாக அறிவித்தது.
- ஏப்ரல் 30 - இலங்கையில் பளை நோக்கிச் சென்ற விரைவு தொடருந்து ஒன்று மாத்தறை நோக்கிச் சென்ற விரைவு வண்டி ஒன்றுடன் குருணாகல் பொத்துகெர என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதில் 75 பேர் காயமடைந்தனர்.
- ஏப்ரல் 30 - புரூணையில் கடுமையான இசுலாமியச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மே 2014
- மே 2 - 3,607.4 மீ உயரத்தில் உலகின் மிக உயரமான சுரங்க ரயில் பாதை சீனாவில் திறக்கப்பட்டது.
- மே 12 - 1974 ஆம் ஆண்டில் சைப்பிரசு நாட்டை ஆக்கிரமித்து வடக்கு சைப்பிரசு என்ற அங்கீகரிக்கப்படாத பிராந்தியத்தை உருவாக்கியமைக்காக துருக்கி 124 மில்லியன் டாலர்கள் நட்ட ஈடு செலுத்த வேண்டும் என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- மே 13 - எயிட்டியின் வடக்குக் கரைக்கு அப்பால் கொலம்பசு பயன்படுத்திய கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
- மே 16 - இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அஇஅதிமுக 37 இடங்களைக் கைப்பற்றியது.
- மே 16 - இந்தியப் பொதுத் தேர்தலில் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 339 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. ஆளும் காங்கிரசுக் கூட்டணி 59 இடங்களைக் கைப்பற்றியது.
- மே 18 - ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படைத்துறையால் கைது செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியா தொடர்பாக இராணுவத்தினர் இழைத்ததாகக் கருதப்படும் மேலும் பல போர்க்குற்றப் படங்கள் வெளியாகின.
- மே 22 - தாய்லாந்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
- மே 23 - கொங்கோ சனநாயகக் குடியரசின் முன்னாள் ஆயுதக் குழுத் தலைவர் செருமைன் கட்டாங்கா புரிந்த போர்க்குற்றங்களுக்காக அவருக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் 12 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்தது.
- மே 26 - நரேந்திர மோதி 15வது இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்.
- மே 31 - ஆப்கானித்தானில் தாலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஒரேயொரு அமெரிக்க ஆயுதப் படையினனான போவ் பேர்க்டால் என்பவர் குவாண்டானமோ விரிகுடாவில் சிறை வைக்கப்பட்டிருந்த ஐந்து ஆப்கானியக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டார்.
சூன் 2014
- சூன் 1 - ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா அதிகாரபூர்வமாக இந்தியாவின் 29வது மாநிலமானது. (இந்துத்தான் டைம்சு) பரணிடப்பட்டது 2014-06-07 at the வந்தவழி இயந்திரம்
- சூன் 2 - ஆப்பிள் நிறுவனம் சுவிஃப்ட் என்ற புதிய நிரல் மொழியை அறிமுகப்படுத்தியது.
- சூன் 2 - பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுது அப்பாஸ் ஃபத்தா, ஹமாஸ் உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஒன்றிணைவு அரசை அறிவித்தார்.
- சூன் 4 - அமெரிக்காவில் பெண்ணின் தோலினால் பிணைக்கப்பட்ட ஒரு புத்தகம் ஹார்வடு பல்கலைக்கழக நூலகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
- சூன் 5 - அயர்லாந்தில் துவாம் என்ற இடத்தில் 796 குழந்தைகளின் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
- சூன் 6 - மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா தொற்றுநோயின் தாக்கத்தில் 200 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
- சூன் 8 - கராச்சியின் ஜின்னா விமானநிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
- சூன் 10 - ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசுல் இசுலாமியத் தீவிரவாதிகளினால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
- சூன் 12 - ஈராக்கிய குர்துகள் கிர்க்குக் நகரைக் கைப்பற்றினர்.
- சூன் 12 - 2014 உலகக்கோப்பை காற்பந்து: ஆரம்ப நிகழ்வுகள் பிரேசிலில் ஆரம்பமாயின.
- சூன் 13 - பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நாடாளுமன்றத் தடையை நாடாளுமன்றக் குழு அங்கீகரித்தது.
- சூன் 14 - உக்ரைனிய இராணுவ விமானம் ஒன்றை உருசிய-ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்தனர்.
- சூன் 14 - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.
- சூன் 15 - வடக்கு வரீசித்தானில் பாக்கித்தானியப் படையினர் படை நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
- சூன் 16 - இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், 2014: இலங்கையின் தெற்கே பேருவளையில் வெல்லிப்பிட்டி பள்ளிவாசல் அருகே முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் நடந்த வன்முறைகளின் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 78 பேர் காயமடைந்தனர். பள்ளிவாசல்கள், மற்றும் கடைகள் எரியூட்டப்பட்டன.
- சூன் 18 - துருக்கியில் 1980 இல் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பில் பங்குகொண்ட முன்னாள் அரசுத்தலைவர் கேனன் எவ்ரென், 96, ஆயுள் தண்டனை பெற்றார்.
- சூன் 19 - நைஜீரியாவின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் சானி அபாச்சா தனது ஆட்சிக் காலத்தில் 1990களில் கொள்ளையடித்த பணத்தின் ஒரு பகுதியான 227 மில்லியன் டாலர்களை லீக்டன்ஸ்டைன் நைஜீரியாவுக்குக்த் திரும்பத் தர ஒப்புதல் அளித்துள்ளது.
- சூன் 20 - இரண்டாம் உலகப் போரின் பின்னர் முதற் தடவையாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 50 மில்லியனை 2013 ஆம் ஆண்டில் தாண்டியது.
- சூன் 22 - இந்தியாவில் குஜராத்தில் உள்ள 11ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ராணி-கி-வாவ் படித்துறை கிணறு, மியான்மரின் பியூ பழமை நகரங்கள் உலகப் பாரம்பரியக் களமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- சூன் 23 - மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா, டென்மார்க்கின் ஸ்டெவன்சு கிளின்ட் ஆகியவை உலகப் பாரம்பரியக் களமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- சூன் 25 - பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தின் கிளை அமைப்பான ஜமாத்-உத்-தாவாவை பயங்கரவாத இயக்கமாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.
- சூன் 26 - இலங்கையில் இந்துக் கோயில்களில் நடத்தப்படும் மிருக பலி யாகங்களை முழுமையாகத் தடை செய்ய முடியாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- சூன் 28 - முதலாம் உலகப் போருக்கு வழிவகுத்த ஆத்திரிய இளவரசர் பிரான்சிஸ் பேர்டினண்ட்டின் படுகொலையின் 100 ஆம் ஆண்டு நினைவை பொசுனியா எர்செகோவினாவின் சாரயேவோ நகரம் நினைவு கூர்ந்தது.
- சூன் 28 - 2014 சென்னை கட்டிட விபத்து: சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் 11-மாடிக் குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.
- சூன் 29 - நைஜீரியாவில் சிபோக் நகரில் உள்ள நான்கு கிறித்தவக் கோவில்களை இசுலாமியத் தீவிரவாதிகள் தீக்கிரையாக்கி, அங்கிருந்த குறைந்தது 30 பேரைக் கொன்றனர்.
சூலை 2014
- சூலை 1 - இந்திய-அமெரிக்க அறிவியலாளர் அக்கோரி சின்ஹாவை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய அமெரிக்கா அண்டார்க்டிகாவில் உள்ள மலை ஒன்றுக்கு சின்ஹா என்று பெயர் வைத்தது.
- சூலை 2 - பொது இடத்தில் மது அருந்தும் சுதந்திரம் மக்களுக்கு உள்ளதென இலங்கை நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
- சூலை 3 - தொங்கா அரசு லாவு தீவுகளுக்காக சர்ச்சைக்குரிய மினெர்வா பவழப்பாறைப் பகுதியை பிஜி நாட்டுக்கு வழங்கும் திட்டம் ஒன்றைப் பரிந்துரைத்துள்ளது.
- சூலை 8 - இந்தியாவுக்கும் வங்காளதேசத்திற்கும் இடையே வங்காள விரிகுடா குறித்த எல்லைத் தகராறு பற்றி விசாரித்த ஐக்கிய நாடுகள் அவையின் நிரந்தர நடுவர் நீதிமன்றம் வங்காளதேசத்துக்குச் சார்பாகத் தீர்ப்பளித்தது.
- சூலை 13 - 2014 உலகக்கோப்பை காற்பந்து: இறுதிப் போட்டியில் செருமனி அணி அர்ச்சென்டீனாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோபையைக் கைப்பற்றியது.
- சூலை 15 - பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கை ஒன்றை ஏற்றுக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
- சூலை 15 -மாஸ்கோவில் சுரங்கத் தொடருன்று ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- சூலை 16 - ஐரோப்பாவின் ரொசெட்டா விண்கலம் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியின் அபூர்வமான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது. இவ்வால்வெள்ளி இரு பொருட்களால் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது.
- சூலை 16 - 1995 பொசுனியா போரின் போது சிரெபிரெனிக்காவில் 300 இற்கும் மேற்பட்ட மக்களின் படுகொலைக்கு நெதர்லாந்து அரசாங்கம் பொறுப்பு என நெதர்லாந்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது.
- சூலை 17 - ஆம்ஸ்டர்டாம் இலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைனின் தோனெத்ஸ்க்கில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.
- சூலை 18 - பொலிவியாவில் 10 வயது சிறுவர்கள் பாடசலைக்கு சென்றுகொண்டே சுய தொழிலில் ஈடுபடவும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தவும் அனுமதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டது.
- சூலை 23 - லித்துவேனியா நாடு 2015 சனவரி 1 முதல் யூரோவைத் தனது நாணயமாக வைத்திருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொண்டது.
- சூலை 24 - இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மேடக்கில் பாதுகாப்பற்ற கடவையைக் கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது தொடருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 20 மாணவர்கள் மற்றும் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
- சூலை 24 - புர்க்கினா பாசோவில் இருந்து 116 பேருடன் அல்சீரியா நோக்கிப் புறப்பட்ட ஏர் அல்சீரியா விமானம் 5017 புறப்பட்ட 50 நிமிடங்களில் தொடர்புகளை இழந்தது. இதன் சிதந்த பாகங்கள் மாலியில் கண்டுபிடிக்கப்பட்டன.
- சூலை 27 - பிலிப்பீன்சின் மக்கள்தொகை 100 மில்லியனைத் தாண்டியது.
- சூலை 30 - லைபீரியாவில் பரவி வரும் எபோலா நோயைத் தடுக்கும் நோக்கில் அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டன. மேற்கு ஆப்பிரிக்காவில் 672 பேர் இதுவரை உயிரிழந்தனர்.
- சூலை 31 - தைவானின் கவ்ஷியூங் நகரில் நிலத்தடி எரிவாயுக் குழாய் வெடித்ததில் 25 பேர் உயிரிழந்தனர். 271 பேர் காயம் அடைந்தனர்.
ஆகத்து 2014
- ஆகத்து 1 - எபோலா ஆட்கொல்லி நோய் பரவியதை அடுத்து லைபீரியா, சியேரா லியோனி நாடுகள் அவசரகால நிலையைப் பிறப்பித்தன. பள்ளிகள் மூடப்பட்டன.
- ஆகத்து 2 - தமிழறிஞர் தனிநாயகம் அடிகளின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.
- ஆகத்து 3 - முதலாம் உலகப் போரில் பிரான்சு மீது செருமனி போரை அறிவித்த நாளின் நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் நிகழ்வில் பிரெஞ்சு, மற்றும் செருமனி அரசுத்தலைவர்கள் பங்குபற்றினர்.
- ஆகத்து 5 - பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: எகிப்திய மத்தியத்தத்துடன் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இசுரேலியப் படையினர் காசா கரையில் இருந்து வெளியேறினர்.
- ஆகத்து 6 - 2014 யுன்னான் நிலநடுக்கம்: சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக அதிகரித்தது.
- ஆகத்து 6 - ஐரோப்பாவின் ரொசெட்டா விண்கலம் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியின் சுற்றுப்பாதையை அடைந்தது. வால்வெள்ளி ஒன்றின் சுற்றுப்பாதையை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
- ஆகத்து 8 - அமெரிக்க எப்/ஏ-18 போர்விமானங்கள் ஈராக்கின் இசுலாமிய தேசப் போராளிகளின் தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தின.
- ஆகத்து 8 - மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா வைரசு பரவல் ஒரு உலகளாவிய அவசர நிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
- ஆகத்து 9 - விடுதலை மற்றும் நீதிக் கட்சி என்ற முசுலிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியை எகிப்திய நீதிமன்றம் கலைத்தது.
- ஆகத்து 12 - மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோய்த்தாக்கத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியது.
- ஆகத்து 15 - பிலிப்பீன்சில் பாங்சமோரோ என்ற தனி அலகு ஒன்றை அமைப்பதற்கு மோரோ இசுலாமிய விடுதலை முன்னணியுடன் பிலிப்பீன்சு அரசு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.
- ஆகத்து 16 - சியோல் நகரில் 19ம் நூற்றாண்டில் நம்பிக்கைக்காக இறந்த 124 கத்தோலிக்கர்களை திருத்தந்தை பிரான்சிசு புனிதப்படுத்தினார்.
- ஆகத்து 19 - இசுலாமிய தேச இயக்கத்தினர் 2012 இல் சிரியாவில் கடத்தப்பட்ட அமெரிக்க செய்தியாளர் ஜேம்சு ஃபோலி என்பவரின் தலையைத் துண்டித்துக் கொலை செய்து, அதைக் காணொளியில் எடுத்து வெளியிட்டனர்.
- ஆகத்து 20 - சப்பானில் நிலச்சரிவுகள் காரணமாக 27 பேர் உயிரிழந்தனர்.
- ஆகத்து 23 - பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேலுக்கு உளவு பார்த்தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பாலத்தீனர்களை ஹமாஸ் இயக்கத்தினர் பகிரங்கமாக சிரச்சேதம் செய்தனர்.
- ஆகத்து 24 - எபோலா தொற்றுநோய்த் தாக்கத்தால் காங்கோ சனநாயகக் குடியரசில் இருவர் உயிரிழந்தனர்.
- ஆகத்து 25 - நைஜீரியாவில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை போகோ அராம் இயக்கத்தினர் இசுலாமிய நாடாகப் பிரகடனப்படுத்தினர்.
- ஆகத்து 29 - மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: செனிகலில் முதலாவது நோயாளி இனங்காணப்பட்டார்.
செப்டம்பர் 2014
- செப்டம்பர் 3 - இலங்கை, முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோயிலின் வருடாந்த மிருக வேள்வி பூசையை உரிய அனுமதி பெற்ற பின்னர் நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- செப்டம்பர் 6 - இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக அதன் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டார்.
- செப்டம்பர் 10 - புற்றுநோயைத் தோற்றுவிக்கும் புற ஊதாக் கதிர்களைக் கட்டுப்படுத்தும் ஓசோன் படலத்தின் பருமன் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாக புதிய ஐநா ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
- செப்டம்பர் 12 - நாசாவின் செவ்வாய்த் தரையுளவியான கியூரியோசிட்ட் தனது எயோலிசு மொன்சு என்ற தனது கடைசி இலக்கை அடைந்தது.
- செப்டம்பர் 18 - குறு ஒளிர்வண்டம் எம்60-யூசிடி1 என்ற குறு ஒளிர்வண்டம் மீபெரும் கருந்துளையை தனது மையத்தில் கொண்டுள்ள மிகச்சிறிய விண்மீன் பேரடை என அறியப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 19 - இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014: இசுக்கொட்லாந்து விடுதலைக்கு எதிராக (55.3%) வாக்களித்தது.
- செப்டம்பர் 22 - நாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.
- செப்டம்பர் 24 - இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை வெற்றிகரமாக அடைந்தது.
- செப்டம்பர் 27 - சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் செயலலிதா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. செயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.
- செப்டம்பர் 27 - மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோய்த் தாக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியது.
- செப்டம்பர் 30 - பர்மிய கடும்போக்கு தேரர், அசின் விராத்து, இலங்கையின் பௌத்த இயக்கமான பொது பல சேனா இயக்கத்தினரும் இணைந்து, இசுலாமியப் போராளிகளுக்கு எதிராக போராடப் போவதாக கொழும்பில் அறிவித்தனர்.
அக்டோபர் 2014
- அக்டோபர் 10 - 2014 அமைதிக்கான நோபல் பரிசு பாக்கித்தானின் மலாலா யூசப்சையி, இந்தியாவின் கைலாசு சத்தியார்த்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- அக்டோபர் 16 - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்தது.
- அக்டோபர் 18 - கென்யாவில் மிக அருகிய இன ஆண் வடக்கு வெள்ளை மூக்குக்கொம்பன் ஒன்று இறந்தது.
- அக்டோபர் 29 - 2014 பதுளை மண்சரிவு: இலங்கையின் மலையகத்தில் பதுளையில் இடம்பெற்ற மண்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையுண்டனர்.
- அக்டோபர் 30 - சுவீடன் பாலத்தீன நாட்டை அதிகாரபூர்வமாக சுதந்திர நாடாக அங்கீகரித்தது. இசுரேல் சுவீடனுக்கான தனது தூதரைத் திரும்ப அழைத்தது.
- அக்டோபர் 31 - புர்க்கினா பாசோவில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடுத்து அரசுத்தலைவர் பிளைசி கொம்போரே பதவி விலகினார். இராணுவத்தலைவர் ஒனோரே டிராரே இடைக்காலப் பொறுப்பை ஏற்றார்.
நவம்பர் 2014
- நவம்பர் 12 - ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ரொசெட்டா விண்கலத்திலிருந்து ஏவப்பட்ட பிலே தரையிறங்கி 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியின் மேற்பரப்பினை அடைந்தது.
- நவம்பர் 13 - மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: மேற்கு ஆப்பிரிக்காவின் கினி, லைபீரியா, சியேரா லியோனி ஆகிய நாடுகளில் இறந்தோரின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியது.
- நவம்பர் 14 - 67பி வால்வெள்ளியில் தரையிறங்கிய ஃபிலே விண்கலம் பூமியுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தியதை அடுத்து அதன் மின்கலன்கள் போதிய சூரிய வெளிச்சம் இல்லாமையினால் செயலிழந்தன.
- நவம்பர் 23 - உலக சதுரங்கப் போட்டி 2014: உருசியாவின் சோச்சி நகரில் நோர்வே ஆட்டக்காரர் மாக்னசு கார்ல்சன் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த்தை எதிர்த்து 11வது ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் உலக வாகையாளர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
- நவம்பர் 23 - இசுரேல் ஒரு யூதர்களின் நாடு என்பதை அங்கீகரிக்கும் சட்டத்திற்கு இசுரேலிய அம்மைச்சரவை ஒப்புதல் அளித்தது.
டிசம்பர் 2014
- டிசம்பர் 3 - சப்பான் (162173) 1999 ஜேயூ3 என்ற சிறுகோளில் இருந்து மண், பாறை மாதிரிகளை எடுத்துவர தனது ஹயபுசா 2 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது.
- டிசம்பர் 6 - ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் UTC இரவு 8:00 மணிக்கு விழித்துக் கொண்டது. இது புளூட்டோ மற்றும் அதன் சந்திரன்களை ஆராயும்.
- டிசம்பர் 12 - இலங்கை கொழும்பு நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள அத்துருகிரிய என்ற இடத்தில் வான்படையின் அந்தோனொவ்-32 ரக விமானம் ஒன்று வீழ்ந்து எரிந்ததில் 4 படையினர் கொல்லப்பட்டனர். ஒருவர் கடும் காயங்களுடன் உயிர் தப்பினார்.
- டிசம்பர் 15 - ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் உணவுசாலை ஒன்றில் ஆயுதம் தாங்கிய நபர் 17 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்த நிகழ்வு 16 மணி நேரத்தின் பின்னர் டிசம்பர் 16 அதிகாலை காவல்துறையின் அதிரடித் தாக்குதல் மூலம் முடிவுக்கு வந்தது. இரண்டு பணயக் கைதிகளும் துப்பாக்கி நபரும் கொல்லப்பட்டனர். நால்வர் காயமடைந்தனர்.
- டிசம்பர் 16 - 2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல்: பாக்கித்தான், பெசாவர் நகரில் இராணுவத்தினரால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றில் தாலிபான்கள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 132 சிறுவர்கள் உடபட குறைந்தது 141 பேர் வரை கொல்லப்பட்டனர். ஆறு தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 17 - ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து பாலத்தீன ஹமாஸ் அமைப்பை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியது.
- டிசம்பர் 28 - இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பேருடன் சென்ற இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 சாவகக் கடல் வான்பரப்பில் காணாமல் போனது.
2015
2016
==== சனவரி 2016====
- சனவரி 1 - சீனாவில் குடும்பம் ஒன்றுக்கு ஆகக்கூடியது இரு குழந்தைகள் பெறும் திட்டம் அமுலுக்கு வந்தது.[16]
- சனவரி 1 - யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை, கோப்பாய் ஆகிய இடங்களில் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 700 ஏக்கர் நிலம் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது. (தி ஐலண்டு)[தொடர்பிழந்த இணைப்பு]
- சனவரி 4 - இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லையருகே இம்பால் நகருக்கு 20 கிமீ தூரத்தில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். (என்பிசி) (டைம்சு ஒஃப் இந்தியா), (ஏபி) பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- சனவரி 4 - நான்கு புதிய தனிமங்கள் (113, 115, 117, 118) தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டதை பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் உறுதிப்படுத்தியது. இவை தற்காலிகமாக உன்னுன்டிரியம், உன்னுன்பென்டியம், உனுன்செப்டியம், உனுனோக்டியம் ஆகிய பெயர்களைப் பெற்றுள்ளன. (கார்டியன்)
- சனவரி 6 - வடகொரியாவில் சஞ்சிபேகம் என்ற இடத்தில் இடம்பெற்ற 5.1 அளவு நிலநடுக்கம் அணுகுண்டு வெடிப்பு என சந்தேகிக்கப்படுகிறது. தாம் வெற்றிகரமாக ஐதரசன் குண்டு சோதனைய நடத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. (ஏஎஃப்பி) (ஏபி) (புளூம்பேர்க்) (கார்டியன்)
- சனவரி 6 - 1404.49 காரட்டுகள் எடை கொண்ட உலகிலேயே மிகப் பெரிய புளு ஸ்டார் சஃபையர் எனக் கருதப்படும் நட்சத்திர நீலக்கல் ஒன்று இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- சனவரி 16 - தாய்வான் தேர்தல்களில் ஆளும் குவோமின்டாங் கட்சி நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது. 1911 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக இக்கட்சி தோற்றுள்ளது. (கார்டியன்)
- சனவரி 21 - கிபி 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்போடியாவின் கெமர் பேரரசுக் கால கால சிவ-மாலிய கலையம்சமான அரிகரன் சிலையின் தலைப்பாகம் பிரெஞ்சு அரசால் கம்போடியாவிற்கு 126 ஆண்டுகளுக்குப் பின்பு திருப்பியளிக்கப்பட்டது. (கம்போடியா டுடே) பரணிடப்பட்டது 2016-01-24 at the வந்தவழி இயந்திரம்
- சனவரி 30 - ஜமேக்காவில் இசீக்கா தீநுண்மம் பாதித்த 4-வயதுக் குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளது. கொலொம்பியாவில் 2100 கர்ப்பிணிப் பெண்கள் சீக்கா வரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். (யூஎஸ்ஏ டுடே),(ராய்ட்டர்சு)
பெப்ரவரி 2016
- பிப்ரவரி 1 - 25 ஆண்டுகளாக மியான்மரில் மக்களாட்சிப் நடத்திய ஆங் சான் சூச்சி தேர்தலில் நின்று வெற்றிபெற்று பிரதமர் |பதவியேற்றார்.
2017
2018
2019
====சனவரி====
- சனவரி 1 – அமெரிக்காவில் காப்புரிமைச் சட்டங்கள் எதுவும் மாற்றப்பட மாட்டாது. 1923இல் வெளிவந்த அனைத்து ஆக்கங்களும் பொதுவுடைமையாக்கப்படும்.
மார்ச்
ஏப்ரல்
மே
- மே 11 முதல் மே 19 முடிய 2019 இந்தியப் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டது.
- மே 30 -நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை பதவியேற்றது.
சூலை
- சூலை 1 – உருமேனியாவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்.
- சூலை 31 - முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டது.
திசம்பர்
- திசம்பர் 26 - இந்நாளன்று சூரிய கிரகணம் ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதனை தெற்காசியாவில் காணலாம்.[17]
நாள் தெரியாதவை
- மீத்திறன் கணினிகளின் செயல்படு வேகம் 1 எக்சா ஃப்ளாபைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2019ஆம் ஆண்டிற்கான இரக்பி உலகக் கோப்பைப் போட்டிகள் சப்பானில் துவங்கும்.
பிறப்புகள்
இறப்புகள்
2010
- ஜனவரி 1 - பெ. சந்திரசேகரன், இலங்கை மலையக அரசியல்வாதி (பி. 1957)
- ஜனவரி 17 - ஜோதி பாசு, மேற்கு வங்க பொதுவுடமைவாதி (பி. 1914)
- பெப்ரவரி 9 - செல்லையா மெற்றாஸ்மயில், ஈழத்துக் கலைஞர் (பி. 1945)
- பெப்ரவரி 17 - மணிமேகலை இராமநாதன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை (பி. 1946)
- பெப்ரவரி 20 - சிறீதர் பிச்சையப்பா, ஈழத்து நாடக நடிகர் (பி. 1963)
- மார்ச் 20 - கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளப் பிரதமர் (பி. 1925)
- மார்ச் 23 - கானு சன்யால், இந்தியக் கம்யூனிசத் தலைவர் (பி. 1929)
- ஏப்ரல் 10 - லேக் காச்சின்ஸ்கி, போலந்து அரசுத்தலைவர் (பி. 1949)
- மே 5 - உமரு யராதுவா, நைஜீரியாவின் 13வது அரசுத்தலைவர் (பி. 1951)
- மே 17 - அனுராதா ரமணன், எழுத்தாளர்
- மே 18 - கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1932)
- ஆகத்து 22 - ஏ. கே. வீராசாமி, தமிழ்த் திரைப்பட நடிகர்
- ஆகத்து 23 - இரா. சாரங்கபாணி, தமிழறிஞர் (பி. 1925)
- செப்டம்பர் 8 - முரளி, தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1964)
- செப்டம்பர் 13 - ஆர். சூடாமணி, எழுத்தாளர் (பி. 1931)
- அக்டோபர் 8 - ரெ. சண்முகம், மலேசியக் கவிஞர், பாடகர் (பி. 1936)
- அக்டோபர் 9 - எஸ். எஸ். சந்திரன், திரைப்பட நடிகர்
- டிசம்பர் 3 - அநுத்தமா, எழுத்தாளர்
- டிசம்பர் 13 - திமிலை மகாலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1938)
- டிசம்பர் 13 - ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்கத் தூதுவர்
- டிசம்பர் 20 - கா. பொ. இரத்தினம், ஈழத்துத் தமிழ் அறிஞர்
- டிசம்பர் 23 - கே. கருணாகரன், முன்னாள் கேரள முதல்வர்
- டிசம்பர் 30 - பொபி ஃபாரெல், பாப் இசைப் பாடகர் (பி. 1949
2011
- சனவரி - அரியான்பொய்கை செல்லத்துரை, ஈழத்துக் கலைஞர்
- சனவரி 7 - சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (பி. 1941)
- சனவரி 22 - அஸ்லம் கொகுகர், பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் (பி. 1920)
- சனவரி 24 - பீம்சென் ஜோஷி, இந்துஸ்தானி இசைப் பாடகர் (பி. 1922)
- பெப்ரவரி 20 - மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர்
- ஏப்ரல் 6 - கல்பகம் சுவாமிநாதன், வீணை இசைக்கலைஞர் (பி. 1922)
- ஏப்ரல் 6 - சுஜாதா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1952)
- ஏப்ரல் 20 - ர. சு. நல்லபெருமாள், தமிழ் எழுத்தாளர்
- ஏப்ரல் 24 - சத்திய சாயி பாபா, ஆன்மிக குரு (பி, 1926)
- மே 1 - உசாமா பின் லாதின், அல்கைதா தலைவர் (பி. 1957)
- மே 1 - அலெக்ஸ், தமிழ்த் திரைப்பட நடிகர்
- மே 4 - கி. கஸ்தூரிரங்கன், தமிழக எழுத்தாளர் (பி. 1933)
- மே 11 - ஆ. ச. தம்பையா, தமிழக மருத்துவர் (பி. 1924)
- மே 21 - சுவாமி அஜராத்மானந்தா, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மட முதல்வர் (பி. 1950)
- சூன் 3 - இலியாசு காசுமீரி, அல்கைதா உறுப்பினர் (பி. 1964)
- சூலை 6 - கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1932)
- சூலை 8 - கா. கலியபெருமாள், மலேசியத் தமிழறிஞர் (பி. 1937)
- செப்டம்பர் 18 - டி. கே. கோவிந்த ராவ் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1929)
2012
- சனவரி 2 - கே. ஜே. சரசா, பரதநாட்டியக் கலைஞர்
- சனவரி 8 - அடிகளாசிரியர், தமிழறிஞர் (பி. 1910)
- சனவரி 9 - எஸ். எம். அன்சார், ஈழத்துக் கவிஞர்
- சனவரி 17 - எம். எஸ். பொன்னுத்தாய், நாதசுரக் கலைஞர்
- சனவரி 20 - எட்டா ஜேம்சு, அமெரிக்கப் பாடகர் (பி. 1938)
- சனவரி 26 - பாரூக் மரைக்காயர், தமிழக அரசியல்வாதி (பி. 1937)
- சனவரி 30 - இடிச்சப்புளி செல்வராசு, நகைச்சுவை நடிகர்
- பெப்ரவரி 1 - விஸ்லவா சிம்போர்ஸ்கா, போலந்து நோபல் கவிஞர் (பி. 1923)
- பெப்ரவரி 5 - தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர் (பி. 1938)
- பெப்ரவரி 9 - ஹெப்சிபா ஜேசுதாசன், தமிழக எழுத்தாளர்
- பெப்ரவரி 11 - விட்னி ஊசுட்டன், அமெரிக்க நடிகை (பி. 1963)
- பெப்ரவரி 20 - எஸ். என். லட்சுமி, நடிகை (பி. 1934)
- பெப்ரவரி 20 - ரா. கணபதி, எழுத்தாளர், தமிழறிஞர்
- பெப்ரவரி 21 - முத்துராஜா, நகைச்சுவை நடிகர்
- மார்ச் 10 - பிராங்க் செர்வுட் ரோலண்ட், அமெரிக்க நோபல் வேதியியலாளர் (பி. 1927)
- மார்ச் 11 - த. ஆனந்தமயில், ஈழத்து எழுத்தாளர் (பி. 1947)
- மார்ச் 21 - யாழூர் துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1946)
- மார்ச் 23 - இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர் (பி. 1940)
- ஏப்ரல் 1 - எஸ். பி. முத்துக்குமரன், தமிழக அரசியல்வாதி (பி. 1968)
- ஏப்ரல் 2 - எம். சரோஜா, நடிகை
- ஏப்ரல் 4 - கிருஷ்ணா டாவின்சி, எழுத்தாளர், நடிகர் (பி. 1968)
- ஏப்ரல் 10 - என். வரதராஜன், தமிழக அரசியல்வாதி (பி. 1924)
- ஏப்ரல் 19 - நூரானியா ஹசன், இலங்கை வானொலி அறிவிப்பாளர் (பி. 1964)
- ஏப்ரல் 20 - சண்முகம் சிவலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1936)
- மே 1 - சண்முகசுந்தரி, நடிகை
- மே 5 - இராய் படையாச்சி, தென்னாப்பிரிக்கத் தமிழ் அரசியல்வாதி (பி. 1950)
- மே 24 - பாலாம்பிகை நடராசா, ஈழத்து எழுத்தாளர்
- மே 25 - திலீப், நடிகர்
- சூன் 5 - ரே பிராட்பரி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1920)
- சூன் 12 - எலினோர் ஒசுட்ரொம், அமெரிக்க நோபல் பொருளியல் நிபுணர் (பி. 1933)
- சூன் 14 - காகா இராதாகிருஷ்ணன், நகைச்சுவை நடிகர்
- சூன் 19 - ராபின் மெக்கிலாசன், ஆங்கிலேயத் தமிழறிஞர்
- சூலை 8 - ஏ. எஸ். ராகவன், தமிழக எழுத்தாளர் (பி. 1928)
- சூலை 12 - தாரா சிங், மற்போர் வீரர் (பி. 1928]]
- சூலை 12 - மா. ஆண்டோ பீட்டர், மென்பொருள் இயக்குனர் (பி. 1967)
- சூலை 16 - இசுடீபன் கோவே, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1932)
- சூலை 18 - ராஜேஷ் கன்னா, இந்தி நடிகர் (பி. 1942)
- சூலை 22 - டொன் பொஸ்கோ, இலங்கை நடிகர்
- சூலை 23 - இலட்சுமி சாகல், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1914)
- சூலை 23 - சாலி றைட், அமெரிக்க விண்வெளிவீரர் (பி. 1951)
- சூலை 24 - ஜோன் அட்டா மில்ஸ், கானா அதிபர் (பி. 1944)
- ஆகத்து 2 - அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
- ஆகத்து 18 - ரா. கி. ரங்கராஜன், தமிழக எழுத்தாளர், பி. 1927)
- ஆகத்து 25 - நீல் ஆம்ஸ்ட்றோங், அமெரிக்க விண்வெளிவீரர் (பி. 1930)
- ஆகத்து 26 - த. சரவணத் தமிழன், தமிழறிஞர்
- செப்டம்பர் 9 - சங்கர் சங்கரமூர்த்தி, பிபிசி தமிழோசை ஒலிபரப்பாளர்
- செப்டம்பர் 16 - லூசு மோகன், நகைச்சுவை நடிகர் (பி. 1928)
- அக்டோபர் 1 - எரிக் ஹாப்ஸ்பாம், பிரித்தானிய மார்க்சிய வரலாற்றாளர் (பி. 1917)
- அக்டோபர் 6 - ம. ரா. போ. குருசாமி, தமிழறிஞர் (பி. 1922)
- அக்டோபர் 7 - ஏ. ஜெகன்னாதன், இயக்குனர்
- அக்டோபர் 15 - நொரடோம் சீயனூக், கம்போடிய அரசர் (பி. 1922)
- அக்டோபர் 21 - யஷ் சோப்ரா, இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1932)
- நவம்பர் 4 - ஜேக்கப் சகாயகுமார் அருணி, சமையல்கலை நிபுணர் (பி. 1974)
- நவம்பர் 17 - பால் தாக்கரே, இந்திய அரசியல்வாதி (பி. 1926)
- நவம்பர் 30 - ஐ. கே. குஜரால், 12வது இந்தியப் பிரதமர் (பி. 1919)
- டிசம்பர் 5 - ஒசுக்கார் நிமேயெர், பிரேசில் கட்டிடக்கலை நிபுணர் (பி. 1907)
- டிசம்பர் 11 - ரவி சங்கர், இந்திய சித்தார் நிபுணர் (பி. 1920)
- டிசம்பர் 13 - கர்ணன், ஒளிப்பதிவாளர், இயக்குநர்
- டிசம்பர் 28 - எஸ். செல்வசேகரன், ஈழத்து வானொலிக் கலைஞர், நாடக நடிகர்
2013
- சனவரி 12- -கை டி அல்விஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1959)
- சனவரி 21 - எம். எஸ். உதயமூர்த்தி, எழுத்தாளர்
- பெப்ரவரி 9 - அஃப்சல் குரு, இந்தியத் தீவிரவாதி
- மார்ச் 5 - ராஜசுலோசனா, நடிகை (பி. 1935)
- மார்ச் 5 - ம. பார்வதிநாதசிவம், ஈழத்துப் புலவர் (பி. 1936)
- மார்ச் 5 - ஊகோ சாவெசு, வெனிசுவேலா அரசுத்தலைவர் (பி. 1954)
- மார்ச் 20 - சில்லூர் இரகுமான், வங்காளதேச அரசுத்தலைவர் (பி. 1929)
- ஏப்ரல் 8 - மார்கரெட் தாட்சர், பிரித்தானியப் பிரதமர் (பி. 1925)
- ஏப்ரல் 10 - ராபர்ட் எட்வர்ட்சு, நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய மருத்துவர் (பி. 1925)
- ஏப்ரல் 14 - பி. பி. ஸ்ரீனிவாஸ், பின்னணிப் பாடகர் (பி. 1930)
- ஏப்ரல் 17 - டி. கே. ராமமூர்த்தி, இசையமைப்பாளர் (பி. 1922)
- ஏப்ரல் 22 - லால்குடி ஜெயராமன், வயலின் இசைக்கலைஞர் (பி. 1930)
- மே 25 - டி. எம். சௌந்தரராஜன், பின்னணிப் பாடகர் (பி. 1923)
- மே 29 - ஜயலத் ஜயவர்தன, இலங்கை அரசியல்வாதி (பி. 1953)
- சூன் 9 - கே. டி. பிரான்சிஸ், இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (பி. 1939).
- சூலை 2 - டக்லஸ் எங்கல்பர்ட், அமெரிகக் கண்டுபிடிப்பாளர் (பி. 1925)
- சூலை 12 - அமர் கோ. போசு, அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1929)
- சூலை 15 - எம். கே. ஆத்மநாதன், திரைப்பட இசையமைப்பாளர்
- சூலை 18 - வாலி, கவிஞர் (பி. 1931)
- ஆகத்து 15 - செல்லையா பொன்னத்துரை, இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (பி. 1935).
- செப்டம்பர் 2 - ரொனால்ட் கோஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1910)
- அக்டோபர் 1 - டாம் கிளான்சி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1947)
- அக்டோபர் 4 - வோ இங்குயென் கியாப், வியட்நாமிய ஜெனரல் (பி. 1911)
- நவம்பர் 17 - டோரிஸ் லெசிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1919)
- நவம்பர் 19 - பிரடெரிக் சேனர், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய வேதியியலாளர் (பி. 1918)
- டிசம்பர் 5 - நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்கக் கறுப்பினத் தலைவர் (பி. 1918)
- நவம்பர் 10 - புஷ்பா தங்கதுரை, எழுத்தாளர் (பி. 1931]])
- டிசம்பர் 14 - பீட்டர் ஓ டூல், பிரித்தானிய ஐரிய நடிகர் (பி. 1932)
- நவம்பர் 29 - பாலகுமாரன் மகாதேவா, இலங்கை முன்னாள் அரச அதிகாரி (பி. 1921)
- டிசம்பர் 19 - டேவிட் ராஜேந்திரன், ஈழத்து நாடக நடிகர் (பி. 1945)
- டிசம்பர் 23 - மிக்கைல் கலாசுனிக்கோவ், உருசிய கண்டுபிடிப்பாளர் (பி. 1919)
- டிசம்பர் 30 - கோ. நம்மாழ்வார், இயற்கை ஆர்வலர் (பி. 1938)
2014
- சனவரி 3 - ம. சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பேராசிரியர் (பி. 1954)
- சனவரி 5 - எய்சேபியோ, போர்த்துக்கீச காற்பந்து வீரர் (பி. 1942)
- சனவரி 11 - ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (பி. 1928)
- சனவரி 12 - அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1935)
- சனவரி 13 - அஞ்சலிதேவி, திரைப்பட நடிகை (பி. 1927)
- சனவரி 16 - ஹிரூ ஒனோடா, சப்பானிய இராணுவசாதிகாரி (பி. 1922)
- சனவரி 16 - சிவயோகமலர் ஜெயக்குமார், ஈழத்துப் பெண் எழுத்தாளர்
- சனவரி 17 - சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (பி. 1931)
- சனவரி 19 - ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா, ஈழத்து மானிடவியலாளர், பேராசிரியர் (பி. 1929)
- சனவரி 22 - அ. நாகேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1924)
- சனவரி 23 - எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (பி. 1953)
- சனவரி 27 - ஆர். ஏ. பத்மநாபன், தமிழக ஊடகவியலாளர்
- பெப்ரவரி 2 - பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர் (பி. 1967)
- பெப்ரவரி 8 - பிரேம்ஜி ஞானசுந்தரம் முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1930)
- பெப்ரவரி 13 - பாலுமகேந்திரா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் (பி. 1939)
- பெப்ரவரி 17 - ஆர். கே. ஸ்ரீகண்டன், கருநாடக இசைப் பாடகர் (பி. 1920)
- பெப்ரவரி 25 - பாக்கோ தே லூசீயா, எசுப்பானிய இசைக்கலைஞர் (பி. 1947)
- பெப்ரவரி 26 - கே. எஸ். பாலச்சந்திரன், ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர் (பி. 1944)
- பெப்ரவரி 27 - ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (பி. 1929)
- மார்ச் 7 - பாலாஜி, திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்
- மார்ச் 20 - குஷ்வந்த் சிங், இந்திய எழுத்தாளர் (பி. 1915)
- மார்ச் 25 - தி. க. சிவசங்கரன், மார்க்சிய திறனாய்வாளர் (பி. 1925)
- ஏப்ரல் 17 - கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (பி. 1927)
- ஏப்ரல் 17: கர்பால் சிங், மலேசிய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1940)
- மே 14 - சுவாமி சித்ரூபானந்தா, பருத்தித்துறை இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரம நிறுவனர்
- மே 17 - சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்
- மே 21 - ஆர். உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1922)
- சூன் 2 - துரைசாமி சைமன் லூர்துசாமி, கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் (பி. 1924)
- சூன் 3 - கோபிநாத் முண்டே, இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1949)
- சூன் 12 - வாண்டுமாமா, குழந்தை எழுத்தாளர் (பி. 1925)
- சூன் 12 - கொடுக்காப்புளி செல்வராஜ், நகைச்சுவை நடிகர்
- சூலை 7 - எதுவார்து செவர்துநாத்சே, ஜார்ஜியாவின் முன்னாள் அரசுத் தலைவர் (பி. 1928)
- சூலை 10 - சோரா சேகல், இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1912)
- சூலை 13 - நதீன் கோர்டிமர், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (பி. 1923)
- சூலை 17 - சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (பி. 1976)
- சூலை 20 - தண்டபாணி, தமிழ்த் திரைப்பட நடிகர்
- சூலை 23 - சி. நயினார் முகம்மது, தமிழறிஞர், எழுத்தாளர்
- சூலை 29 - ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், இலங்கைத் தமிழ் ஒலிபரப்பாளர்
- சூலை 29 - ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1952)
- சூலை 31 - சாரல்நாடன், ஈழத்து எழுத்தாளர்
- ஆகத்து 11 - ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1951)
- ஆகத்து 19 - அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (பி. 1933)
- ஆகத்து 20 - பி. கே. எஸ். அய்யங்கார், யோகா ஆசிரியர் (பி. 1918)
- ஆகத்து 22 - யூ. ஆர். அனந்தமூர்த்தி, கன்னட எழுத்தாளர் (பி. 1932)
- ஆகத்து 24 - ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (பி. 1923)
- ஆகத்து 27 - விக்டர் இசுடெங்கர், அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர் (பி. 1935)
- ஆகத்து 30 - பிபன் சந்திரா, இந்திய வரலாற்றறிஞர் (பி. 1928)
- ஆகத்து 31 - சத்திராசு லட்சுமி நாராயணா, தெலுங்குத் திரைப்பட இயக்குனர், ஓவியர் (பி. 1933)
- செப்டம்பர் 1 - பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (பி. 1922)
- செப்டம்பர் 2 - நோமன் கோர்டன், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1911)
- செப்டம்பர் 3 - ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (பி. 1930)
- செப்டம்பர் 7 - சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (பி. 1929)
- செப்டம்பர் 19 - உ. ஸ்ரீநிவாஸ், மேண்டலின் இசைக் கலைஞர் (பி. 1969)
- செப்டம்பர் 29 - வாரன் அண்டர்சன், யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் (பி. 1921)
- அக்டோபர் 2 - பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. 1923)
- அக்டோபர் 14 - காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1931)
- அக்டோபர் 20 - ராஜம் கிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1925)
- அக்டோபர் 21 - கஃப் விட்லம், ஆத்திரேலியப் பிரதமர் (பி. 1916)
- அக்டோபர் 24 - எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1928)
- அக்டோபர் 24 - தேனுகா, கலை, இலக்கிய விமரிசகர்
- அக்டோபர் 28 - மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் அரசுத்தலைவர் (பி. 1937)
- நவம்பர் 8 - வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1933)
- நவம்பர் 10 - எம். எஸ். எஸ். பாண்டியன், சமூக ஆய்வாளர், பேராசிரியர்
- நவம்பர் 18 - சி. ருத்ரைய்யா, தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1947)
- நவம்பர் 23 - செல்வா கனகநாயகம், பேராசிரியர், எழுத்தாளர்
- நவம்பர் 24 - முரளி தியோரா, இந்திய அரசியல்வாதி (பி. 1937)
- நவம்பர் 26 - எஸ். பொன்னுத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)
- நவம்பர் 27 - பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1988)
- டிசம்பர் 4 - வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் (பி. 1914)
- டிசம்பர் 8 - நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (பி. 1927)
- டிசம்பர் 19 - எஸ். பாலசுப்பிரமணியன், திரைப்பட தயாரிப்பாளர், விகடன் குழும உரிமையாளர் (பி. 1936)
- டிசம்பர் 23 - கே. பாலச்சந்தர், திரைப்பட இயக்குனர் (பி. 1930)
2015
- சனவரி 19 - ரஜ்னி கோத்தாரி, அரசியல் அறிஞர் (பி. 1928)
- சனவரி 23 - அப்துல்லா, சவூதி அரேபிய மன்னர் (பி. 1924)
- சனவரி 24 - வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1925)
- சனவரி 26 - ஆர். கே. லட்சுமண், கேலிச் சித்திர ஓவியர் (பி. 1921)
- பெப்ரவரி 4 - யாழ்ப்பாணம் சின்னமணி, ஈழத்து வில்லிசைக் கலைஞர் (பி. 1936)
- பெப்ரவரி 5 - கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1933)
- பெப்ரவரி 24 - ஐ. மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமையாளர், இதழாளர் (பி. 1917)
- பெப்ரவரி 25 - அ. வின்சென்ட், திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)
- மார்ச் 1 - யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. 1926)
- மார்ச் 6 - கிஷோர், தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1978)
- மார்ச் 8 - கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஈழ விடுதலைப் போராளி (பி. 1953)
- மார்ச் 8 - வினோத் மேத்தா, இந்தியப் பத்திரிகையாளர் (பி. 1941)
- மார்ச் 16 - தோடகொப்பலு காரியப்பா இரவி, இந்திய ஆட்சிப் பணியாளர் (பி. 1979)
- மார்ச் 17 - பாப் ஆப்பிள்யார்ட், இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் (பி. 1924)
- மார்ச் 20 - மால்கம் பிரேசர், ஆத்திரேலியாவின் முன்னாள் பிரதமர் (பி. 1930)
- மார்ச் 23 - லீ குவான் யூ, சிங்கப்பூரின் நிறுவனரும், முதலாவது பிரதமரும் (பி. 1923)
- ஏப்ரல் 7 - கமலினி செல்வராஜன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)
- ஏப்ரல் 8 - ஜெயகாந்தன், எழுத்தாளர் (பி. 1934)
- ஏப்ரல் 8 - நாகூர் அனிபா, பாடகர் (பி. 1925)
- ஏப்ரல் 10 - ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், விவரணையாளர் (பி. 1930)
- ஏப்ரல் 13 - கூன்டர் கிராசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1927)
- ஏப்ரல் 27 - க. அருணாசலம், ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946)
- ஏப்ரல் 29 - மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (பி. 1981)
- ஏப்ரல் 29 - கோபுலு, தமிழக ஓவியர் (பி. 1924)
- மே 18 - அருணா சான்பாக், இந்திய செவிலியர், வன்புணர்ச்சிக்குள்ளானவர்.
- மே 21 - டேவிட் பிளேக், இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் (பி. 1925)
- மே 23 - ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கணிதவியலாளர் (பி. 1928)
- மே 30 - அஸ்மத் ரனா, பாக்கித்தானிய துடுப்பாட்டக்காரர் (பி. 1951)
- சூன் 2 - சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழ்றிஞர் (பி. 1941)
- சூலை 27 - ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர், அணு அறிவியலாளர் (பி. 1931)
- செப்டம்பர் 6 - உ. இராதாகிருஷ்ணன், ஈழத்து வயலின் கலைஞர் (பி. 1943)
- செப்டம்பர் 9 - கந்தையா குணரத்தினம், இயற்பியலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் (பி. 1934)
- செப்டம்பர் 11 - ஜோசப் ராஜேந்திரன், ஈழத்து மெல்லிசைப் பாடகர்
- செப்டம்பர் 13 - பிரயன் குளோஸ், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1931)
- செப்டம்பர் 14 - கௌதம நீலாம்பரன், தமிழக எழுத்தாளர் (பி. 1948)
- செப்டம்பர் 14 - இந்திக குணவர்தனா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)
- அக்டோபர் 3 - ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி (பி. 1936)
- அக்டோபர் 5 - திருமாவளவன், ஈழத்துக் கவிஞர் (பி. 1955)
- அக்டோபர் 7 - ஹசன் ஜமீல், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1952)
- அக்டோபர் 9 - என். ரமணி, புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934)
- அக்டோபர் 9 - ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1937)
- அக்டோபர் 10 - மனோரமா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1937)
- அக்டோபர் 10 - ரிச்சர்டு ஃகெக், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1931)
- அக்டோபர் 11 - எஸ். ஏ. டேவிட், ஈழத்துக் கட்டிடக் கலைஞர், காந்தியவாதி (பி. 1924)
- அக்டோபர் 13 - கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950)
- அக்டோபர் 18 - தமிழினி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி (பி. 1972)
- அக்டோபர் 21 - வெங்கட் சாமிநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்
- நவம்பர் 1 - ஆ. வேலுப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1936)
- நவம்பர் 3 - டொம் கிரவெனி, இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1927)
- நவம்பர் 8 - மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (பி. 1942)
- நவம்பர் 9 - சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
- நவம்பர் 14 - கே. எஸ். கோபாலகிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1929)
- நவம்பர் 17 - பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (பி. 1920)
- நவம்பர் 18 - கா. மீனாட்சிசுந்தரம், தமிழறிஞர் (பி. 1925)
- நவம்பர் 22 - சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி, போர்க்குற்றவாளி (பி. 1949)
- டிசம்பர் 1 - விக்கிரமன், பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1928)
- டிசம்பர் 2 - எம். ஏ. எம். ராமசாமி, தொழிலதிபர், அரசியல்வாதி (பி 1931)
- டிசம்பர் 13 - அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1954)
- டிசம்பர் 21 - ஹரி ஸ்ரீனிவாசன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (பி. 1929)
- டிசம்பர் 29 - தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)
2016
- சனவரி 1 – வில்மோஸ் சிக்மண்ட், அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர் (பி. 1930)
- சனவரி 2 – அ. பூ. பர்தன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1924)
- சனவரி 7 – முப்தி முகமது சயீத், இந்திய அரசியல்வாதி (பி. 1936)
- சனவரி 13 – ஜெ. எப். ஆர். ஜேக்கப், இந்தியத் தரைப்படை அதிகாரி (பி. 1923)
- சனவரி 16 – தி. ச. சின்னத்துரை, சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி (பி. 1930)
- சனவரி 17 – கரு. அழ. குணசேகரன், தமிழக எழுத்தாளர், நாட்டுப்பாடல் கலைஞர் (பி. 1955)
- சனவரி 19 – எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா, இலங்கை அரசியல்வாதி (பி. 1947)
- சனவரி 21 – மிருணாளினி சாராபாய், இந்திய நடனக் கலைஞர் (பி. 1918)
- பெப்ரவரி 9 – சுசில் கொய்ராலா, நேப்பாளத்தின் 37வது பிரதமர் (பி. 1939)
- பெப்ரவரி 11 – பூ. ம. செல்லத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1936)
- பெப்ரவரி 13 – ஏ. நடராஜன், தமிழக எழுத்தாளர் (பி. 1938)
- பெப்ரவரி 13 – ஓ. என். வி. குறுப்பு, மலையாளக் கவிஞர் (பி. 1931
- பெப்ரவரி 16 – புத்துருசு புத்துருசு காலீ, ஐநா பொதுச் செயலர், எகிப்திய அரசியல்வாதி (பி. 1922)
- பெப்ரவரி 17 – எஸ். ரி. அரசு, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1926)
- பெப்ரவரி 19 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலிய எழுத்தாளர், மெய்யியலாளர் (பி. 1932)
- பெப்ரவரி 19 – ஹார்ப்பர் லீ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)
- பெப்ரவரி 25 – ஆல்பிரட் இ மான், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1925)
- பெப்ரவரி 27 – விசுவா வர்ணபால, இலங்கை அரசியல்வாதி (பி. 1936)
- பெப்ரவரி 28 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)
- பெப்ரவரி 28 – குமரிமுத்து, தமிழத் திரைப்பட நடிகர்
- மார்ச் 6 – நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் முதல் பெண்மணி (பி. 1921)
- மார்ச் 12 – இலாயிடு சேப்ளி, அமெரிக்கக் கணிதவியலாளர் (b. 1923)
- மார்ச் 22 – ராப் ஃபோர்ட், கனடிய அரசியல்வாதி (பி. 1969)
- மார்ச் 24 – யோகன் கிரையொஃப், டச்சு கால்பந்து வீரர் (பி. 1947)
- ஏப்ரல் 21 – பிரின்சு, அமெரிக்கப் பாடகர் (பி. 1958)
- சூன் 3 – முகம்மது அலி, அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர் (பி. 1942)
- சூன் 10 – கிறிஸ்டினா கிரிம்மி, அமெரிக்க பாடகர் (பி. 1994)
- சூலை 2 – எலீ வீசல், நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1928)
- சூலை 4 – அப்பாஸ் கியரோஸ்தமி, ஈரானிய இயக்குநர் (பி. 1940)
- சூலை 28 – மகாசுவேதா தேவி, இந்திய செயற்பாட்டாளர், எழுத்தாளர் (பி. 1926)
- ஆகத்து 22 – செல்லப்பன் ராமநாதன், சிங்கப்பூரின் 6வது குடியரசுத்தலைவர் (பி. 1924)
- செப்டம்பர் 28 – சிமோன் பெரெஸ், நோபல் பரிசு பெற்ற இசுரேல் பிரதமர் (பி. 1923)
- அக்டோபர் 13 – பூமிபால் அதுல்யாதெச், தாய்லாந்து மன்னர் (பி. 1927)
- அக்டோபர் 20 – ஜூன்கோ டபெய், சப்பானிய மலையேறி (பி. 1939)
- நவம்பர் 25 – பிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் 17வது அரசுத்தலைவர் (பி. 1926)
- டிசம்பர் 25 – வேரா உரூபின், அமெரிக்க வானியலாளர் (பி. 1928)
- டிசம்பர் 27 – இரத்தினசிறி விக்கிரமநாயக்க, இலங்கைப் பிரதமர் (பி. 1933)
அரசியலும் போர்களும்
பன்னாட்டுப் போர்கள்
- பயங்கரவாதத்துக்கு எதிரான போர் - 2001 முதல் இன்று வரை
- ஆப்கானித்தான் போர் - [18][19]
2001 முதல் இன்று வரை
- ஈராக் போர் - 2003-2010 (2010 ஆகத்து 19 இல் அமெரிக்கப் போர்ப் படையினர் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறினர்.)
- அரபு-இசுரேலியப் பிரச்சினை - 20ம் நூற்றாண்டு - இன்று வரை
உள்நாட்டுப் போர்கள்
- மெக்சிக்கோவில் போதைப் பொருளுக்கெதிரான போர் (2006–இன்று வரை)
- வட மேற்குப் பாக்கித்தான் போர் (2004–இன்று வரை)
- சோமாலியாப் போர் (2009 – இன்று வரை)
- சாட் போர் (2005–இன்றுவரை)
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை