2013
ஆண்டு 2013 (MMXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2013ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 13ஆம் ஆண்டு மற்றும் 21ஆம் நூற்றாண்டின் 13ஆம் ஆண்டாகும். மேலும் 2010களின் நான்காம் ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: |
|
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2013 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2013 MMXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 2044 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2766 |
அர்மீனிய நாட்காட்டி | 1462 ԹՎ ՌՆԿԲ |
சீன நாட்காட்டி | 4709-4710 |
எபிரேய நாட்காட்டி | 5772-5773 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 2068-2069 1935-1936 5114-5115 |
இரானிய நாட்காட்டி | 1391-1392 |
இசுலாமிய நாட்காட்டி | 1434 – 1435 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 25 (平成25年) |
வட கொரிய நாட்காட்டி | 102 |
ரூனிக் நாட்காட்டி | 2263 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4346 |
நிகழ்வுகள்
- சனவரி 11 - வடக்கு மாலியில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக பிரெஞ்சுப் படையினர் தமது ஐந்து-மாத படை நடவடிக்கையை ஆரம்பித்தனர்.[1]
- பெப்ரவரி 15 - உருசியாவின் மத்திய ஊரல் பகுதியில் செல்யாபின்ஸ்க் நகரில் எரிவிண்மீன் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்வில் கட்டடங்கள் சேதமடைந்ததில் நானூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.[2]
- பெப்ரவரி 28 - திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தார்[3]
- மார்ச் 13 - கர்தினால் பிரான்சிசு 266வது திருத்தந்தையாக தேர்த்ந்டுக்கப்பட்டார்.[4]
- மார்ச் 24 - மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போராளிகள் தலைநகர் பாங்கியைக் கைப்பற்றியதை அடுத்து அரசுத்தலைவர் பிரான்சுவா பொசிசே காங்கோவிற்கு தப்பி ஓடினார்.[5]
- ஏப்ரல் 15 - 2013 பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்புக்கள்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பாஸ்டன் மாரத்தான் நிகழ்வில் குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர்.[6]
- ஏப்ரல் 24 - டாக்கா நகரின் சாவார் உள் மாவட்டம் அருகே மாடிக் குடியிருப்புகள் இடிந்து வீழ்ந்ததில் 1,129 பேர் கொல்லப்பட்டனர். 2500 பேர் காயமடைந்தனர்.[7]
- மே 27 - கனடா நாட்டின் பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய பனியில் மூடியிருந்த கடல் பாசித்தாவரம் உயிர்த்தெழுந்தது.[8]
- ஜூன் 14-30 - இந்தியாவின் உத்தராகண்டம், இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் 5,700 பேர் கொல்லப்பட்டனர்.[9]
- ஜூலை 1 - குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் 28வது உறுப்பு நாடாக இணைந்து கொண்டது.[10]
- சூலை 3 - எகிப்தின் அரசுத்தலைவர் முகம்மது முர்சி இராணுவப் புரட்சியை அடுத்து பதவி இழந்தார்.[11]
- அக்டோபர் 18 – சவூதி அரேபியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் உறுப்பினராக இணைய மறுத்து விட்டது.
- நவம்பர் 8 - பிலிப்பீன்சு, வியட்நாமில் சூறாவளி ஹையான் தாக்கியதில் 6,149 பேர் கொல்லப்பட்டனர்.[12]
- டிசம்பர் 10 - லத்தீன் அமெரிக்க நாடான உருகுவை அந்த நாட்டில் போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கியது.
- டிசம்பர் 14 - சீனாவின் சாங் ஈ 3 விண்கலம் நிலாவில் தரையிறங்கியது.[13]
இலங்கை நிகழ்வுகள்
- சனவரி 8 - சர்ச்சைக்குரிய திவி நெகும சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது.
- சனவரி 11 - இலங்கை மீயுயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்காக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- மார்ச் 21 - இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா சபையில் 25 / 13 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
- மார்ச் 26 - இலங்கை வானொலிக்கூடான தனது சேவைகளை பிபிசி நிறுத்துவதாக அறிவித்தது.
- ஏப்ரல் 3 - கிளிநொச்சியில் உள்ள உதயன் பத்திரிகைப் பணிமனை தாக்கப்பட்டது. பலர் காயமடைந்தனர்.
- ஏப்ரல் 13 - யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை நிறுவனம் தாக்கப்பட்டது. அச்சியந்திரம் தீக்கிரையாக்கப்பட்டது.
- மே 12 - மகாசென் சூறாவளி வடக்கு இலங்கையைத் தாக்கியதில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 7 பேர் கொல்லப்படனர், 3,881 பேர் இடம்பெயர்ந்தனர்.
- சூலை 5 - திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006: 5 மாணவர்கள் படுகொலை தொடர்பில் 12 படையினர் கைது செய்யப்பட்டனர்.
- ஆகத்து 25 - ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தமது 7 நாள் இலங்கைப் பயணத்தை ஆரம்பித்தார்.
- செப்டம்பர் 14 - இலங்கையில் வடக்குப் பகுதி தொடருந்து சேவை ஓமந்தை முதல் கிளிநொச்சி வரை நீடிக்கப்பட்டது.
- செப்டம்பர் 21 - இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபையைக் கைப்பற்றியது.
- அக்டோபர் 3 - பிரபாகரனின் புதுக்குடியிருப்பு வீடு படையினரால் தகர்க்கப்பட்டது.
- அக்டோபர் 7 - இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013: க. வி. விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக அதிபர் மகிந்த ராசபக்ச முன்னிலையில் பதவியேற்ரார்.
- அக்டோபர் 27 - இ-03 அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
- அக்டோபர் 31 - இலங்கைப் படையினரால் கொல்லப்பட்ட இசைப்பிரியா தொடர்பான பல மூல ஆவணங்களை சேனல் 4 வெளியிட்டது.
- நவம்பர் 15 - பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு 2013 கொழும்பில் ஆரம்பமானது. இந்திய, கனேடிய, மொரீசியசுப் பிரதமர்கள் பங்குபற்றவில்லை.
- நவம்பர் 15 - பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் யாழ்ப்பாணம் சென்றார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் யாழ்ப்பாணம் சென்ற முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இவராவார்.
- டிசம்பர் 20 - மன்னார் திருக்கேதீச்சரம் கோவிலுக்கு அருகில் பெரும் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
- டிசம்பர் 29 - கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டார்.
இறப்புகள்
- சனவரி 12- -கை டி அல்விஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1959)
- சனவரி 21 - எம். எஸ். உதயமூர்த்தி, எழுத்தாளர்
- பெப்ரவரி 9 - அஃப்சல் குரு, இந்தியத் தீவிரவாதி
- மார்ச் 5 - ராஜசுலோசனா, நடிகை (பி. 1935)
- மார்ச் 5 - ம. பார்வதிநாதசிவம், ஈழத்துப் புலவர் (பி. 1936)
- மார்ச் 5 - ஊகோ சாவெசு, வெனிசுவேலா அரசுத்தலைவர் (பி. 1954)
- மார்ச் 20 - சில்லூர் இரகுமான், வங்காளதேச அரசுத்தலைவர் (பி. 1929)
- ஏப்ரல் 8 - மார்கரெட் தாட்சர், பிரித்தானியப் பிரதமர் (பி. 1925)
- ஏப்ரல் 10 - ராபர்ட் எட்வர்ட்சு, நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய மருத்துவர் (பி. 1925)
- ஏப்ரல் 14 - பி. பி. ஸ்ரீனிவாஸ், பின்னணிப் பாடகர் (பி. 1930)
- ஏப்ரல் 17 - டி. கே. ராமமூர்த்தி, இசையமைப்பாளர் (பி. 1922)
- ஏப்ரல் 22 - லால்குடி ஜெயராமன், வயலின் இசைக்கலைஞர் (பி. 1930)
- மே 25 - டி. எம். சௌந்தரராஜன், பின்னணிப் பாடகர் (பி. 1923)
- மே 29 - ஜயலத் ஜயவர்தன, இலங்கை அரசியல்வாதி (பி. 1953)
- சூன் 9 - கே. டி. பிரான்சிஸ், இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (பி. 1939).
- சூலை 2 - டக்லஸ் எங்கல்பர்ட், அமெரிகக் கண்டுபிடிப்பாளர் (பி. 1925)
- சூலை 12 - அமர் கோ. போசு, அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1929)
- சூலை 15 - எம். கே. ஆத்மநாதன், திரைப்பட இசையமைப்பாளர்
- சூலை 18 - வாலி, கவிஞர் (பி. 1931)
- ஆகத்து 15 - செல்லையா பொன்னத்துரை, இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (பி. 1935).
- செப்டம்பர் 2 - ரொனால்ட் கோஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1910)
- அக்டோபர் 1 - டாம் கிளான்சி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1947)
- அக்டோபர் 4 - வோ இங்குயென் கியாப், வியட்நாமிய ஜெனரல் (பி. 1911)
- நவம்பர் 17 - டோரிஸ் லெசிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1919)
- நவம்பர் 19 - பிரடெரிக் சேனர், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய வேதியியலாளர் (பி. 1918)
- டிசம்பர் 5 - நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்கக் கறுப்பினத் தலைவர் (பி. 1918)
- நவம்பர் 10 - புஷ்பா தங்கதுரை, எழுத்தாளர் (பி. 1931]])
- டிசம்பர் 14 - பீட்டர் ஓ டூல், பிரித்தானிய ஐரிய நடிகர் (பி. 1932)
- நவம்பர் 29 - பாலகுமாரன் மகாதேவா, இலங்கை முன்னாள் அரச அதிகாரி (பி. 1921)
- டிசம்பர் 19 - டேவிட் ராஜேந்திரன், ஈழத்து நாடக நடிகர் (பி. 1945)
- டிசம்பர் 23 - மிக்கைல் கலாசுனிக்கோவ், உருசிய கண்டுபிடிப்பாளர் (பி. 1919)
- டிசம்பர் 30 - கோ. நம்மாழ்வார், இயற்கை ஆர்வலர் (பி. 1938)
2013 நாட்காட்டி
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை