கொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசி ஆய்வு
கோவிட்-19 தடுப்பூசி 2019–20 கொரோனாவைரசுத் தொற்று இதுவரை கண்டுபிடிக்ப்படவில்லை ஆனால் தடுப்பூசி உருவாக்க பல முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன.[1]
முந்தைய கொரோனா வைரசுத் தடுப்பூசி முயற்சிகள்
இதுவரை பல தடுப்பூசிகள் பறவைகளில் இருந்தும் விலங்குகளினால் ஏற்படும் கோராேனா வைரசுத் தடுப்பூசிள் இருக்கின்றன.[2]
மனிதர்களைப் பாதிக்கும் கொரோனவிரிடே (Coronaviridae) வைரசுகளுக்கான தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முந்தைய முயற்சிகள் தீவிர கடிய மூச்சியக்க கூட்டறிகுறி (Severe acute respiratory syndrome என்பதன் ஆங்கிலச் சுருக்கம் சார்சு) மற்றும் அரபுநாடுகளில் அறியப்பட்ட சுவாச நோய்க்குறி (MERS) [3] மற்றும் சார்சு [4] க்கு எதிரான தடுப்பூசிகள் மனிதரல்லாத விலங்கு மாதிரிகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, சார்சுக்கு முழுமையாக குணமடைய செய்யும் அல்லது பாதுகாப்பு தடுப்பூசியும் இல்லை. அனால் மனிதர்களுக்கு பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.[5][6]
2020 முயற்சிகள்
சார்சு SARS-CoV-2 2019 ஆண்டின் இறுதியில் கோவிட்-19 என்று பெயரிடப்பட்டது.[7] 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மிகப்பெரிய தொற்றுநோயாக பரவியது. அதன் காரணமாக தடுப்பூசியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 கொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசிகளை உருவாக்க பல நிறுவனங்கள் சுமார் 35 நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன, மார்ச் 2020 நிலவரப்படி சுமார் 300 மருத்துவ ஆய்வுகள் நடந்து வருகின்றன. கோவிஷீல்டு, கொரோனாவேக், சைனோபார்மின் 2 தடுப்பூசிகள், மார்டர்னா-1273, பிஎன்டி162பி2ஆகிய தடுப்பூசிகள் மூன்றாவது கட்ட சோதனையில் இருக்கின்றன. இந்தத் தடுப்பூசிகள் வெற்றிகரமாக 2கட்டம் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியும் டி செல்களும் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் பேருக்கு செலுத்தி சோதிக்கிற மூன்றாம் கட்ட சோதனையும் வெற்றி கண்டுவிட்டால் போதும் கொரோனா வைரஸ் தொற்றை விரட்டியடிக்கும் நிலைக்கு நெருங்கி விட்டதாக பொருள் [8]
மருத்துவ பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன
- அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் கழகம் (NIAID) மற்றும் நவீன (Moderna) உடன் இணைந்து RNA vaccine தடுப்பூசி உருவாக்க திட்டமிட்டு முதல் கட்ட ஆய்வுகள் நிறைவடைந்துள்ளது. 16 மார்ச் 2020 அன்று மனித ஆய்வு தொடங்கியுள்ளது.
முன்கூட்டிய ஆராய்ச்சிகள்
மரபணு வரிசைகள் பகுப்பாய்வு
கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி முயற்சியில் 'பிரண்டியர்ஸ் இன் மைக்ரோபயாஜி' பத்திரிக்கையில் வெளியாகியுள்ள தகவல்:-உலகமெங்கும் இருந்து பல்வேறு பரிசோதனைக் கூடங்களில் பிரித்தெடுக்கப்பட்ட 48 ஆயிரத்து 635 கொரோனா வைரஸ் மரபணு வரிசைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. உலகின் அனைத்து கண்டங்களுக்கும் பயணித்து பரவியுள்ள இந்த வைரஸ் மாற்றங்களை இத்தாலி நாட்டில் உள்ள போலோக்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வரைபடமாக்கியுள்ளனர். இதுபற்றி அந்த விஞ்ஞானிகள் கூறும்போது தங்களது பகுப்பாய்வில் இந்த கொரோனா வைரஸ்கள் சிறிய மாற்றம் அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு மாதிரியில் 7 மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவான காய்ச்சல் இரு மடங்குக்கும் அதிகமாகிற மாறுபடுகின்ற விகிதத்தை கொண்டுள்ளன என்று அந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். போலோக்னா பல்கலைக்கழக பேராசிரியர் பெடரிகோ ஜியோர்கி இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் ஏற்கனவே மனிதர்களை பாதிக்கும் வகையில் உகந்ததாக உள்ளது. மேலும் இது அதன் குறைந்த பரிணாம மாற்றத்தை கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம் கொரோனா வைரஸ்க்கு எதிராக உருவாக்குகிற தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அனைத்து கொரோனா வைரஸ் திரிபுகளுக்கும் எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் [9]
சில நிறுவனங்களின் பெயர்கள்
- ஆஸ்திரேலியாவில், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் [10]
- கனடாவின் சஸ்காட்செவன் பல்கலைக்கழகத்தின் [11][12]
- சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் [13]
- ஹாங்காங் பல்கலைக்கழகம் [14]
- ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி ஆராய்ச்சிக்கான எட்வர்ட் ஜென்னர் நிறுவனம் [15]
- புனித லூயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் [16]
- கோபனாவன் பல்கலைக்கழகம், ஐரோப்பிய ஆணையத்தின் நிதியுதவியுடன் [17]
உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசி
12 ஆகத்து 2020 அன்று உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசியை உருசியா கண்டுபிடித்து பதிவு செய்ததாக தெரிவித்துள்ளது. முதல் தடுப்பூசியை உருசியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.[18]
வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள்
சமூக வலைதளங்களில் கோவிட்-19 2019–20 கொரோனாவைரசுத் தொற்று தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடித்ததாகவும் அது மருந்துகள் கிடைப்பதாகவும் பதிவுகள் செய்யப்படுகிறது.[19][20]