அப்துல்ரசாக் குர்னா
அப்துல்ரசாக் குர்னா (Abdulrazak Gurnah; பிறப்பு: 20 திசம்பர் 1948) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார். இவர் 1960களில் சான்சிபார் நாட்டில் இருந்து சான்சிபார் புரட்சியின் போது வெளியேறி அகதியாக ஐக்கிய இராச்சியத்தில் குடியேறினார்.[1] இவர் 1994 இல் எழுதிய சொர்க்கம் என்ற புதினம் மான் புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[2][3][4][5]
அப்துல்ரசாக் குர்னா Abdulrazak Gurnah | |
---|---|
குர்னா (மே 2009) | |
பிறப்பு | அப்துல்ரசாக் 20 திசம்பர் 1948 சான்சிபார் (இன்றைய தான்சானியா) |
கல்வி | கான்டர்பரி கிறைஸ்ட் சர்ச் பல்கலைக்கழகம் (இளங்கலை) கெண்ட் பல்கலைக்கழகம் (முதுநிலை, முனைவர்) |
வகை | புதினம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2021) |
வாழ்க்கைக் குறிப்பு
அப்துல்ரசாக் குர்னா 1948 திசம்பர் 20 இல்[6] இன்றைய தான்சானியாவில் உள்ள சான்சிபார் சுல்தானகத்தில் பிறந்தார்.[7] சான்சிபார் புரட்சியின் போது அரபு மக்களுக்கெதிரான துன்புறுத்தலை அடுத்து, இவர் தனது 18-வது அகவையில் நாட்டை விட்டு வெளியேறினார்.[8][9] 1968 இல் இவர் ஏதிலியாக இங்கிலாந்து வந்து சேர்ந்தார்.[10][11]
இங்கிலாந்து கான்டர்பரி கிறைஸ்ட் சர்ச் கல்லூரியில் கல்வி கற்று இலண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்..[12] பின்னர் கெண்ட் பல்கலைக்கழகத்தில் 1982 இல் மேற்கு ஆப்பிரிக்கப் புதினங்களின் விமர்சனத்தின் அளவுகோல் என்பதில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[7][13] 1980 முதல் 1983 வரை நைஜீரியாவில் உள்ள பயேரோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் இளைப்பாறும் வரை கெண்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[8]
விருதுகளும் சிறப்புகளும்
- குர்னா 2006 இல் இலக்கியத்துக்கான அரசக் கழகத்தில் ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14]
- 2021 அக்டோபர் 7 இல் இவருக்கு 2021 இற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு "குடியேற்றவியத்தின் விளைவுகள், வளைகுடா நாடுகளில் கலாச்சாரங்கள் மற்றும் கண்டங்களுக்கிடையேயான ஏதிலிகளின் தலைவிதி ஆகியவற்றில் போக்குகளுக்காக" அறிவிக்கப்பட்டது.[2][3][4]
கருப்பொருள்
குர்னாவின் பெரும்பாலான படைப்புகள் கிழக்கு ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.[15] இவரது புதினங்களில் ஒருவரைத் தவிர கதாநாயகர்கள் அனைவரும் சான்சிபாரில் பிறந்தவர்கள்.[16] குர்னாவின் புதினங்கள் கிழக்கு ஆப்பிரிக்க கதாநாயகர்களை அவர்களின் பரந்த சர்வதேச சூழலில் வைக்கின்றன என்று இலக்கிய விமர்சகர் புரூஸ் கிங் வாதிடுகிறார்.[17] எழுத்தாளர் ஐ. சாந்தன் தனது 'உள்ளங்கையில் உலக இலக்கியம்' (2010) என்ற நூலில் "குர்ணாவின் 'அமைதியை நாடுதல்' என்ற புதினம் இடப்பெயர்வு, பண்பாட்டு அடையாளங்கள் போன்றவற்றைப் பேசுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
- Hand, Felicity (2012). "Becoming Foreign: Tropes of Migrant Identity in Three Novels by Abdulrazak Gurnah" (in en). Metaphor and Diaspora in Contemporary Writing. Palgrave Macmillan. பக். 39–58. doi:10.1057/9780230358454_3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-349-33956-3.
- King, Bruce (2006). "Abdulrazak Gurnah and Hanif Kureishi: Failed Revolutions". The Contemporary British Novel Since 1980. New York: Palgrave Macmillan. பக். 85–94. doi:10.1007/978-1-349-73717-8_8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-349-73717-8. இணையக் கணினி நூலக மையம்:1104713636.
- Lavery, Charné (May 2013). "White-washed Minarets and Slimy Gutters: Abdulrazak Gurnah, Narrative Form and Indian Ocean Space". English Studies in Africa 56 (1): 117–127. doi:10.1080/00138398.2013.780686. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-8398. https://archive.org/details/sim_english-studies-in-africa_2013-05_56_1/page/117.
வெளி இணைப்புகள்
- Breitinger, Eckhard. "Gurnah, Abdulrazak S". Contemporary Novelists.
- Jones, Nisha (2005). "Abdulrazak Gurnah in conversation". Wasafiri, 20:46, 37-42. எஆசு:10.1080/02690050508589982.
- "Gurnah, Abdulrazak S.". Contemporary Authors. 153. Gale. 2007. பக். 134–136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4144-1017-3. இணையக் கணினி நூலக மையம்:507351992.