செருமன்விங்ஸ் விமானம் 9525
செருமன்விங்ஸ் விமானம் 9525 (Germanwings Flight 9525, 4U9525) என்பது பார்செலோனாவிலிருந்து தியூசல்டோர்ஃபு வரை செல்லும் செர்மன்விங்சு நிறுவனத்தால் இயக்கப்படும் பன்னாட்டு பயணிகள் வானூர்தியாகும். இது செருமனியின் லுஃப்தான்சா வானூர்தி நிறுவனத்தின் குறைந்த விலை வானூர்திப்பிரிவாகும். ஏர்பஸ் ஏ320-200 ரக வானூர்தி 2015 மார்ச்சு 24 அன்று பிரான்சில் ஆல்ப்ஸ் மலையில் நீசூ நகரின் வடமேற்கே 100 கிமீ தொலைவில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 144 பயணிகளும் 6 பணியாளர்களும் உயிரிழந்தனர்.[5][6][7]
மே, 2014இல் எடுக்கப்பட்ட விபத்தில் சிக்கிய வானூர்தியின் படம் | |
Occurrence சுருக்கம் | |
---|---|
நாள் | 24 மார்ச்சு 2015 |
இடம் | பிரான்சு ஆப்சு, தென்பிரான்சு[1] 44°16′48.3″N 6°26′19.5″E / 44.280083°N 6.438750°E |
பயணிகள் | 144[2] |
ஊழியர் | 6 (2 விமானிகள் உட்பட)[2][3] |
உயிரிழப்புகள் | 150 (நம்பப்படுவது)[4] |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | ஏர்பஸ் எ320-211 |
இயக்கம் | செர்மன்விங்ஸ் |
வானூர்தி பதிவு | D-AIPX |
பறப்பு புறப்பாடு | பார்சிலோனா எல் பிராட் வானூர்தி நிலையம், எசுப்பானியா |
சேருமிடம் | தியூசல்டோர்ஃபு வானூர்தி நிலையம், செருமனி |
இவ்விபத்து செருமன்விங்க்சு வானூர்தியின் துணை வானோடி 27-அகவையுள்ள அந்திரேயாசு லூபிட்சு வேண்டுமென்றே வானூர்தியை மலையில் மோதவிட்டுள்ளார் எனவும், இவர் மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் என்றும் பிரெஞ்சு மற்றும் செருமானிய வான்போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.[8]
பின்னணி
வானூர்தி
விபத்துக்குள்ளான ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த வானூர்தி 24-ஆண்டுகள் பழமையானதாகும். இது 1990 நவம்பர் 29 இல் தனது பறப்பை ஆரம்பித்தது.[9] மொத்தம் 58,300 பறப்பு மணித்தியாலங்களில் 46,700 தடவைகள் இது பறந்துள்ளது.[10]
வானோடிகள்
தேசியம் | எண். | மூலம் |
---|---|---|
செருமனி | 71 | [12] |
எசுப்பானியா | 51 | [13] |
அர்கெந்தீனா | 3 | [14] |
கசக்ஸ்தான் | 3 | [15] |
ஐக்கிய இராச்சியம் | 3 | [16] |
ஐக்கிய அமெரிக்கா | 3 | [17] |
ஆத்திரேலியா | 2 | [18] |
கொலம்பியா | 2 | [19] |
ஈரான் | 2 | [20] |
சப்பான் | 2 | [21] |
மெக்சிக்கோ | 2 | [22] |
மொரோக்கோ | 2 | [23] |
வெனிசுவேலா | 2 | [24] |
பெல்ஜியம் | 1 | [25] |
சிலி | 1 | [26] |
டென்மார்க் | 1 | [27] |
இசுரேல் | 1 | [28] |
நெதர்லாந்து | 1 | [29] |
மொத்தப் பயணிகள் | 150 | |
இரட்டைக் குடியுரிமை உடையோர் | 4 |
தலைமை வானோடி காப்டன் பாட்ரிக் சொன்டன்ஹைமர்,[30] 10 ஆண்டுகள் வரை (6000 பறப்பு மணிகள்) செருமன்விங்சு, லுஃப்தான்சா, கொன்டோர் சேவைகளின் வானோட்டியாகப் பணியாற்றியுள்ளார்.[30][31][32]
துணை வானோடி முதலாவது அதிகாரி அந்திரியாசு லூபிட்சு (27).[33][34] இவர் மனத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும்,[35] இதனால் 2009 ஆம் ஆண்டில் வானோடிப் பயிற்சியின் போது இவர் சில காலம் விடுமுறை எடுத்துக் கொண்டார்.[36] இவர் 630 பறப்பு மணிகள் பறந்த அனுபவம் உள்ளவர்.[37]
பயணிகள்
விபத்துக்குள்ளான வானூர்தியில் 144 பயணிகள் சென்றிருந்தனர். மொத்தம் 18 நாடுகளை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் செருமனியரும் எசுப்பானியரும் ஆவர். இவர்களில் சிலர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர்.[38]
பயணிகளில் 18 பேர் செருமானியப் பாடசாலை மாணவர்களும், 2 ஆசிரியர்களும் அடங்குவர். இவர்கள் பயிற்சிக்காக பார்செலோனா சென்று திரும்பியிருந்தனர்.[39][40] செருமனியைச் சேர்ந்த இரண்டு புகழ்பெற்ற ஒபேரா பாடகர்களும் பயணிகளில் அடங்குவர்.[41]
விபத்து
வானூர்தி 9295 பார்சிலோனாவின் எல் பிராட் வானூர்தி நிலையத்தில் 10:01:12 மஐநே (09:01.12 ஒஅநே) மணிக்கு புறப்பட்டது. தியூசல்டோர்ஃபு வானூர்தி நிலையத்திற்கு 1:39 மஐநே (10:39 ஒஅநே) வர வேண்டும். வானூர்தி புறப்பட குறிக்கப்பட்டிருந்த நேரம் 09:35 மஐநே (08:35 ஒஅநே).
பிரெஞ்சு வான் வழி போக்குவரத்து அதிகாரி வானூர்தி உயரத்தில் இருந்து கீழ் நோக்கி பயணித்த போது இன்னலில் இருந்ததாகவும் பின்பு வானூர்தியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
வேண்டுமென்றே வானூர்தி வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என நிபுணர்களால் நம்பப்படுகிறது.
காரணம்
இந்த வானூர்தி விபத்துக்கு துணை வானோடி அந்திரியாசு லூபிட்சு [42] காரணம் என்று கூறப்பட்டுள்ளது. முதல் வானோடி வானூர்தியின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும் படி முதல் வானோடியிடம் கூறுவதும் அதன் பின் அவரின் இருக்கை நகர்த்தப்படுவதும் பின்னர் அவர் கதவைத்தட்டும்போது இரண்டாவது வானோடி கதவை திறப்பது கேட்கப்படவில்லை என்றும் ஒலிப்பதிவுக்கருவியில் கேட்பதாக கூறப்படுகிறது.[43] இரண்டாவது கருப்புப்பெட்டி கண்டிபிடிக்கப்பட்டுள்ளது, அதன் படி அந்திரியாசு லூபிட்சு வானூர்தியை 100 அடிக்கு செல்லும்படி தானியங்கிக்கு கட்டளை கொடுத்துள்ளார் என்றும் தானியங்கியின் பல முறை வேகத்தை மாற்றி விரைவாக கீழிறங்கும் படி வைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.[44]