டெனிசு முக்வேகி (Denis Mukengere Mukwege, /mʊkˈweɪɡi/;[1] பிறப்பு: மார்ச் 1, 1955)[2][3] என்பவர் காங்கோவைச் சேர்ந்த பெண்நோயியலாளரும், மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். இவர் புக்காவு நகரில் பான்சி மருத்துவமனையை ஆரம்பித்து, அங்கு ஆயுதக்குழுக்களால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட காங்கோ பெண்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ளார்.[4] இரண்டாவது காங்கோ போர்க் காலத்தில் (1998 - 2003) இருந்து பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 10 சத்திர சிகிச்சைகள் வரை இவர் இங்கு மேற்கொண்டுள்ளார்.[4]வன்கலவியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களில் இவர் உலகில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.[5]
2018 ஆம் ஆண்டில், இவருக்கும், ஈராக்கைச் சேர்ந்த நாதியா முராத் என்பவருக்கும் "போர் மற்றும் ஆயுத மோதல்களில் பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான அவர்களின் முயற்சிகளுக்காக" அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[6]